தொடர் – 47

எந்தவொருக் கவிதை வடிவமும் மற்றவர்களால் விமர்சனத்திற்கு ஆட்படுவது இயற்கையே..

மரபாகிலும் சரி… அதன்பின் புதுக்கவிதை..நவீனக்கவிதை தொட்டு இன்று ஹைக்கூ வரையில் அனைவராலும் நேர்மறையாக மட்டுமின்றி… எதிர்மறையாகவும் விமர்சனம் எழுவதென்பது வாடிக்கையே.

ஒட்டக்கூத்தன் பாடலுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள் என மரபுக் கவிதைக்கே இம் மண்ணில் எதிர்ப்புகளும்.. விமர்சனங்களும் எழும் போது இன்றையக் காலக் கட்டத்தில் ஹைக்கூவும் அது போன்ற விமர்சனங்களை சந்தித்தே வருகிறது.

மரபு மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில்… ஆங்கிலக் கவிஞர் #வால்ட்_விட்மன் ஆங்கில மொழியில் புதுக்கவிதை ( New Verse ) எனும் புதுவகை ஒன்றை  புல்லின் இதழ்கள் ( Leaves of Grass ) என்ற தனது முதல் படைப்பின் வாயிலாக அறிமுகம் செய்து வைத்தார்.. பின் பலர் அதை வரவேற்று எழுதத் துவங்க D.S. எலியட் அவர்கள் எழுதிய  பாழ் நிலம் ( Waste Land ) எனும் புதுக்கவிதை நூல் நோபல் பரிசை தட்டிச் சென்றது.. ஆங்கிலத்தில் புதுக்கவிதைகளை விடுதலைக் கவிதை ( Free Verse ) என்கின்றனர்.. மரபின் கட்டுப்பாடின்றி வருகிறதல்லவா.. நம் தமிழில் புதுக்கவிதையை அறிமுகப் படுத்தியப் பெருமை கவிஞர் ந.பிச்சமூர்த்தி அவர்களையே சேரும்.

அதன்பின் இன்று பரவலாக பலரால் விருப்பப்பட்டு வாசிக்கக் கூடிய அனைவரையும் வசிகரித்துள்ள ஒரு கவிதை வடிவம் ஹைக்கூ என்றால்.. அது மிகையில்லை.. பலரும் எழுத விரும்பும் கவிதை வடிவமாகவும் இது விளங்குகிறது..காரணம் எளிமை..  புதுமை..வாசகனை தன்னோடு இணைந்து ஈர்த்துச் செல்லும் விதம்..இயற்கையை இயற்கையோடு இயைந்து பாடப்படும் உன்னதம்.. கவிதைகளுக்கே உரிய எந்தவித ஒப்பனைகளும் இல்லாது உள்ளதை உள்ளபடி காட்டி நகர்ந்து செல்லும் தன்மை… இவையெல்லாம் ஹைக்கூவினை அனைவரும் விரும்பும் ஒரு கவிதை வடிவமாகச் செய்திருக்கிறது.

ஹைக்கூவில்… உணர்ச்சிகளை நேரடியாக பிரதிபலித்தல் கூடாது.. ஆனால் அவைகளை குறியீடுகள் வாயிலாக வெளிக் காட்டும் உத்தியை முன்னர் கவிஞர்கள் கையாண்டனர்..கவிதையில் சொற்களால் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் நிறுத்தற் குறியீடுகளால் வெளியிடுவர்.

இதை கவனியுங்கள்..

அத்தனையும் தின்று விட்டேன்
ஆ..வயிற்று வலி
திருடிய ஆப்பிள்கள்.

  • ஷிகி.

எனக்கு வயசாகக் கூடாது
சே..கேட்பீர்களா, அதோ
புது வருட மணியோசை.

  • ஜோகுன்

இதே போல் நானும் எழுதி உள்ளேன் முன்னர்..

வாசலிலே பூத்தூவாலை
வரிவரியாய் கோலம்.
ஓ.. மார்கழியா இது..!

ஹைக்கூவின் முதலடியானது..சாட்டையைக் கையில் எடுக்கும் அமைதியுடனும்.. இரண்டாவது அடியானது.. அதை ஒங்கும் நிதானத்துடனும்.. மூன்றாவது அடியானது .. அதை சுழற்றி வீசிய கனத்துடனும் தெறிப்பாக அமைய வேண்டுமென ஹைக்கூ கவிஞரும்..கட்டுரையாளரும்..சிறந்த ஹைக்கூ மொழிபெயர்ப்பாளருமான நெல்லை.சு.முத்து கூறுவார்.

இன்னும் வரும்… 

 முன் தொடர்


1 Comment

ஹ.ரெங்கபார்வதி · நவம்பர் 27, 2019 at 18 h 17 min

வளவள இல்லாமல், சுருங்கச் சொல்லி மனதில் ஆனி அடித்தாற் போல் பதிய வைப்பது, ஹைக்கூ.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

மின்னிதழ்

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர் கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.