பாடல் – 78

தூய்மை யுடைமை துணிவாம் தொழிலகற்றும்
வாய்மை யுடைமை வனப்பாகும் – தீமை
மனத்தினும் வாயினுஞ் சொல்லாமை மூன்றும்
தவத்தில் தருக்கினார் கோள்.

(இ-ள்.) தூய்மை உடைமை – மனத் தூய்மை யுடையராயிருத்தலும்; துணிவு ஆம் – (மெய்நூல்களாலே) துணியப் பட்ட, தொழில் – நற்செய்கையை, அகற்றும் – விரிக்கின்ற, வாய்மையுடைமை – உண்மையுடையவனாயிருத்தலும்,வனப்பு ஆகும் – மங்கையருடைய அழகாகிய, தீமை – தீமையைத் தருவதனை, மனத்தினும் – மனத்தால் நினையாமையும்; வாயினும் – வாயால், சொல்லாமை – சொல்லாமையும்; மூன்றும் – ஆகிய இம் மூன்றும் , தவத்தில் – தவத்திலே, தருக்கினார் – செருக்கி நின்றவர்களுடைய, கோள் – கொள்கையாம்; (எ-று.)

(க-ரை.)தூய்மையும், வாய்மையாயிருப்பதுவும், தீமையை நினையாமலும் சொல்லாமலு மிருப்பதும் நற்றவமுடையார் செயல் என்பது.

துணிவு – துணியப்பட்டது : தொழிலாகுபெயர். அகற்றும் – அகல் என்னும் முதனிலை யடியாகப் பிறந்த பிறவினைப் பெயரெச்சம். தவத்தினரை நோக்கினமையின் வனப்பு பெண்ணின் வனப்புக்காயிற்று. மனத்தினாற் சொல்லாமையாவது இலக்கணையால் நினையாமையாம். தீமை – தீமையைத் தருவது – காரணம் காரியமாகச் சொல்லப்பட்டது.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20

வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.

இது 3 ஆவது பாவகை

மாமுன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர் இவை வெண்பா

நேர்முன்நேர்
நிரைமுன் நிரை
நேர் முன் நிரை
நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா

ஆனால் கலிப்பாவில்

காய்முன் நிரை வரும்
அதாவது கலித்தளை மிகுந்து வரும்
மற்ற தளைகள் குறைந்து வரலாம்
புளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்
கனிச்சீர்கள் வாரா
அளவடிகளால் ஆனது

கலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 20  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 19

தொடர் 19

வெண்பாதான் கடினம் என்று புலவர்கள் சொல்வதுண்டு. வெண்பாவில் சிறப்பாக எழுதுபவர்களை வெண்பாப் புலி என்றும் அழைக்கப்படுவார்கள். நிறைய தமிழ் நூல்கள் வெண்பாவில் புனையப் பட்டுள்ளன. நீங்களும் இப்போது வெண்பா எழுத முற்பட்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 19  »