திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 3

பாடல் – 03 கல்லார்க்கு இன்னா ஒழுகலும், காழ்க் கொண்ட இல்லாளைக் கோலால் புடைத்தலும், இல்லம் சிறியாரைக் கொண்டு புகலும், – இம் மூன்றும் அறியாமையான் வரும் கேடு. (பொருள்) : கல்லார்க்கு – கல்லாதவர்களுடன் (கற்றியாதவார்), இன்னா – இனிமையாக (நட்பாக), ஒழுகலும் – இருப்பதும் (நடப்பதும்), காழ் கொண்ட – கற்புடையாள் (கற்பில் சிறந்த), இல்லாளை- மனைவியை(இல்லத்தை ஆள்பவள்), கோலால் – தடி கொண்டு, புடைத்தலும் – Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 2

பாடல் – 02 தன்குணங் குன்றாத் தகைமையும் தாவில்சீர் இன்குணத்தார் ஏவின செய்தலும் – நன்குணர்வின் நான்மறை யாளர் வழிச்செலவும் இம்மூன்றும் மேன்முறை யாளர் தொழில். (பொருள்): தன் குணம் – தனது (குடிப்பிறப்பின்) குணம், குன்றா – குன்றாமைக்கு (ஏதுவாகிய), தகைமையும் – ஒழுக்கமும், தா இல் – அழிதல் இல்லாத, சீர் – பெரும் புகழைதருகின்ற, இன் குணத்தார் – இனிய குணத்தையுடையோர், ஏவின – ஏவிய Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 1

நூல் பாடல் – 01 அருந்ததிக் கற்பினார் தோளும் திருந்திய தொல்குடியில் மாண்டார் தொடர்ச்சியும் – சொல்லின் அரில்அகற்றும் கேள்வியார் நட்புமிம் மூன்றும் திரிகடுகம் போலும் மருந்து. (பொருள்) : அருந்ததி – அருந்ததி போலும், கற்பினார் – கற்பையுடைய மகளிரது, தோளும் – தோள்களும், திருந்திய – குற்றமற்ற, தொல் – பழமையான, குடியில் – குடிப்பிறப்பில் (தோன்றி), மாண்டார் – மாட்சிமையடைந்தவரோடு, தொடர்ச்சியும் – கொள்ளும் நட்பும், Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும்

(காப்பு) கண்ணகல் ஞாலம் அளந்ததூஉம் காமருசீர்த் தண்ணறும் பூங்குருந்தம் சாய்த்ததூஉம் – நண்ணிய மாயச் சகடம் உதைத்ததூஉம் இம்மூன்றும் பூவைப்பூ வண்ணன் அடி. (பொருள்): கண் அகல் – இடம் அகன்ற, ஞாலம் – பூமியை, அளந்ததூஉம் – அளந்ததும், காமரு – விருப்பப்பட்ட, சீர் – சிறப்பையுடைய, தண் – குளிர்ச்சியும், நறும் – மணமும் (பொருந்திய), பூ குருந்தம் – மலர்களையுடைய குருந்த மரத்தை, சாய்த்ததூஉம் – Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும்

முன்னுரை தமிழ் மொழியாந் தாய்மொழி பல்லாயிரம் ஆண்டிகட்கு முன்னரே தோற்றமுற்றிலங்கும் உயர் தனிச் செம்மொழி. இதனைச் சங்கம் நிறுவி வளர்த்துக்கொள்ள காத்த பெருமை பழம்பதியாகிய பாண்டிய நாட்டரச்சராம் பாண்டியருக்கே உரியது. இங்ஙனம் பாண்டியர் நிறுவிய சங்கம் – முதல், இடை, கடை என மூன்றாகும். இவற்றில் மதுரையிலிருந்த கடைச்சங்கமிருந்தது தமிழாராய்ந்தவர்; சிறுமேதாவியார், சேந்தம்பூதனார், அறிவுடையானார், பெருங்குன்றூர்கிழார், இளந்திருமாறன், மதுரையாசிரியர் நல்லந்துவனார், மருதனிளநாயக்கனார், கணக்காயனார் மகனார் நக்கீரனார் முதலானவர். அவருளிட்டுப் பலர் Read more

முகத்தொகை

(தரவு கொச்சகக் கலிப்பா) புலர்பொழுது சூரியனை புள்ளினங்கள் எழுப்பிவிட       மலர்முகைகள் மடல்திறந்து மணம்வீசி மகிழ்ந்தாட செம்முளரி முருக்கவிழ்க்கும் ஞாயிற்றின் வருகையிலே       அம்மானை யாடிடவே அழகவளும் வந்தாளே. நற்றமிழின் சொல்லோச்சி நனிந்துவரும் நங்கையவள்       பொற்புடைய குணவதியாள் பொறுமைக்கு பெருமையவள் நற்குலத்து உதித்துவந்த நாணிலத்தின் சிறப்பவளே       வற்றாத அன்புடைத்த ஆரணங்கு அவளன்றோ. தமிழ்பூத்த நல்லுலகில் தங்கத்தின் பொலிவெனவே       அமிழ்தூறும் சொல்லாடி அரவணைக்கும் நறுமணமே கமழ்கின்ற பூவையவள் காதலிலே நிறைக்கின்றாள்       இமகரனி ளெம்பேனோ இமையாகி குளிர்ந்தாளே. கண்மணியாள் கவர்ந்திழுக்க காந்தளிதழ் விரலொக்க       விண்மீனாம் கருவிழிகள் விளையாடக் கண்டிடவே பொன்மணியாள் மலர்க்கூந்தல் மகிழாதோ மணம்வீசி       வண்டாடும் குழலியவள் குழையாட ஆடினளே. முன்பனியின் துளிதாங்கி முத்தாக ஒளிர்ந்திடுமே       மென்னிதழின் வண்ணத்தில் செங்கதிரோன் நாணிடவே கன்னிமகள் கனவுகளில் மருதாணி சிவப்பழகாய்       Read more

அவளென் அதிகாரம்

(கலிவெண்பா) சூல்கொண்ட வெங்கதிரோன் சுட்டெரிக்க நாற்புறமும் கால்பதிக்கத் தோன்றாக் கலன்போலே துன்புறுத்தப் பால்முகமோ வாடிடுமே பாவையவள் நாணத்தால் மால்மருகன் தாள்போல் மனம்குளிரும் சோலையிலே எல்லையிலா எண்ணங்கள் ஏடெடுத்துப் பாட்டெழுத ஓரா யிரமாகி ஓயாதக் கற்பனைகள் நேரே எழுந்தெழுந்து நெஞ்சத்தைப் பற்றிநின் றொன்றைவொன்றும் முன்நிற்க ஒன்றும் புரியாமல் நின்றுவிட்டேன்; பின்னர் நினைவெல்லாம் ஒன்றாகி மின்னல் ஒளிபோல மேலோங்கும் ஓருணர்ச்சி என்னுள் கருத்தாய் எழுந்து எழுதிடக்காண்; ஊற்றுப் புனல்போல உள்ளம் களிப்புற ஆற்றுப் Read more

அவளென் பா

விருத்தப்பா தென்றலுமே தீண்டிடவே சிலிர்கும் பூக்கள் ….. சிங்காரங் குறையாது சுரக்கும் தேனை சென்றமர்ந்து வண்டுகளும் சுவைக்கு மன்றோ ….. சிறகுகளால் மகரந்த சேர்க்கை பூவில்! தன்காம்பில் காய்கனிகள் தோன்ற பூக்கும் ….. தன்னிழலில் பசியாற உதவும் பாரீர்! என்னற்ற மலர்களெல்லாம் வாசம் வீச ….. என்னிதயம் புன்னகைக்க பூக்கள் போதும்.! தொட்டுமலர் தொடுத்தாளே என்றன் மங்கை ….. தோடிராகம் மீட்டிடுதே என்றன் மையல் வட்டுநிலா முகத்தினவள் காதல் சொல்லி Read more

அப்துல் கலாம்

(முதலாமாண்டு நினைவஞ்சலி :27/07/2015) விஞ்ஞானம் வென்றீரே; மனங்கள் யாவும் … விதைத்தவித்து விளைந்துநிற்க கண்டீ ரில்லை அஞ்சாமை அகற்றினீரே; அறிவுக் கண்ணை … அகத்தினிலே சுடர்விடவேச் செய்த நீவிர் நெஞ்சமெலாம் நிறைந்தமகான் கலாமென் போமே … நேர்படவே வாழ்த்துகாட்டி நெறிகள் சொல்லி மிஞ்சிநிற்கும் மனிதகுல மாண்பு நீரே … மின்னிமறைந் திடவல்ல வாழ்வும் என்றோய். விஞ்ஞான சிறப்பெல்லாம் உன்னைப் பாட … வீணாகா இளைஞர்கள் மனத்தில் நின்றாய் மஞ்சத்தின் பிடிமறந்து Read more