பாடல் – 29

பெண்விழைந்து பின்செலினுந் தன்செலவிற் குன்றாமை
கண்விழைந்து கையுறினுங் காதல் பொருட்கின்மை
மண்விழைந்து வாழ்நாண் மதியாமை இம்மூன்றும்
நுண்விழைந்த நூலவர் நோக்கு.

(இ-ள்.) பெண் – ஒரு பெண், விழைந்து – விரும்பி, பின் செலினும் – பின் சென்றாலும், தன் செலவில் – தன்னடக்கையில், குன்றாமை – குறையாமையும்; கண் விழைந்து – (தன்) இடந்தேடி, கை உறினும் – வந்து கைப்பட்டாலும், பொருட்கு – (பிறன்) பொருளிடத்தே, காதல் இன்மை – ஆசையில்லாதிருத்தலும், மண் விழைந்து – (மனை முதலிய) நிலத்தை விரும்பி, வாழ்நாள் – (அறப்பயனை யடையாமல்) வாழ்கின்ற காலத்தை, மதியாமை – நல்லதென எண்ணாமையும்; இ மூன்றும் – ஆகிய இம் மூன்றும், நுண் – நுட்பமான, நூல் – நூல்களை, விழைந்தவர் – விரும்பிக் கற்றுணர்ந்தவருடைய, நோக்கு – கருத்தாம்; (எ-று.)

(க-ரை.) முறை பிறழ்ந்து தன்னைச் சேர விரும்பும் பெண்ணைச் சேராமையும், பிறன்பொருள் வலிய வந்தெய்தினும் கைக் கொள்ளாமையும், மண்ணாளுதலை விரும்பிய வாழ்நாளை மதியாமையும் நூலுணர்வுடையார் கருத்து.

விழைந்து : உகரவீற்று வினையெச்சம், பின் : இடைச்சொல், செலின் : செல்லின் என்பது லகரம் தொக்கது. செலவில், செலவு : தொழிற்பெயர். இல் : ஐந்தாம் வேற்றுமை, நீக்கப் பொருள் : ஏழாம் வேற்றுமையுமாம். குன்றாமை : எதிர் மறைத் தொழிற்பெயர். குன்று : பகுதி பின்செலினும், கையுறினும் : உம், எதிர்மறை, பொருள்களின் நுண்மையை அப் பொருள்களை யுணர்த்தும் நூலின்மே லேற்றி நுண்ணூல் என்றார். விழைந்த நூலவர் என்பதை நூல் விழைந்தவர் எனப் பின் முன்னாக நிறுத்தி விகுதி பிரித்துக் கூட்டுக. பொருட்கு என்னும் நான்கனுருபு ஏழாவதனிடப் பொருளில் வந்தது. நோக்கு : முதனிலைத் தொழிற்பெயர்; கருவிப் பொருள் விகுதிபுணர்ந்து கெட்ட பெயர் எனலுமாம்.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20

வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.

இது 3 ஆவது பாவகை

மாமுன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர் இவை வெண்பா

நேர்முன்நேர்
நிரைமுன் நிரை
நேர் முன் நிரை
நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா

ஆனால் கலிப்பாவில்

காய்முன் நிரை வரும்
அதாவது கலித்தளை மிகுந்து வரும்
மற்ற தளைகள் குறைந்து வரலாம்
புளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்
கனிச்சீர்கள் வாரா
அளவடிகளால் ஆனது

கலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 20  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 19

தொடர் 19

வெண்பாதான் கடினம் என்று புலவர்கள் சொல்வதுண்டு. வெண்பாவில் சிறப்பாக எழுதுபவர்களை வெண்பாப் புலி என்றும் அழைக்கப்படுவார்கள். நிறைய தமிழ் நூல்கள் வெண்பாவில் புனையப் பட்டுள்ளன. நீங்களும் இப்போது வெண்பா எழுத முற்பட்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 19  »