பாடல் – 80
முறைசெய்யான் பெற்ற தலைமையும் நெஞ்சில்
நிறையிலான் கொண்ட தவமும் – நிறையொழுக்கம்
தேற்றாதான் பெற்ற வனப்பும் இவை மூன்றும்
தூற்றின்கண் தூவிய வித்து.
(இ-ள்.) முறை செய்யான் – முறையறிந்து செய்யமாட்டாதவன், பெற்ற – அடைந்த, தலைமையும் – தலைமைத் தன்மையும், நெஞ்சில் – மனத்தில், நிறை இலான் – உறுதிப்பாடு இல்லாதவன், கொண்ட – மேற்கொண்ட தவமும் – தவமும்; நிறை ஒழுக்கம் – குறைவற்ற ஒழுக்கத்தை, தேற்றாதான் – தெளிந்து நடவாதவன், பெற்ற வனப்பும் – பெற்ற அழகும்; இவை மூன்றும் – ஆகிய இம் மூன்றும், தூற்றின்கண் – புதலினிடத்து, தூவிய – விதைத்த, வித்து – விதையை யொக்கும்; (எ-று.)
(க-ரை.) முறை புரியமாட்டாதவன் தலைவனா யிருப்பதும், மனவலி யில்லாதவன் தவஞ் செய்வதும், நன்னடக்கை யில்லாதவன் அலுகும் வீண் என்பது.
நிறை இரண்டனுள் முன்னது தொழிற்பெயர். பின்னது காலங் கரந்த பெயரெச்சம், தேற்றாதான் : தன்வினை, வினையாலணையும் பெயர். தேறு : முதனிலை.