தொடர் 23.

சொல்லாமல் விடும் வார்த்தைகள்

ஹைக்கூ கவிதைகளில் கவிஞன் சொல்லவரும் சில விசயங்களை, நேரடியாக கவிதையில் சொல்வதை விட சொல்லாமல் விடுவதும், அதனை வாசகனின் எண்ண ஓட்டத்திற்கு விட்டுவிடுவதும் பெரும்பாலும் சிறப்பாக அமையும்.

கவிதைகளில் அனைத்து விசயத்தையும் சொல்லிக் கொண்டிருக்கத் தேவையில்லை. வாசகரையும் சிந்திக்கத் தூண்டுவதே ஹைக்கூ கவிதையின் சிறப்பும் ஆகும்.

இதை கவனியுங்கள்..

உறைந்த பனி
உருமாறிக் கொண்டிருக்கிறது
உருவங்கள் பலவாக..!

உறைந்த பனி.. உருமாறிக் கொண்டிருக்கிறது என்றவுடன்.. பனியின் அடுத்த நிலையான நீராக உருகத் துவங்குவதை எண்ணத் துவங்குவான் வாசகன். ஆனால் உருவங்கள் பலவாக என்றவுடன்.. பனிச் சிற்பங்கள் என்பதை நேரடியாகச் சொல்லாமல் வாசகனின் சிந்தனைக்கு கவிஞன் விட்டு விடுகிறான். அதே போல இதை கவனியுங்கள்..

அறுவடை முடிந்த வயல்
ஆங்காங்கே பூத்திருக்கிறது
வெள்ளைக் கொக்குகள்..!

அறுவடை முடிந்ததும் வயல் வெளிகளில் கொக்குகளும், நாரைகளும், சின்னஞ்சிறு பூச்சிகளையும், புழுக்களையும் உண்பதற்கு கூடும். ஆனால் அந்த விசயம் இங்கு நேரடியாகச் சொல்லப்பட வில்லை. அதனை வாசகனை ஊகித்தறிய கவிஞன் விட்டு விடுகிறான்.

இந்த கவிதையை கவனியுங்கள்..

கிடைத்த உணவை பங்கிட்டுக் கொண்டனர் தாத்தாவும்..பேத்தியும்..!

சமைத்த உணவல்ல. கிடைத்த உணவினை தாத்தாவும், பேத்தியும் பகிர்ந்து கொள்கிறார்கள் எனில்.. சமைத்து உண்ணும் நிலையில் அவர்கள் இல்லை. பேத்தி சின்னஞ்சிறு சிறுமியாயும் இருக்கலாம். தாத்தாவோ முதுமையின் இயலாமையில் இருக்கலாம். ஏன்.. இருவரும் பிச்சைக்காரர்களாகவும்.. ஏழ்மையிலும், வறுமையிலும் உழல்பவர்களாக கூட இருக்கலாம். இது போன்ற பல கோணங்களை நாம் ஹைக்கூவில் சொல்லுவதில்லை. ஆனால் கவிதை சொல்லியே நகர்கிறது. கவிஞனைப் போல வாசகனையும் சிந்திக்க வைக்கும் ஆற்றல் கொண்டது ஹைக்கூ.

இன்னும் வரும்…

 முன்தொடர் 22


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

மின்னிதழ்

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர் கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.