பாடல் – 25

செருக்கினால் வாழுஞ் சிறியவனும் பைத்தகன்ற
அல்குல் விலைபகரும் ஆய்தொடியும் – நல்லவர்க்கு
வைத்த வறப்புறங் கொன்றானும் இம்மூவர்
கைத்துண்ணார் கற்றறிந் தார்.

(இ-ள்.) செருக்கினால் – (பெரியோரை மதியாமல்) இறுமாப்புடன் : வாழும் – வாழ்கின்ற, சிறியவனும் – அறிவில்லாதவனும்; பைத்து – படத்தைப் போன்றதாய், அகன்ற – விசாலமான, அல்குல் – நிதம்பத்தினை, விலைபகரும் – விற்கும், ஆய் தொடியும் – ஆராய்ந்தெடுத்த வளையலணிந்த வேசையும்; நல்லவர்க்கு – துறவறத்தார்க்கு, வைத்த – அமைத்த, அறப்புறம் – அறச்சாலையை, கொன்றானும் – அழித்தவனும்; இ மூவர் – ஆகிய இம் மூவருடைய, கைத்து – பொருளை, உண்ணார் – புசியார், கற்று – (அற நூல்களைப்) படித்து, அறிந்தார் – (அதன் பொருளை உள்ளபடி ) அறிந்தவர்; (எ-று.)

(க-ரை.) மதிக்கத் தக்க பெரியாரை மதிக்காதவன், விலைமாது, நல்லவர் பொருட்டு ஏற்படுத்தப் பெற்ற அறச்சாலையை அழித்தவன் ஆகிய இம் மூவரிடமும் அறிஞர் உணவு கொள்ளல் ஆகாது என்பது.

செருக்கு. மதம், செல்வக் களிப்பு, ஆல் : மூன்றன் உருபு; உடனிகழ்ச்சிப் பொருள். சிறியவன் என்பதில் சிறுமை அறிவின் மேல் நின்றது. கொல்லல் – அழித்தல், “இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு” என்ற திருக்குறள் 1048 இல் கொன்றது என்பதற்கு இன்னாதவற் றைச் செய்தல் என்று பொருள் கூறப்பட்டுள்ளது. பைத்து – பையையுடையது. பை – படம். கைத்து – கையிலுள்ளது : ஒன்றன் பாற் படர்க்கை வினையாலணையும் பெயர், கை : பகுதி, த் : சந்தி, து : ஒன்றன்பால் விகுதி. “வஞ்சத்தாற் பல்கின்பங் காட்டும் பரத்தையும்” என்ற பாடங்கொள்வதும் உண்டு.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

சோழவந்தான் கவிச்சிங்கம்…

மதுரை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தமிழ். தமிழின்றி மதுரையில்லை; மதுரையின்றித் தமிழின் வரலாற்றை எழுதிவிட முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்து நம்மொழியை வளர்த்தவர்கள் மதுரை மக்கள். இன்றும் பல்வேறு பெயர்களில் சங்கம் வைத்து , அறக்கட்டளை வைத்து, மன்றங்கள் வைத்து, புலனக்குழு முகநூல்குழுக்கள் வைத்து மொழியை வளர்த்துவரும் மதுரையில் அதன்பெயரிலேயே தமிழ்மதுரை அறக்கட்டளை எனும் பெயரில் ஒரு அறக்கட்டளை வைத்து , மொழிவளர்க்கும் சான்றோர்களுக்குப் விருது வழங்கி , பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று தமிழ்ப்பற்றை அதிகப்படுத்தும் பணிகளச் செய்துவரும் ஒருவரே இம்மாதச் சிறப்பு விருந்தினர் ஆவார். ஆம் சித்தார்த் பாண்டியன் எனும் புனைப்பெயருடன் வலம்வரும் தூயதமிழ்ப் பற்றாளர் தமிழ்மதுரை அறக்கட்டளை நிறுவுநர் சோழவந்தான் கவிச்சிங்கம் தங்கபாண்டியன் அவர்களுடன் தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் செய்த நேர்காணல் இதோ..

நேர்காணல்

கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா

I மின்னிதழ் I நேர்காணல் I கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா

‘’மலையகத்தில் கற்றவர்கள் அதிகமாக காணப்படுவது பெருமைக்குரிய விடயமாகும்’’

மலையகக் கவிஞர், எழுத்தாளர்,

 » Read more about: கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா  »

நேர்காணல்

கிழக்கில் உதித்த தாரகை, இலக்கிய வானிலும் சாதனை

I மின்னிதழ் I நேர்காணல் I  மருத்துவர் ஜலீலா முஸம்மில்

தொழில்ரீதியாக மருத்துவராக சேவை செய்யும் டொக்டர் ஜலீலா முஸம்மில், பன்முகத் திறமைகளோடு இலக்கிய  வானிலும் ஆளுமை செய்கிறவர். சுறுசுறுப்பில் தேனீயாக இயங்கி திக்குகள் எட்டிலும் துலங்குகிறவர்.

 » Read more about: கிழக்கில் உதித்த தாரகை, இலக்கிய வானிலும் சாதனை  »