அவசியமற்ற சந்தேகம் ஆரோக்கியத்தை தருமா !?

மனிதனது வாழ்வில் மகிழ்வைத் தொலைத்து மனநிம்மதியை இழக்கச் செய்து மனதைக்குன்ற வைத்து ஒருவனை மனநோயாளியாகக்கூட ஆக்கிவிடும் சக்தியொன்று இருக்கிறது என்றால் அது இந்த பாழாப்போன சந்தேகமெனும் தீராத நோயாகத்தான் இருக்கமுடியும். அனுதினமும் ஒவ்வொருவரும் ஏதாவது ரீதியில் சந்தேகப்பட்டுக் கொண்டுதான் வாழ்நாளைக் கடத்திக் கொண்டு இருக்கிறார்கள். இவைகள் யாவும் நடைமுறை வாழ்வில் நிகழக் கூடிய சந்தேகங்களேயாகும். உதாரணமாகச் சொல்வதாயின் வீட்டைப் பூட்டிவிட்டோமா.? சமையல் கேஸை ஆஃப் செய்தோமா.? பாக்கிப் பணம் திரும்பப் Read more

கற்பு

இராமாயணத்தில் 60,000 மனைவியருடன் வாழ்ந்த தயரதனிடம் யாரவது உன் கற்பென்ன என்று வினவினரா? இல்லை தன் அரசனுக்காக போரிட்டு பெண்ணை வென்றுகொண்டுவந்த பீஷ்மரிடம் கேட்டார்களா? ,இன்னொருவருக்காக நீ எப்படி சுயம்வரத்திற்கு செல்லலாம் என்று? ஏனென்றால் திணிக்க பட்ட எதையும் இங்கே பெண்கள் பொறுத்து கொள்ளவேண்டும். நிழலை கூட பெண்கள் பார்ப்பது தவறென்ற காலம் மாறி சுயம்வரம் மூலம் மனதுக்குகந்தவனை பெண்கள் தேர்ந்தெடுக்க கூடிய நிலை வந்தது ஒருவகையில் சிறிய முன்னேற்றம் என்று கொள்ளலாம்.

பாபருக்கும், இராமருக்கும் பகைமை என்ன?

ஒருமுறை நான் இந்தியாவுக்குச் சென்றிருந்தபோது சென்னையிலிருந்து பாண்டிச்சேரிவரை திருவள்ளுவர் பஸ்ஸிலே பயணம் செய்ய நேரிட்டது. காலைநேரம். ஒருவன் தாம்பரம் வரை போக வேண்டுமென்று நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்தான். “ஏண்டா சாவு கிராக்கி பேமானி காலையில் நூறு ரூபா நோட்டைக் கொண்டு வந்திட்டியாடா, உனக்கெல்லாம் இதே பொழப்பாய் போச்சி. இறங்குடா வண்டியை விட்டுயு என்று வாய்க்கு வந்தபடி வசைமாறி பொழிந்தார் கண்டக்டர். அந்த பயணியைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. உடனே Read more

மார்பகங்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

டீன் ஏஜில் பிரா தேர்ந்தெடுக்கும்போது ‘கிச்’சென்று இறுகப் பிடிக்கும் சைஸாக இருக்கக் கூடாது. மார்பகம் பெரிதாக வளரும் வயது என்பதால், பிராவின் அளவுக்கு அடங்காத பகுதி, பிதுங்கியது போன்ற நிரந்தர ஷேப்புக்கு உள்ளாகிவிடும். அந்தந்த வயதில் மாறும் மார்பக அளவுக்கு ஏற்ப, பிரா சைஸை மாற்றிக் கொண்டே இருக்கவேண்டும்.

கனமான மார்புள்ளவர்களுக்கு வெயிட்டில் மார்பகம் சீக்கிரமே தழைய வாய்ப்புள்ளது. சரியான பிரா போடாவிட்டால் இந்தத் தொல்லை இன்னும் அதிகம். இவர்கள் போடும் பிரா கனமான மார்பகங்களை கொஞ்சம் தூக்கித் தரும்படியும், சரியாகப் பொருந்தும்படி கொஞ்சம் டைட்டாகவும் இருக்க வேண்டும்.

கவிதாயினி மதுமிதா

விக்கிரமாதித்யனின் அதிசய சிம்மாசனம் ஒரு நிலத்தில் புதைந்திருந்தது; காவலன் ஒருவன், அதன் மேல் நின்றான். அவனிடம் பரிவும் விருந்தோம்பலும் இன்னபிற நற்குணங்களும் நிறைந்திருந்தன. அந்தப் பீடத்திலிருந்து இறங்கினான்; மறுநொடி அந்த நற்குணங்கள் யாவும் அவனை விட்டு நீங்கின. இப்படி ஒரு கதை உண்டு. அது, உண்மையோ? பொய்யோ? இங்கே அதை ஒரு தொன்மக் குறியீடாய்க் கொள்வோம். ஒரு வகையில் காதலும் அந்தச் சிம்மாசனம் போலத்தான். காதலின் மேல் நிற்கும்போது நிற்பவர், Read more

அனிச்ச மலர்

நான் கஷ்டப்படும் போது விதிப்பயன் என்று விட்டு விடலாம். என்னுடைய ஒரு துளி கண்ணீரைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் அம்மா எனதாசை அம்மா. எனது முக வேறுபாட்டைக் கண்டவுடன் வாடிடும் அனிச்ச மலரல்லவோ அம்மா எனதாசை அம்மா. தனது உடலைக் கொத்தி தன் இரத்தத்தை உணவாக தன் குஞ்சுகளுக்கு தரும் அன்றில் பறவை போல் தன் வாழ்க்கையை தியாகம் செய்தவளல்லவோ அம்மா எனதாசை அம்மா. ஆயிரம் தவறுகள் செய்தாலும் Read more

மதமாற்றம் எண்ணங்களின் மாற்றம்

மதத்தைப் பின்பற்றுபவர்கள் பாவம் செய்ய அஞ்சவேண்டும். அடுத்தவனை அடிமைப்படுத்துவதற்குப் பயப்படவேண்டும். அரிவாள், கோடரி, கத்தி, வெடிகுண்டு போன்றவற்றை மனிதர்கள் மேல் பயன்படுத்துவது நரகம் செல்வதற்கான வழி என்று நம்பவேண்டும். நம்பி அவற்றைச் செய்யாமல் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு மனிதனும் சுய விருப்பு வெறுப்புகளோடு பிறந்திருக்கிறான். தன் குடும்ப சமுதாய மற்றும் நாட்டின் பழக்க வழக்கங்களால் தன்னைச் சில நிர்பந்தங்களுக்கு உள்ளாக்கிக்கொள்கிறான். சில நிர்பந்தங்கள் அவனுக்கு மகிழ்வினைத் தருகின்றன. சில நிர்பந்தங்கள் துயரத்தைத் தருகின்றன.

இயற்கையின் பேரழகு சிந்தும் ஷில்லாங்

இயற்கையின் பேரழகின் வெளிப்பாடுகளில் மனம் மயங்கும் அழகைப் பெற்றது ஷில்லாங். மேகாலயாவின் தலைநகரமான ஷில்லாங் பல ரசிக்கக்கூடிய வனப்புகளைக் கொண்டது. மணமேடையில் அமர்ந்திருக்கும் மணமகளின் முகத்திரை சற்றே விலக வெட்கி நாணுவதைப் போன்று, மேருகளின் மீது படர்ந்திருக்கும் மேகங்கள் காட்சித் தருகின்றன. மனதைக் கொள்ளையடிக்கும் மலைச் சிகரங்களில் ஊதா நிறம் படர்ந்துள்ளதையும் விரிந்து கிடக்கும் பல நிறப் பச்சை புல்வெளிகளையும் ரசித்துக் கொண்டே இருக்கத் தோன்றும். ஷில்லாங்கை சீனாவிலுள்ள ஷங்க்ரிலாவுக்கு Read more

மூவகை மக்கள்

சொல்லாமலே பெரியர் சொல்லிச் செய்வர் சிறியர்
சொல்லியும் செய்யார் கயவரே – நல்ல
குலமால வேற்கண்ணாய்! கூறுவமை நாடில்
பலா மாவைப் பாதிரியைப் பார்!

என்ற ஒளவைப்பாட்டியாரின் இப்பாடலின் கருத்தை அறிவது அவசியமல்லவா?

கவிதாயினி இளம்பிறை

கவிதை என்ற பெயரில் நிறைய வெளி வருகின்றன. அவை கவிதைகளா என்பது சிந்தனைக்குரியது. ஆனால், அதிக எண்ணிக்கையில் கவிதை எழுதும்போது கவிதைப் போக்குகள் சிலவற்றை நாம் காணலாம். சுமாராக எழுதத் தொடங்கிப் பட்டை தீட்டப்பெற்று மிகச் சிறப்பான கவிதைகள் எழுதுவோர் உண்டு. இது, ஏறுவரிசை. மிகச் சிறப்பாக எழுதத் தொடங்கி, அடுத்தடுத்த படைப்புகளில் அந்தச் சிறப்பைத் தொட முடியாமல் சுமாராகத் தேய்வோர் உண்டு. இது, இறங்குவரிசை. ஒருவகைக் கட்டமைப்பில் ஒரே மாதிரி அலைவரிசையில் சிலர் எழுதுவர். இது, தொடர்வரிசை. பொதுவாக மோசமாகவும் திடீரென நல்ல கவிதைகளும் சிலர் எழுதுவ துண்டு. இது, லாட்டரிச் சீட்டுப்போல. எப்போதாவது தான் பரிசு விழும். இதற்குக் கவிஞரின் திறமை காரணமில்லை. வசமாக வந்து மாட்டிக்கொள்ளும் சொற்களே காரணம். இந்த வகைகளில் இளம்பிறையை முதல் வகையில் சேர்க்கலாம்.