தொடர் – 31

ஜப்பானிய கவிதை வடிவமான ஹைக்கூவைப் போலவே… பிரசித்தமான ஏறக்குறைய ஹைக்கூவைப் போலவே காட்சி தரும் ஒரு வடிவம் சென்ரியு.

ஹைக்கூவில் கவிநயமும்..கருத்தாற்றலும் மிகுதி.. ஆனால் சென்ரியுவில் இயல்பான நகைச்சுவை, அங்கதம், கேலி, கிண்டல், எள்ளல், சாடல், போன்ற உணர்வுகளே மேலோங்கி நிற்கும்.

ஜப்பானில் “சென்ரியு” எனும் புனைப் பெயரைக் கொண்ட “கராய் ஹச்சிமோன்” ( 1716-1790 ) என்பவரால் தொகுத்து வழங்கப்பட்ட கவிதை வடிவம் இது என்பதனால் அவரது பெயரிலேயே சென்ரியு என வழங்கப்படலாயிற்று.

சென்ரியு என்பதை.. மயேகூ எனும் முதலடியை ஏதேனும் ஒருவர் எழுதி வைத்துவிட்டு சென்று விடுவார். அதைத் தொடர்ந்து ஸூகெய் எனும் இணைக்கப்பட்ட ஒரு வார்த்தையை வேறொருவர் எழுதுவார். பலரும் கூட அந்த மயேகூ எனும் முதலடிக்கு இணையான ஸூகெய் வார்த்தையை எழுதுவார்கள். இதில் எவரது வார்த்தை தொடர் சிறப்பாக இருக்கிறதோ… அவர்களுக்கு பரிசுகள் எல்லாம் வழங்கப்படும். இவ்வாறான நிகழ்வுகள் மதுபான கடைகள், டீ கடைகள் என அங்காடிகளில் நடத்தப் பட்டுள்ளன. இவ்வாறான கவிதைகளை தொகுத்து நூலாகவும் வெளியிட்டுள்ளார் கராய் சென்ரியு. ஆகையால் இவ்வடிவ ஹைக்கூ வகைமை கவிதைகளுக்கு அவரது பெயரையே வைத்து விட்டனர்.

சென்ரியுவின் சீடரான அருபெஷி என்பவரும் 18 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் சென்ரியுவிற்கு மாற்று வடிவம் தர முற்பட்டு…இரண்டு அடிகளாய்…

அன்பு செலுத்த விரும்புகையில்
பெற்றோர்கள் போய்விட்டனர்..!

என சென்ரியுவை மூன்றடியில் இருந்து இரண்டடிக்கு மாற்றி எழுதி பரிசோதித்தார்.

பொதுவில்… இன்று தமிழில் எழுதப்படும் பல ஹைக்கூக்களும்… சென்ரியுவாகவே உள்ளது எனலாம். நமது சூழலுக்கு அதுவே பெரும்பாலும் பொருந்திப் போகிறது.

அரசியல் சாடல், சமூக சாடல், மூடநம்பிக்கை,  கிண்டல் என நாம் எழுதும் நகைச்சுவை ததும்பும் கவிதைகள் சென்ரியுவாகவே மலர்கிறது.

தமிழில் இதனை ஈரோடு தமிழன்பன் அவர்கள் தனித் தொகுப்பாய் தந்துள்ளார்.

உங்களின் பார்வைக்கு…சில சென்ரியுக்கள்.

பொறுமையற்ற சாரதி
பாய்ந்து முந்திக் கொண்டார்
எமன்..!

  • சத்தார் முகம்மட் அஸாத்

கொய்யாப்பழம் தந்த காதலி
நெருங்கி வந்து கேட்கிறாள்
கடித்த மீதியை..!

  • சத்தார் முகம்மட் அஸாத்

சாதிகள் வேண்டாம்
ஐயோ… அடிக்காதீர்கள்.
நான் உங்க சாதிக்காரன்..!

பிறக்கும் போது
கொம்பு முளைத்திருந்தது
நோக்கியோ செல்போன்..!

இவ்விரண்டும் எனது கைவண்ணத்தில் உருவான சென்ரியுக்கள்.

இனி…  வேறு ஒரு தகவலுடன் சந்திப்போம்…

இன்னும் வரும்…

முன் தொடர்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

மின்னிதழ்

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர் கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.