தொடர் – 50

ஒரு பயணி பேரூந்து நிலையத்தில் நின்றிருந்த ஒரு பேரூந்தில் ஏறியதும்..அருகிலிருந்த பயணியிடம் ” இந்த பேரூந்து எங்கே செல்கிறது..? ” எனக் கேட்டார்..அந்த பயணியும் சற்றே கிண்டலாக.. “நீங்கள் எங்கே செல்ல வேண்டும்..அதை சொல்லுங்கள் .” என்றாராம்.

உண்மை தானே.. நமக்கு எது தேவையோ அதை நாம் கேட்பதில்லை..

தேவையில்லாத பலவற்றைக் கேட்டு நம் நேரத்தையும்..காலத்தையும் விரயமாக்கிக் கொண்டிருப்போம்..

நமது இலக்கு இதுவென தெளிவாய் தெரிந்தால் மட்டுமே ..நம்மால் அதில் வெற்றியை எளிதில் அடைய இயலும்.

ஹைக்கூ எழுத வேண்டும் என மனதினில் எண்ணம் கொண்ட பலரும்..மேலோட்டமாக அது மூன்று வரி கவிதை என்றுதான் எண்ணம் கொள்கிறார்களே தவிர..அதன் பலத்தரப்பட்ட விதிமுறைகளை அறிந்து கொள்ள விரும்புவதில்லை அல்லது ஆர்வம் காட்டுவதில்லை..இதை ஏன் சொல்கிறேன் என்றால் விதிகளை ஓரளவேனும் அறிந்தவர்களது கவிதைகள் ஹைக்கூ வடிவின் எல்லையை ஓரளவு தொட்டு நிற்கும்..ஆனால் பலரது கவிதைகளோ ஹைக்கூ விதிமுறைப்படி அமைவதே இல்லை.. அதை தெரிந்து எழுதுவோம் என்றும் பலர் முயற்சிப்பதும் இல்லை..ஏனெனில் பல போட்டிகளில் நான் இதை உணர்கிறேன்.

கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் கூற்று… எளிமையாய் மூன்றடியில் எழுதப்பட வேண்டும்..முதலிரண்டு அடிகள் ஒரு கூறு..ஈற்றடி ஒரு கூறு.. அந்த ஈற்றடியானது ஆற்றல் மிக்க பெயர்ச்சொல்லுடன் வாசகன் எதிர்பாரா திருப்பமுடன் இருந்தால் நல்லது. ஹைக்கூ தந்திமொழி போல அமைத்தால் நல்லது.. என்றார்.

இன்னும் சற்றே விரிவாக கவிஞர்.நிர்மலா சுரேஷ் அவர்கள் தனது ஆய்வு நூலில்..பலரது ஹைக்கூ வடிவங்களை ஆய்வு செய்து..விதிமுறைகளென தந்தவை இது..

  • மூன்று வரியில் அமைதல்
  • கற்பனை, உவமை,உருவகம் இருத்தல் கூடாது
  • உணர்ச்சிகளை நேரடியாக வெளிப் படுத்தாது
  • தன்மைப் பாங்கினை தவிர்க்கும்.
  • ஒரு சொல் மட்டும் குறியீடாய் பயின்று வருதல் கூடாது
  • இருண்மையை மேற்கொள்ளுதல் கூடாது
  • கவிஞன் தன் கருத்தை ஏற்றிச் சொல்லாமை.
  • பிரச்சாரத் தன்மையின்றி எதையும் எளிமையாக கூறுவது.
  • சொல்வதைக் காட்டிலும் சொல்லாமல் விடுவது ஹைக்கூவிற்கு அழகு
  • சின்ன உயிர்களையும் சிறப்பித்துப் பாடுவது நல்லது
  • ஈற்றடியை சிறப்பாய் அமைப்பது
  • மெல்லிய நகைச்சுவை உணர்வோடு அமைப்பது
  • இயற்கையைப் பாடுவதுடன்,இயற்கையை மனித உணர்வோடு கலந்து பாடுவது
  • ஆழ்மன உணர்வோடும் மெல்லிய சோகமும் இழையோடும் படி அமைத்து பாடுவது
  • பிற உயிர்களை தனக்கு இணையாக மதித்துப் பாடுவது.

இவையனைத்தும் கவிஞர் நிர்மலா சுரேஷ் அவர்களால் வரையறுக்கப் பட்டது.இதுவே இன்று வரை பலராலும் கடைபிடிக்கப் படுகிறது..மேற்படி வரையறுக்கப் பட்ட விதிமுறைகளில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் அதற்கான விளக்கம் இந்த கட்டுரைகளின் பல அத்தியாயங்களில் உள்ளது என்பதை அறிவீர்கள்.

ஆகவே.. விதிகளை நன்கு உள்வாங்கி ஹைக்கூவை சிறப்பாக வடிவமைத்து எழுதுங்கள்..

இந்த விதிகளோடு எனது வேண்டுகோள் ஒன்றும் உள்ளது..

கவிதைகளில் நேர்மறைச் சிந்தனைகளை மட்டுமே விதையுங்கள்.. எதிர்மறைச் சிந்தனைகளை தவிர்த்து விடுங்கள்.. இதையும் நீங்கள் விதியாகவே கொண்டு சிறப்பான கவிதைகளை வடித்தெடுங்கள்.

இன்னும் வரும்…

 முன் தொடர்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

மின்னிதழ்

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர் கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.