பாடல் – 80
முறைசெய்யான் பெற்ற தலைமையும் நெஞ்சில்
நிறையிலான் கொண்ட தவமும் – நிறையொழுக்கம்
தேற்றாதான் பெற்ற வனப்பும் இவை மூன்றும்
தூற்றின்கண் தூவிய வித்து.
(இ-ள்.) முறை செய்யான் – முறையறிந்து செய்யமாட்டாதவன், பெற்ற – அடைந்த, தலைமையும் – தலைமைத் தன்மையும், நெஞ்சில் – மனத்தில், நிறை இலான் – உறுதிப்பாடு இல்லாதவன், கொண்ட – மேற்கொண்ட தவமும் – தவமும்; நிறை ஒழுக்கம் – குறைவற்ற ஒழுக்கத்தை, தேற்றாதான் – தெளிந்து நடவாதவன், பெற்ற வனப்பும் – பெற்ற அழகும்; இவை மூன்றும் – ஆகிய இம் மூன்றும், தூற்றின்கண் – புதலினிடத்து, தூவிய – விதைத்த, வித்து – விதையை யொக்கும்; (எ-று.)
(க-ரை.) முறை புரியமாட்டாதவன் தலைவனா யிருப்பதும், மனவலி யில்லாதவன் தவஞ் செய்வதும், நன்னடக்கை யில்லாதவன் அலுகும் வீண் என்பது.
நிறை இரண்டனுள் முன்னது தொழிற்பெயர். பின்னது காலங் கரந்த பெயரெச்சம், தேற்றாதான் : தன்வினை, வினையாலணையும் பெயர். தேறு : முதனிலை.
முன் பக்கம் செல்ல… தொடரும்
1 Comment
Rajesh · ஜூலை 31, 2022 at 4 h 55 min
அருமை தோழரே தூற்று என்றால் புதரா? அல்லது புதலா இல்லை இரண்டும் ஒரே பொருளா? விளக்கம் வேண்டும் ஐயா
மேலும் ,விளக்கத்தில் அலுகும் என்று ஒரு குறிப்பிடப்பட்டுள்ளது கவின் என்பது அழகை குறிக்கும் இதில் எழுத்துப் பிழை உள்ளது மற்றபடி எல்லாம் சிறப்பு