பாடல் – 21

வருவாயுட் கால்வாழங்கி வாழ்தல் செருவாய்ப்பச்
செய்தவை நாடாச் சிறப்புடைமை – எய்தப்
பலநாடி நல்லவை கற்றல் இம்மூன்றும்
நலமாட்சி நல்லவர் கோள்.

(இ-ள்.) வருவாயுள் – தமக்கு வரும் பொருள்களிலே, கால் – நான்கி லொரு பங்கு, வழங்கி – (அறத்திற்) செலவு செய்து, வாழ்தல் – வாழ்தலும்; செரு – போரினிடத்து, வாய்ப்ப – (வெற்றி) கிடைப்ப, செய்தவை – (தான்) செய்த செயல்களை, நாடா – ஆராயாத, சிறப்பு உடைமை – (யாவர்க்கும் விளங்கித் தோன்றும்) சிறப்புடையனாதலும்; எய்த – நிரம்ப, பலநாடி – பலவற்றையும் ஆராய்ந்து, நல்லவை – (அவற்றுள்) நல்லவற்றை, கற்றல் – படித்தலும்; இ மூன்றும் – ஆகிய இம் மூன்றும், நலம் – நற்குண நற்செய்கைகளால், மாட்சி – பெருமை பெற்ற, நல்லவர் – நல்லவருடைய, கோள் – கொள்கைகளாம்; (எ-று.)

(க-ரை.) வரவுக்குத் தகுந்தபடி அறஞ்செய்தலும், போரில் வெற்றி பெறுதலும், நல்ல பொருள்களைக் கற்றலும் நலம் என்றபடி.

வருவாய் – வரும் வழியையுடைய பொருள்; வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை, கால் : எண்ணளலவை யாகுபெயர். செருவாய்ப்ப என்ற குறிப்பால் செய்தவை என்பது வெற்றிச் செய்கை என்பதன் மேலாயிற்று, வாய்ப்ப – நிகழ்காலத்தில் வந்த செயவெனெச்சம் : வாய் : பகுதி, ப் : எழுத்துப்பேறு, ப் : சந்தி, அ : விகுதி, வழக்கத்தில் வாய்க்க என வரும். உடைமை : தொழிற் பெயர். கோள் – கோட்பாடு : தொழிலாகு பெயர். ஒருவன் தன் தேட்டத்திற் பாதி தன் வகைச் செலவுக்கும், காற்கூறு அறத்திற்கும், மற்றொரு கால் சேர்த்து வைப்பதற்கும் பயன்படுத்த வேண்டுமென்பது நூற்கொள்கை.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20

வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.

இது 3 ஆவது பாவகை

மாமுன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர் இவை வெண்பா

நேர்முன்நேர்
நிரைமுன் நிரை
நேர் முன் நிரை
நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா

ஆனால் கலிப்பாவில்

காய்முன் நிரை வரும்
அதாவது கலித்தளை மிகுந்து வரும்
மற்ற தளைகள் குறைந்து வரலாம்
புளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்
கனிச்சீர்கள் வாரா
அளவடிகளால் ஆனது

கலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 20  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 19

தொடர் 19

வெண்பாதான் கடினம் என்று புலவர்கள் சொல்வதுண்டு. வெண்பாவில் சிறப்பாக எழுதுபவர்களை வெண்பாப் புலி என்றும் அழைக்கப்படுவார்கள். நிறைய தமிழ் நூல்கள் வெண்பாவில் புனையப் பட்டுள்ளன. நீங்களும் இப்போது வெண்பா எழுத முற்பட்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 19  »