தொடர் – 46

ஹைக்கூ உண்மைக்கு நெருக்கமாய் நின்று எழுதப்பட வேண்டிய ஒரு கவிதை வடிவம்.

ஆகவே தான்.. கற்பனைகளை இதில் தவிர்க்கிறோம்… உவமை..உவமேயங்களையும் இதில் கையாள்வதில்லை.. நாம் காணும் காட்சியை…உணர்ந்த உணர்வினை உண்மைத் தன்மையோடு எந்தவித சமரசங்களுக்கும் இடமின்றி இக்கவிதை வடிவில் தர முயற்சிக்கிறோம்.

அதே போல.. கவிதைகளுக்கு உகந்த.. பொருத்தமான வார்த்தைகளை கையாளுதலும் மிகமிக அவசியமான ஒன்றாகும்.

இங்கு ஏற்கனவே இது குறித்த தகவலை நான் பகிர்ந்துள்ளேன்.. இருப்பினும் இன்னும் சற்று விளக்கமாகவும்…விரிவாகவும் இங்கு காண்போம்.

திருவிழா காலம்
அதிகரித்துச் செல்கிறது
கழிவுகள்.

இது ஒரு கவிஞரின் கவிதை..திருவிழா நேரங்களில் தேவையற்ற கழிவுகளானது அதிகப்படியாகிறது என்ற ஒரு காட்சி.

ஆனால்…இங்கு கவனிக்க வேண்டியது

அதிகரித்துச் செல்கிறது… என்றிருக்கும்… இரண்டாவது அடியானது இவ்வாறு அதிகமாகச் சேர்கிறது என இருந்தால் சிறப்பாய் இருக்கும்.

திருவிழாக் காலம்
அதிகமாகச் சேர்கிறது
கழிவுகள்.

அதே போல…இதை கவனியுங்கள்..

திருவிழாக் கூட்டம்
அதிகரித்துச் செல்கிறது
பனிக்கூழ் வியாபாரம்.

இங்கும் அதே போல்… சின்ன மாற்றம் அவசியமாகிறது.. இரண்டாவது அடியில்..

திருவிழாக் கூட்டம்
அதிகமாய் நடக்கிறது
பனிக்கூழ் வியாபாரம்.

என்றிருப்பின் பொருத்தமாய் அமையும்..ஈற்றடியின் தன்மைக்கே ஏற்ப இரண்டாவது அடியின் சொல் அமைதல் வேண்டும்.. அது மட்டுமின்றி அது முதலாம் அடியோடும் இயைந்து வருதல் அவசியம் என்பதையும் மறந்து விடக் கூடாது.

ஹைக்கூவில் வார்த்தைகள் வலிமையானவை.சுருக்கமான வார்த்தைகளே பொருள் அடர்த்தி கொண்ட ஒரு ஹைக்கூவை வழிநடத்துகிறது..ஆகவே அதனை கையாள்வதில் நாம் மிக கவனத்துடன் செயலாற்றுவதும் மிக அவசியம்.

சொல்லவரும் கருத்தை தெளிவாக கவிதையின் கருவிற்கு அருகில் நின்று தெளிவுபடச் சொல்லுதல் வேண்டும்.. என்பதே ஹைக்கூவின் சித்தாந்தம்.

ஆகவே தான் ஹைக்கூவின் பிதாமகரான பாஷோ சொன்னார்

வாழ்நாளில் ஒரேயொரு ஹைக்கூவையாவது சிறப்பாக படையுங்கள்.. அதற்காக பல ஆண்டுகள் தவமிருந்தாலும் தவறில்லை என்று.

இன்னும் வரும்… 

 முன் தொடர்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

மின்னிதழ்

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர் கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.