தோசை

அ.முஹம்மது நிஜாமுத்தீன் எனது நண்பருக்கு வெளியூருக்கு வேலை மாற்றலாகிவிட்டது. முத‌ல் நாள்.வேலை முடிந்து திரும்பும்போது ரெஸ்டாரெண்டுக்குச் செ‌ன்று, தோசையும் காபியும் ஆர்டர் செய்தார். சர்வர் கொண்டுவந்து வைத்ததும், “தோசைக்கு சட்னியும் சாம்பாரும் வேண்டாம்; ஜீனி கொண்டுவாருங்கள்” என்றார் நண்பர். “தோசைக்கு ஜீனி கிடையாது, சட்னி, சாம்பார்தான்” என்றார் சர்வர். எனக்கு ஜீனிதான் வேண்டும் எ‌ன்று சண்டைபோட்டு வாங்கிசாப்பிட்டுவிட்டு வந்தார் நண்பர். இரண்டாம் நாள்.நண்பர் அதே ரெஸ்டாரெண்டுக்குச் சென்றார். நண்பரைப் பார்த்துவிட்ட Read more

மரண விழிம்பில் நான்

எழுதுகிறேன், மரணத்தை தழுவும் முன்; இதுவே கடைசி பதிவாகவும் எனது மரண ஓலையாகவும்……!! முகநூல்! இன்றைக்கிது உலகெங்கும் பரவி உள்ள ஓர் உன்னத, அதேசமயம் எளிய ஊடகம்…! இதுதான் இன்று என் உயிரை குடிக்க காரணமாகிறது…!! ” … நான் முகநூலுக்குள் நுழைகிறேன்(அழைத்து வரப்படுகிறேன்) முதற்முதல் அனுபவம் எனக்கு! அதுவரை கேள்வி-ஞானம் மட்டுமே இந்த முகநூல் பற்றிய பரிசயம். விஞ்ஞான வளர்ச்சி; இது கொஞ்சம் வளராமலே இருந்திருக்கலாம்! அல்லது என் Read more

அம்மாவின் ஆசை!

தெனாலிராமன் கதை மன்னர் கிருஷ்ண தேவராயருக்கு அவருடைய அம்மாவின் மேல் அளவு கடந்த பாசம். அவருடைய அம்மாவுக்கு வயதாகிவிட்டது. படுத்த படுக்கையாக இருந்தார். இனிமேல் அவர் பிழைப்பது கஷ்டம் என்பது மன்னருக்குத் தெரிந்துவிட்டது. அவர் தன் அம்மாவிடம் “உங்களுக்கு வாய்க்கு ருசியாக சாப்பிட என்ன வேணும் சொல்லுங்கள். நீங்கள் ஆசைப்படுவதை வாங்கித் தருகிறேன்” என்று கேட்டார். அவருடைய அம்மா, “எனக்கு மாம்பழம் சாப்பிடணும் போல இருக்கு” என்றார். அது மாம்பழ Read more

ஊர்விட்டு ஊர்சென்று …

சரவணன் … சென்னையில் வேலை பார்க்கும் இளைஞன். தன் கிராமத்திற்குச் சென்று “நான் சென்னையில் ஒரு வீடு வாங்கப்போகிறேன். 5 லட்சம் பணம் வேண்டும்” என்று தன் தந்தையிடம் கேட்டான். அதற்கு அவர், “இன்னும் உனக்குத் திருமணமே ஆகவில்லை அதற்குள் என்ன அவசரம்?” என்றார். இப்பொழுது வாங்கினால் 30 லட்சத்தில் வாங்கிவிடலாம் பிறகு வாங்கினால் குறைந்தது 60 லட்சம் தேவைப்படும். தினம் தினம் விலை ஏறி கொண்டே போகிறது என்றான். யோசித்த அப்பா, “சரியான முடிவு தான். ஆனால் நான் ஒரு விவசாயி Read more

கர்வம் வேண்டாமே …

பல ஊர்களுக்கும் யாத்திரை சென்ற பட்டிணத்தார் ஒரு ஊரில் தங்கினார். அவ்வூர் பணக்காரர் ஒருவர் பட்டிணத்தாரை தன் வீட்டிற்கு விருந்து சாப்பிட அழைத்தார். “இந்த ஊரிலேயே பெரிய பணக்காரன் நான் தான். நினைத்ததை சாதிக்கும் பலம் என்னிடம் இருக்கிறது. உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் கேளுங்கள்,” என்று பெருமையுடன் தன்னை அறிமுகப்படுத்தினார். சற்று யோசித்த பட்டிணதார் “ரொம்ப நல்லது. அப்படியானால் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டுமே!” என்று கேட்டார். Read more

ழகரக் கொலை

சினிமா ஸெட் கெட்டது – முதலிரவு அறை அட்டகாசமாக மலர்களாலும் பட்டு ஜரிகைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கட்டிலில் நுரை மெத்தையும் குஷன் திண்டுகளும் காத்திருந்தன. “ஒராள் ஒராள்” என்று கட்டிலுக்கு வாய் இருந்தால் குதிரை வண்டிக்காரன் மாதிரி கூவி இருக்கும். ஏனென்றால் கட்டிலில் ஒருத்தர்தான் – “ழ” பித்தன் என்ற பெயர் கொண்ட கீழைப் பெருமழை எழிலெழு கிழவோன் – மட்டும்தான் அமர்ந்திருந்தான். இன்னும் ஒருத்தருக்காக கட்டில் காத்திருந்தது. அந்த ஒருத்தர் Read more

தன்னைச் சுடும்

ஹேய்….இங்க பாரேன் கிரி….! மூணு மாசக் குழந்தையைக் கூட இந்த ‘மாண்டசரி ஸ்கூல்ல’ சேர்த்துக்கறாளாம். வெரி நைஸ்…இல்லபா … நல்லவேளையா இப்ப ..நம்ம கீட்ஸு க்கு நாளையோட அவன் பொறந்து நாலாவது மாசம் முடியப் போறது ..இன்னி வரைக்கும் இந்த ஹோர்டிங் அட்வெர்டைஸ்மென்ட் என் கண்ணுலயே படல பார்த்தியா..? டூ யு நோ திஸ் பிஃபோர் ரா….? நோ….பார்…….! தெரியாதுங்கறியா….? இல்ல ‘நோ பார்’னே சொல்றியா.. இல்ல பார்கவி தெரியாதுன்னு Read more

நன்றியுள்ள நாய்

ஒரு ஊரில் கந்தன் என்பவர் தன் மனைவியோடு வாழ்ந்து வந்தார், அவர் ஒரு விவசாயி, அவருக்கு குழந்தை இல்லை. ஆனால், அவர் ஒரு பெண் நாயை வளர்த்து வந்தார். அந்த நாய் அவர் மீது பாசமாக இருக்கும். அவர் சொன்னதை கேட்கும். அவர் எங்கு சென்றாலும் அவருடன் அவருடைய நாயும் செல்லும். அந்த நாயைக்கண்டாலே கந்தனின் மனைவிக்குப் பிடிக்காது. அடித்து விரட்டுவாள். திட்டித் தீர்ப்பாள். ஒருமுறை கந்தன் தன் வேலையை Read more

நாக தேவதை

ஒரு காலத்தில் வெள்ளை பாம்பு, பச்சை பாம்பு இரண்டும் இர்மை (Er-mei) என்ற மலையில் வாழ்ந்து வந்தன. அங்கு வாழ்ந்த காலத்தில் இந்த இரண்டு பாம்புகளுக்கும் மந்திர ஆற்றல் கிடைத்தது. அதனால் அவை தங்களை இரண்டு அழகிய இளம் பெண்களாக மாற்றிக்கொண்டன. இள மங்கையர்கள் இருவரும் ஹேங்ஷோன் என்ற நகருக்கு வந்து வசிக்கலானார்கள். அந்த நகரின் அழகான ஓரிடம் மேற்கு ஏரி. அங்கு இருவரும் அடிக்கடி சென்று பொழுதைக் கழிப்பது Read more

சமூக தளம் …

“எனக்கு அதுதான் காதல்ன்னு தோணிச்சு. அதுதான் இதுகெல்லாம் காரணமா மாறிடிச்சுன்னு நெனைக்கிறேன். எல்லார்கிட்டேயும் மன்னிப்புக் கேட்டேன். எல்லாரும் அவங்க மட்டும் நல்லவங்க போலேயும் நான் மட்டும் கெட்டவள் போலேயும் என்னை ரொம்ப உதாசினப் படுத்திட்டாங்க. எதோ தீராத நோய் வந்தது போலப் பார்க்கிறாங்க. நீ மட்டும்தான் குமுதா, எதுக்குடீ எங்கிட்ட மன்னிப்பு எல்லாம் கேட்கிற?. அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன்னு கேட்டே. கொஞ்சம் ஆறுதலா இருக்கு. ஒரு நாள் என் வீட்டிற்கு வற்றியா?”