பாடல் – 39

புலைமயக்கம் வேண்டிப் பொருட்பெண்டீர்த் தோய்தல்
மலமயக்கங் கள்ளுண்டு வாழ்தல் – சொலைமுனிந்து
பொய்ம்மயக் கஞ்சூதின் கண்தங்கல் இம்மூன்றும்
நன்மையி லாளர் தொழில்.

(இ-ள்.) புலை – இழி தன்மையாடு, மயக்கம் – கலத்தலாவது, பொருட் பெண்டீர் – பொருளை விரும்பி நிற்கும் வேசியரை, வேண்டி – விரும்பி, தோய்தல் – கூடுதலாம்; கலம் மயக்கம் – பிறர் எச்சிற் கலத்தோடு கலத்தலாவது, கள் உண்டு – கள்ளைக்குடித்து வாழ்தல் – வாழ்தலாம்; சொல்லை – (பெரியோர் கூறும் உண்மை) மொழியை, முனிந்து – வெறுத்து, பொய் மயக்கம் – பொய்யோடு கலத்தலாவது. சூதின்கண் தங்கல் – சூதாட்டத்தில் இருத்தலாம். இ மூன்றும் – ஆகிய இந்த மூன்றும், நன்மை – அறம், இலாளர் – இல்லாதவரது, தொழில் – தொழில்களாம், (எ-று.)

(க-ரை.) வேசியரைச் சேர்வதாகிய நீசத்தன்மையும், கள்ளுண்டலாகிய பிறர் எச்சிலை யுண்பதும், பொய்யை மேற்கொள்வதாய சூதாடுமிடத்திற் சேர்வதும் அறவழி நில்லாதார் தொழில்களாம்.

புலைமயக்கம் – புலையொடு மயக்கம், புலையை மயங்கும் மயக்கம், புலையினது மயக்கம் என்று மூன்று பொருளிலும் மயங்கும். பொருட் பெண்டிர் என்பது – பொருளை விரும்பும் பெண்டிர் பொருளுக்கு முயங்கும் பெண்டிர், பொருளால் முயங்கும் பெண்டிர் என முப்பொருளில் மயங்கினவாறு காண்க. கள்ளுண்டென்ற குறிப்பால் வாழ்தல்கெடுதலை யுணர்த்தியது. பெண்டீர்த் தோய்தல் என்பதில் நிலைமொழி உயர்திணைப் பெயராதலாலும், இரண்டாம் வேற்றுமைத் தொகையாதலாலும், இயல்பில் விகாரமாயிற்று. சொல் – ஈண்டு மெய். சூது தன்னாலாகும் ஆட்டத்தையுணர்த்தியது; கருவியாகு பெயர். நன்மையிலாளர் என்பதை நன்மை + இன்மை + ஆளர் என்று முறையே ஆறாம் வேற்றுமைத் தொகையாகவும் இரண்டாம் வேற்றுமைத் தொகையாகவும் கொள்க.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


4 Comments

https://playamouk.wordpress.com/ · அக்டோபர் 19, 2025 at 23 h 30 min

Excellent article! We are linking to this particularly great content
on our site. Keep up the great writing. https://playamouk.wordpress.com/

https://Status.net.ua/2025/03/gilzi-dlja-sigaret-perevagi-vidi-ta-vibir/ · நவம்பர் 21, 2025 at 16 h 32 min

Hey there! Do you know if they make any plugins to safeguard against hackers?
I’m kinda paranoid about losing everything I’ve worked hard on.
Any recommendations? https://Status.net.ua/2025/03/gilzi-dlja-sigaret-perevagi-vidi-ta-vibir/

https://svyatoshino.org.ua/etapy-reabilitatsiyi-pislya-insultu-vidnovlennya-krok-za-krokom/ · நவம்பர் 21, 2025 at 22 h 07 min

I seldom leave remarks, however I browsed a few of the remarks here திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும்
– 39 – Tamilnenjam. I actually do have some questions for
you if you don’t mind. Is it simply me or do some of the responses come across like they are coming from brain dead people?

😛 And, if you are posting at other online social sites, I
would like to follow you. Could you make a list of all of your social
pages like your twitter feed, Facebook page or linkedin profile? https://svyatoshino.org.ua/etapy-reabilitatsiyi-pislya-insultu-vidnovlennya-krok-za-krokom/

https://diagnoz.info/novosti/osoblivosti-reabilitaczi-hvorih-na-rozsiyanij-skleroz.html · நவம்பர் 21, 2025 at 22 h 14 min

Hi there, all the time i used to check webpage
posts here in the early hours in the daylight, because i
love to gain knowledge of more and more. https://diagnoz.info/novosti/osoblivosti-reabilitaczi%D1%97-hvorih-na-rozsiyanij-skleroz.html

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20

வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.

இது 3 ஆவது பாவகை

மாமுன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர் இவை வெண்பா

நேர்முன்நேர்
நிரைமுன் நிரை
நேர் முன் நிரை
நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா

ஆனால் கலிப்பாவில்

காய்முன் நிரை வரும்
அதாவது கலித்தளை மிகுந்து வரும்
மற்ற தளைகள் குறைந்து வரலாம்
புளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்
கனிச்சீர்கள் வாரா
அளவடிகளால் ஆனது

கலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 20  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 19

தொடர் 19

வெண்பாதான் கடினம் என்று புலவர்கள் சொல்வதுண்டு. வெண்பாவில் சிறப்பாக எழுதுபவர்களை வெண்பாப் புலி என்றும் அழைக்கப்படுவார்கள். நிறைய தமிழ் நூல்கள் வெண்பாவில் புனையப் பட்டுள்ளன. நீங்களும் இப்போது வெண்பா எழுத முற்பட்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 19  »