தேசமான்ய பாரா தாஹீர்

பிரபல எழுத்தாளரும் ஊடகவியலாளரும் சமூகசேவையாளருமான மாவனல்லை பாரா தாஹீர் உடனான நேர்காணலோடு இவ்விதழில் உங்களை சந்திக்கிறோம். இலக்கியத்துறையில் பல சாதனைகளை நிகழ்த்தி இன்று வரை தொடர்ந்து இலக்கியத்திற்குப் பெரும் பங்காற்றிக்கொண்டிருக்கும் இவர் நூற்றுக்கணக்கான கவிதைகள் மற்றும் சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரின் சிறுகதைகள் மற்றும் கவிதைகள் தேசிய பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. சென்னையில் நடைபெற்ற உலக சாதனை விழாவில் 5000 மழலைப் பாடல்களை ஒரே நூலாக வெளியிடும் நிகழ்வில் தனது ஐம்பது Read more

உலகின் சரிபாதி பெண்

வணக்கம் தங்களைப் பற்றித் சுருக்கமாகக்கூற முடியுமா? ஆம் நான் அ.ல.முகைமினா. எழுத்தாளர், ஆசிரியர், கவிஞர் சமாதான நீதவான் மற்றும் அரசியல் வாதியாக சமூகத்துக்காக சமூக செயற்பாட்டாளராக, ஊடக வியலாளராக என்னை அர்ப்பணம் செய்து வருகிறேன். நேர்கண்டவர் தமிழ்நெஞ்சம் அமின் உங்களது ஆரம்ப பள்ளிப் பருவம் குறித்துக் கூறுங்களேன் ஆமாம் நான் குறிஞ்சாக் கேணி முன் பள்ளியில் 1985 முதல் சென்று கற்க ஆரம்பித்தேன். அப்போது வாகிட் சபுறுன்னிஸா ஆசிரியர் நன்றாகச் Read more

நக்கீரர் வழியில் பட்டுக்கோட்டை அ.த.பன்னீர்செல்வம்

பட்டுக்கோட்டை நகரில் புகழ் பூத்த தமிழ்க்குடும்பம் மீ. தங்கவேலனார் அவர்கள் குடும்பம் அந்தக் குடும்பத்தில் மூத்த தலைமகன் திரு அ.த. பன்னீர்செல்வம் அவர்கள் பட்டுக்கோட்டை நகரில் நக்கீரர் என்று பெயர் பெற்றவர் ஆய்வுச் சுடர் என்ற  பெருமைக்குரியவர்.. தலைமுறை தலைமுறையாக தமிழ் வளர்க்கும் பெருமிதம் குடும்பத்திற்கு உண்டு.. கவி முகில் தங்க அன்பு வல்லிஅவர்களின் மூத்த சகோதரர். தென்றல் கவி தமிழ்ச்சிட்டு சுந்தரபாண்டியன் அவர்களுடைய தாய்மாமன் என்பதும் குறிப்பிடத்தக்கது செங்கிஸ்கான் Read more

இலக்கிய வித்தகர் மஷூறா சுஹூறுத்தீன்

சம்மாந்துறையைப் பிறப்பிடமாகவும் தற்போது மருதமுனையை வசிப்பிடமாகவும் கொண்டவர் சித்தி மஷூறா சுஹூறுத்தீன். 1979 ல் மஷூறா ஏ மஜீத் என்ற பெயரில் வானொலியில் எழுதவாரம்பித்து இலங்கையின் தேசிய பத்திரிகைகள் அனைத்திலும் மற்றும் சஞ்சிகைகளிலும் எழுதியவர். தற்போது பல மின் சஞ்சிகைகளிலும் எழுதி வருகிறார். sithy mashoora suhurudeen என்ற தனது முகநூல் பக்கத்திலும் தனது படைப்புகளை பதிவேற்றி வருகிறார். கவிதை, சிறுகதை ,கட்டுரை, நாடகம் பாடல், வில்லுப்பாடல் ,தாளலயம் பேச்சு, Read more

வெண்பா வித்தகம்(ர்) கோவை லிங்கா

கோவை லிங்கா என்கிற சொக்கலிங்கம் ஐயா…. இன்று முகநூலில் எத்தனையோ மரபுப் பாவலர்கள் உலவி வந்தாலும்  பாவகைகளின் துல்லியங்களும் இலக்கணங்களும் நன்கு அறிந்து. யாப்பில் ஆழமான தேர்ச்சி பெற்றவர் கோவை லிங்கா ஆவார். இவரைப் பேட்டி காண்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஏடி.வரதராசன் நவம்பர் 2024 / 184 பக்கங்கள் கொண்ட இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும். வணக்கம் ஐயா? Read more

உலக கவியரங்கெங்கும் சரஸ்வதி பாஸ்கரன்

 நேர்கண்டவர் : தமிழ்செம்மல் இராம வேல்முருகன் வலங்கைமான்  உங்கள் சொந்த ஊர் எது ? பெற்றோரைப் பற்றிச் சொல்ல முடியுமா ?            என் சொந்த ஊர் – திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள உத்தமர் கோவில். ஆனால் நான் பிறந்தது ஆழியாரில் . என்  தாய்மாமாவும் பாட்டியும் ஆழியாரில் வசித்ததால் அங்குதான் நான் பிறந்தேன் .          அப்பா அரசு மேனிலைப் பள்ளியின் Read more

தெலுங்கானாவில் தமிழ் எழுத்தாளர் – மைதிலி சம்பத்

நேர்கண்டவர் : தமிழ்நெஞ்சம் அமின் மைதிலி சம்பத்: “வணக்கம் சார். நல்லா இருக்கீங்களா?” ஆசிரியர் திரு அமின்: “நல்லா இருக்கேன்மா. நீங்க எப்படி இருக்கீங்க?” “நல்லா இருக்கேன் சார். அயல் நாட்டிலிருந்து தமிழ் பத்திரிகை நடத்தி, தமிழ் வளர்த்து, தமிழ் எழுத்தாளர்களை வளர்த்து, தமிழே மூச்சாக நினைக்கும் உங்களுடைய தமிழ் பணிக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள். நீங்களே என்னை நேர்காணல் செய்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அதே சமயம் சற்று Read more

பாவலர் கண்ணதாச முருகன்

புகழ்வரினும் இகழ்வரினும்
பூதலமே எதிர்வரினும்
புகலென்றும் கண்ணணுக்கே!

கருவில் கலந்தாள் ககன விரிவாள்
திருவாள் உயிர்ப்பாள் தெற்காள் – தருவாள்
உருவால் வடிவாள் ஒலியால் இசையாள்
கருத்தாழ்த் தமிழைக் களி!

என,

உயிராய் மூச்சாய் உணர்வாய் உலகில் மூத்த இளையாள் தமிழன்னையை வணங்கி தமிழ்நெஞ்சம் வழங்கும் இந்த நேர்காணலைத் தொடங்குகிறேன்.

வணக்கம் வாழும் ஔவை அன்புவல்லி அம்மா. தமிழால் மூத்த தங்களால் இந்த நேர்காணலில் இல் இளையோன் கலந்து கொண்டதில் மற்றற்ற மகிழ்ச்சி அம்மா.

செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்

I மின்னிதழ் I செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம் இத்திங்கள் ஒரு மிகச்சிறந்த ஆளுமையாளரை நேர்காணல் செய்யவிருக்கிறோம். பள்ளிக்கூடங்களின் தாளாளர், ஒரு எழுபதாண்டு காலத் தமிழ்மன்றத்தின் தலைவர், பன்னாட்டு அரிமா சங்கத்தில்  தமிழில் நோக்கத்தை மொழிந்த அரிமா ஆளுநர், விளையாட்டு அமைப்புகளின் தலைவர், இலக்கியவாதிகளுக்கு விருதும் பரிசும் வழங்கிச் சிறப்பிக்கும் புரவலர் செஞ்சிலுவைச் சங்கப் பொறுப்பாளர் இவ்வாறு சமூகக்காவலர் , இலக்கியப்புரவலர், கல்வியாளர்,  விளையாட்டு ஆர்வலர் என்ற பல்வேறு முகங்கள் கொண்ட ஒரு ஆளுமையாளர் Read more

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம் உழைப்பாளர்களை உயர்த்துவோம் உழைப்பே என்றும் உயர்வாகும்! உடலை உறுதி ஆக்கிவிடும்! தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே தளரா உழைப்பின் பலனன்றோ! பிழைக்கும் ஏழை உடல்வருத்திப் பெரிதும் உழைப்பர் பசியுடனே! உழைப்போர் நலனைக் காத்திடுவோம்! உதவி செய்தே ஆதரிப்போம்! வயலில் உழைக்கும் விவசாயி வளத்தைச் சேர்க்கும் உழைப்பாளி! அயரா துழைக்கும் தொழிலாளி ஆற்றல் நாட்டின் உயர்வேதான்! முயற்சி கொண்டே உழைத்திடுவார்! முனைப்பாய்க் கடமை ஆற்றிடுவார்! இயற்கை வளத்தைக் காத்திடவே இணைந்தே Read more