பனிமலையில் பிறந்தவளோ?
பளபளக்கும் பாவையிவள் பாதரசத்தில் குளித்தவளா? படபடக்கும் விழிகளோடு பனிமலையில் பிறந்தவளா? கூந்தலில் மல்லிகையைக் குடியிருக்க வைத்தவளே! காந்தமானக் கண்களிலே கவர்ந்திழுக்கும் கனிச்சுளையே! பாவாடைத் தாவணியில் பருவத்தைக் கட்டிவைத்து பூவாசம் வீசுகின்ற புதுப்பெண்ணும் நீதானோ? கண்ணாடி பார்க்கின்ற கன்னியுந்தன் பார்வையிலே முன்னழகு எல்லாமே முழுமையாய்த் தெரியுதடி! உன்மார்பில் ஊஞ்சலாடும் ஒற்றைமணி ஆரமுமே பெண்பார்க்க சொல்லுதடி பேரழகை அள்ளுதடி. பால்குடத்தில் நீந்திவரும் பனிநிலவாய் நீயிருக்க சேல்விழியின் துணையோடு செகமுழுதும் ஆள்பவளே!








