கம்பன் கவிநயம்… தொடர் – 11

கம்பனின் கவியாற்றல் ஒரு வியப்புக்குறியாகவே இன்றளவும் உள்ளது. தமிழ் மொழியைக் கையாண்ட விதம், சொற்களை சொக்கட்டான் போல் விளையாடி கையில் எடுத்து கவிதைக்குள் பின்னி வைத்த அழகு வெறும் வார்த்தைகளால் நம்மால் சொல்ல முடியவில்லை. அவ்வளவு திறன்மிகு படைப்பு இராமாயண காவியம். இலக்கியம் என்று சொன்னால் இலங்கு பொருள் எடுத்தியம்பும் நயம் என்றே சொல்லலாம். மூக்கறுபட்ட சூர்ப்பனகை இலங்கைமாநகர் அடைந்து தனது சோகக் கதையை அண்ணன் இராவணனிடம் கூறும் போது Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 38

பாடல் – 38 தன்னை வியந்து தருக்கலுந் தாழ்வின்றிக் கொன்னே வெகுளி பெருக்கலும் – முன்னிய பல்பொருள் வெஃகுஞ் சிறுமையும் இம்மூன்றுஞ் செல்வ முடைக்கும் படை. (இ-ள்.) தன்னை – ஒருவன் தன்னை, வியந்து – (தானே) நன்கு மதித்து, தருக்கலும் – அகங்கரித்தலும்; தாழ்வு இன்றி – அடக்கம் இல்லாமல், கொன்னே – வீணாக, வெகுளி – சினத்தை, பெருக்கலும் – பெருகச் செய்தலும்; முன்னிய – கருதிய, Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 37

பாடல் – 37 குறளையுள் நட்பளவு தோன்றும் உறலினிய சால்பினிற் றோன்றுங் குடிமையும் – பால்போலுந் தூய்மையுட் டோன்றும் பிரமாணம் இம்மூன்றும் வாய்மை யுடையார் வழக்கு. (இ-ள்.) குறளையுள் – பொருட்சுருக்கத்தினால், நட்பு அளவு – ஒருவன் நட்பின் எல்லை, தோன்றும் – காணப்படும்; உறல் இனிய – பொருந்துதற்கு இனிய, சால்பினில் – (நற்குணச் செய்கைகளின்) நிறைவில், குடிமை – உயர்குடிப் பிறப்பின் தன்மை, தோன்றும் – விளங்கும்; Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 36

பாடல் – 36 ஊனுண் டுயிர்கட் கருளுடையே மென்பானுந் தானுடன்பா டின்றி வினையாக்கு மென்பானுங் தாமுறு வேள்வியிற் கொல்வானும் இம்மூவர் தாமறிவர் தாங்கண்ட வாறு. (இ-ள்.) ஊன் உண்டு – ஒன்றின் மாமிசத்தைத் தின்று, உயிர்கட்கு – உயிர்களிடத்தில், அருள் உடையேம் – தயவுடையோம், என்பானும் – என்று சொல்வானும்; தான் உடன்பாடு இன்றி – தான் (யாதொரு முயற்சிக்கும்) உடன்படாமல், வினை ஆக்கும் – ஊழ் (எல்லாம்) செய்யும், Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 35

பாடல் – 35 முந்நீர்த் திரையின் எழுந்தியங்கா மேதையும் நுண்ணூற் பெருங்கேள்வி நூற்கரை கண்டானும் மைந்நீர்மை இன்றி மயலறுப்பான் இம்மூவர் மெய்ந்நீர்மை மேனிற் பவர். (இ-ள்.) முந்நீர் – கடலில், திரை – அலைபோல, எழுந்து (தன்மனம்) எழுந்து, இயங்கா – அலையாத, மேதையும் – அறிவுடையவனும்; நுண் – நுட்பமாகிய, நூல் – சிந்தனையினாலும், பெரும் கேள்வி – மிகுதியாகிய கேள்வியினாலும், நூல்கரை – நூல்களின் முடிவை, கண்டானும் Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 34

பாடல் – 34 மூன்று கடன்கழித்த பார்ப்பானும் ஓர்ந்து முறைநிலை கோடா அரசுஞ் – சிறைநின்று அலவலை இல்லாக் குடியும்இம் மூவர் உலகம் எனப்படு வார். (இ-ள்.) மூன்று கடன் – மூவருக்குஞ் செய்யுங் கடன்களை, கழித்த – செய்து முடித்த, பார்ப்பானும் – அந்தணனும்; ஓர்ந்து – தன்கீழ் வாழ்வார் குற்றஞ் செய்தால் (அக்குற்றத்தை) நாடி; முறைநிலை – நீதி நிலையில், கோடா – வழுவாத, அரசும் – Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 33

பாடல் – 33 கோலஞ்சி வாழுங் குடியுங் குடிதழீஇ ஆலம்வீழ் போலும் அமைச்சனும் – வேலின் கடைமணிபோற் றிண்ணியான் காப்பும்இம் மூன்றும் படைவேந்தன் பற்று விடல். (இ-ள்.) கோல் அஞ்சி – (தன்) செங்கோலைப் பயந்து, வாழும் குடியும் – வாழ்கின்ற குடியும்; குடிதழீஇ – குடிகளைத் தழுவி, ஆலம் வீழ்போலும் – ஆலமரத்தின் விழுதைப்போல் (தாங்கவல்ல,) அமைச்சனும் – மந்திரியும், வேலின் – வேலினிடத்து, கடைமணி போல் – Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 32

பாடல் – 32 நுண்மொழி நோக்கிப் பொருள்கொளலும் நூற்கேலா வெண்மொழி வேண்டினுஞ் சொல்லாமை – நன்மொழியைச் சிற்றின மல்லார்கட் சொல்லலும் இம்மூன்றும் கற்றறிந்தார் பூண்ட கடன். (இ-ள்.) மொழி நோக்கி – (நூல்களில்) சொற்களை ஆராய்ந்து, நுண் பொருள் – நுட்பமாகிய பொருள்களை, கொளலும் – கொள்ளுதலும்; நூற்கு – நூல்களுக்கு, ஏலா – தகாத. வெண்மொழி – பயனற்ற சொற்களை, வேண்டினும் – பிறர் விரும்பினாலும், சொல்லாமை – Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 31

பாடல் – 31 பல்லவையுள் நல்லவை கற்றலும் பாத்துண்டாங் கில்லற முட்டா தியற்றலும் – வல்லிதின் தாளி னொருபொரு ளாக்கலும் இம்மூன்றுங் கேள்வியு ளெல்லாந் தலை. (இ-ள்.) பல்லவையுள் – பல நூல்களிலும், நல்லவை – நல்ல நூற் பொருள்களை, கற்றலும் – கற்றுணர்தலும்; பாத்து – (பிரமசாரி முதலிய பதின்மர்க்குப்) பகுத்துக் கொடுத்து, உண்டு – (தானும்) உண்டு, ஆங்கு – அந்நிலையில், இல்லறம் – இல்லாளோடு கூடிச் Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 30

பாடல் – 30 தன்னச்சிச் சென்றாரை யெள்ளா வொருவனும் மன்னிய செல்வத்துப் பொச்சாப்பு நீத்தானும் என்று மழுக்கா றிகந்தானும் இம்மூவர் நின்ற புகழுடை யார். (இ-ள்.) தன் நச்சி – தன்னை விரும்பி, சென்றாரை – அடைந்தவரை, எள்ளா ஒருவனும் – இகழாத ஒருவனும், மன்னிய – மிகுந்த, செல்வத்து – செல்வம் வந்த காலத்தில், பொச்சாப்பு – மறதியை, நீத்தானும் – நீக்கினவனும்; என்றும் – பிறரிடத்துப் பகைமை Read more