பாடல் – 26

ஒல்வ தறியும் விருத்தினனு மாருயிரைக்
கொல்வ திடைநீக்கி வாழ்வானும் – வல்லிதிற்
சீல மினிதுடைய வாசானும் இம்மூவர்
ஞால மெனப்படு வார்.

(இ-ள்.) ஒல்வது (தனக்குச்) செய்யக் கூடியதை, அறியும் – அறியவல்ல, விருந்தினனும் – அதிதியும்; ஆர் உயிரை – அருமையாகிய உயிரை, கொல்வது – (ஒருவன்) கொல்லுந் தொழிலை, இடை நீக்கி – கொல்வோனுக்கும் கொல்லப்படுவதற்கும் நடுவே (சென்று) விலக்கி, வாழ்வானும் – வாழ்கின்றவனும்; வல்லிதின் – (மனத்தின்) உறுதியினால், இனிது சீலம் – (உயிர்க்கு) நன்மையைத் தருவதாகிய ஒழுக்கத்தை, உடைய ஆசானும் – உடைய ஆசிரியனும்; இ மூவர் ஆகிய இம் மூவரும், ஞாலம் எனப்படுவார் – உயர்ந்தோர் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவார்; (எ-று.)

(க-ரை.) பெற்றது கொண்டுமகிழும் அதிதியும், கொலையை நீக்கி வாழ்பவனும் உயிரினும் இனிய ஒழுக்கத்திற் சிறந்த ஆசிரியனும் உயர்ந்தோர் என்று சொல்லப்படுவார் என்பது.

ஒல்வது : தொழிலாகு பெயர். விருந்து – புதுமை. இப் பண்பு ஆகுபெயராய் விருந்தினனை யுணர்த்தும். விருந்தினன் – விருந்து : பகுதி, இன் : சாரியை, அன் : ஆண்பால் விகுதி. விருந்து – அறிவிருந்து அறியாவிருந்து என்றிரு வகைப்படும். முன் அறிந்திருந்தமையால் குறித்து வரும் விருந்து அறிவிருந்து; அறிந்திராமையால் குறியாமல் வரும் விருந்து அறியாவிருந்து. ஆருயிர் – ஆர்உயிர்; ஆர் – அருமை, ஆருயிர் : பண்புத்தொகை. அரு, இரு, பெரு முதலிய பண்புகள் வருமொழி முதலில் உயிர் வந்தால் முதல் நீளப் பெறும். கொல்வது : எதிர்காலத் தொழிற்பெயர், வல்லிது; வலிது என்பதன் விரித்தல் விகாரம் : குறிப்புவினையா லணையும் பெயர். ஆசான் – ஆசாரியன். ஞாலம் – உலகு : இங்கு ஆகுபெயராய் உலகத்து உயர்ந்தோரை உணர்த்தியது.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20

வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.

இது 3 ஆவது பாவகை

மாமுன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர் இவை வெண்பா

நேர்முன்நேர்
நிரைமுன் நிரை
நேர் முன் நிரை
நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா

ஆனால் கலிப்பாவில்

காய்முன் நிரை வரும்
அதாவது கலித்தளை மிகுந்து வரும்
மற்ற தளைகள் குறைந்து வரலாம்
புளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்
கனிச்சீர்கள் வாரா
அளவடிகளால் ஆனது

கலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 20  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 19

தொடர் 19

வெண்பாதான் கடினம் என்று புலவர்கள் சொல்வதுண்டு. வெண்பாவில் சிறப்பாக எழுதுபவர்களை வெண்பாப் புலி என்றும் அழைக்கப்படுவார்கள். நிறைய தமிழ் நூல்கள் வெண்பாவில் புனையப் பட்டுள்ளன. நீங்களும் இப்போது வெண்பா எழுத முற்பட்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 19  »