பாடல் – 79

பழியஞ்சான் வாழும் பசுவும் அழிவினால்
கொண்ட அருந்தவம் விட்டானும் – கொண்டிருந்
தில்லஞ்சி வாழும் எருதும் இவர்மூவர்
நெல்லுண்டல் நெஞ்சிற்கோர் நோய்.

(இ-ள்.) பழி அஞ்சான் – (உலகம் பழிக்கும்) பழிப்புக்குப் பயப்படாமல், வாழும் – உயிர் வாழ்கின்ற, பசுவும் – பசுப்போல்வானும்; அழிவினால் – கேடு வந்த போது, கொண்ட – (தனக்கு உரித்தாகக்) கொண்ட, அருந்தவம் – அரிய தவத்தினை, விட்டானும் – விட்டவனும்; கொண்டிருந்தும் – (தனக்கு உட்பட்டவளாகக்) கொண்டிருந்தும், இல் – மனைவிக்கு, அஞ்சி – பயந்து, வாழும் – நடக்கின்ற, எருதும் – எருதுபோல்வானும்; இவர் மூவர் – ஆகிய இம் மூவரும், நெல் உண்டல் – (மக்கள் உண்ணக் கடவதாகிய) சோற்றை யுண்ணுதல், நெஞ்சிற்கு – (அறிவுடையார்) நெஞ்சுக்கு, ஓர் நோய் – ஒருநோயாம்; (எ-று.)

(க-ரை.) பழிக்கு கஞ்சாதவனும், கேடுற்றதென்று தவத்தை விட்டவனும், மனையாளுக்குப் பயந்து நடக்கும் கணவனும் உண்ணாது ஒழியத் தக்கவர் என்பது.

அஞ்சான் : முற்றெச்சம். பசு, எருது : உவமை யாகுபெயர்கள். நெல் அரிசிக்காகி; அது சோற்றுக்கு ஆயினமையின் இரு மடியாகுபெயர். ‘நெல்லுண்ட நெஞ்சிற்கோர் நோய்’ எனப் பாடங் கொள்ளின் நெல்லைத்தின்னநெஞ்சுக் குண்டாகும் துன்பத்தோடு ஒத்தவர் எனப் பொருள் கொள்க.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20

வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.

இது 3 ஆவது பாவகை

மாமுன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர் இவை வெண்பா

நேர்முன்நேர்
நிரைமுன் நிரை
நேர் முன் நிரை
நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா

ஆனால் கலிப்பாவில்

காய்முன் நிரை வரும்
அதாவது கலித்தளை மிகுந்து வரும்
மற்ற தளைகள் குறைந்து வரலாம்
புளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்
கனிச்சீர்கள் வாரா
அளவடிகளால் ஆனது

கலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 20  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 19

தொடர் 19

வெண்பாதான் கடினம் என்று புலவர்கள் சொல்வதுண்டு. வெண்பாவில் சிறப்பாக எழுதுபவர்களை வெண்பாப் புலி என்றும் அழைக்கப்படுவார்கள். நிறைய தமிழ் நூல்கள் வெண்பாவில் புனையப் பட்டுள்ளன. நீங்களும் இப்போது வெண்பா எழுத முற்பட்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 19  »