தொடர் – 49

இந்த தொடர்களின் வாயிலாக ஒரு ஹைக்கூவை சிறப்பாக எழுதுவது எப்படி.. தவிர்க்க வேண்டிய விசயங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொண்டிருப்பீர்கள்.. ஹைக்கூ பொதுவாக நமது அனுபவங்களே.

கண்டும் .. உணர்ந்தும் கொள்ளக் கூடிய விசயங்களைக் கவிதையாக நாம் வடிக்கும் போது அது ஆழ்ந்த பொருளை அங்கு விளைவிக்கிறதெனலாம்.

ஒரு ஓவியத்தில் வரையப்பட்ட விசயங்களை விட வரையாமல் விடப்படும் இடங்கள் அதிக வலிமையுடையதாக இருக்கும் என்பார்கள்.. அதைப் போலவே பேசிய வார்த்தைகளை விட பேசாத மௌனத்திற்கு அதிக வலிமை உண்டு என்பதும்.. இதுவே சூஃபி தத்துவத்திலும் சொல்லப்பட்டுள்ளது.

அதுபோலவே…ஹைக்கூவிலும் சொல்லும் காட்சிகளை விட சொல்லாமல் விடும் காட்சிகள் மிகவும் பேசும்..வாசிக்கும் வாசகனை இது பல்வேறு தளத்திற்கு இருந்தும் செல்லும்.

இங்கு நாம் கண்ணால் காணும் இரு காட்சிகளை எப்படி ஹைக்கூவாக மாற்றுவது என பார்ப்போம்.

காட்சி : 1..

தாய்பறவை ஒன்று தன் குஞ்சுகளுக்கு பறக்க கற்றுத் தரும் நிகழ்வினை நாம் கண்ணால் காண நேரிடுகிறது… இதை எப்படி ஹைக்கூவாக மாற்றுவது எனக் காணலாம்.

பரிதாபமாய் விழுகிறது

பறக்க எத்தனிக்கும் குஞ்சு அப்படித்தான் விழும்.. இல்லையா… இது முதலடி.

இனி.. இரண்டாவது அடி..

பறவை பறக்க எத்தனிக்கையில்

பரிதாபமாய் விழுகிறது

பறவை பறக்க எத்தனிக்கையில்..

இது நாம் கண்ட காட்சியை பதிவு செய்து விட்டோம்.. ஆனால் ஈற்றடி. .. எவரும் எதிர்பாரா ஒரு திருப்பத்தை கவிதையில் காட்ட வேண்டுமே… அது மூன்றடிகளையும் இணைத்து செல்ல வேண்டுமே.. இதை கவனியுங்கள்..

பரிதாபமாய் விழுகிறது
பறவை பறக்க எத்தனிக்கையில்
பார்ப்பவர் பார்வை..!

என எவரும் எதிர்பாரா ஒரு ஈற்றடியை தருகிறோம்.. ஆக பரிதாபமாய் விழுவது பறவை மட்டுமல்ல… பார்ப்பவர் பார்வையும் தான் என்பது ஒட்டு மொத்த கவிதையை வாசித்தால் புலனாகும்.

காட்சி : 2.

கோவில் ஒன்றுக்கு செல்கிறீர்கள்..அங்குள்ள குளத்தில் இறங்கி கால்களை கழுவியபின் கோவிலுக்குள் செல்ல எண்ணி..குளத்தில் இறங்குகிறீர்கள்.

இதை காட்சிப் படுத்த எண்ணிய ஹைக்கூவை இவ்வாறு அமைக்கலாம்.

குளம் முழுவதும்

நிரம்பி இருக்கின்றது

என இரண்டு அடிகளையும் நிறைவு செய்யும் போது… வாசகனுக்கு ஈற்றடியானது ” நீராகத் தான் ” இருக்கும் என எண்ணத் தோன்றும்… ஆனால் நாம் எதிர்பாரா முடிவினுக்காக… ஈற்றடியை இவ்வாறு அமைக்கிறோம்.

குளம் முழுவதும்
நிரம்பி இருக்கின்றது
தாமரை மலர்கள்.

இங்கு ஆகாயத் தாமரை… நெகிழி குப்பை..தேவையற்ற கழிவு என பல்வகையான சொற்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆக… ஹைக்கூவை எழுதும் போது நாம் கண்ட காட்சியை தெளிவாக படிப்பவர் உணரும் வண்ணம் பதிவு செய்திடல் வேண்டும்.. அக் கவிதையில் மாறுபட்ட இரு காட்சிகள் வருமாறு அமைத்திடல்  வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் எழுதும் ஹைக்கூ சிறப்பாக அமையும்.

இன்னும் வரும்… 

 முன் தொடர்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

மின்னிதழ்

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர் கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.