பாடல் – 14

இழுக்கல் இயல்பிற் றிளமை பழித்தவை
சொல்லுதல் வற்றாகும் பேதைமை – யாண்டும்
செறுவொடு நிற்குஞ் சிறுமைஇம் மூன்றும்
குறுகார் அறிவுடை யார்.

(இ-ள்.) இளமை – இளமைப் பருவம், இழுக்கல் – வழுவுதலை, இயல்பிற்று – இயல்பாகவுடையது; பேதைமை – அறியாமை, பழித்தவை – (அறிவுடையோரால்) விலக்கப்பட்டவைகளை; சொல்லுதல் – சொல்லுதலில், வற்று ஆகும் – வல்லதாம், சிறுமை – ஈனத்தன்மை, யாண்டும் – எக்காலத்தும் செறுவொடு – சினத்தோடு, நிற்கும் – நிற்பதாகும் (ஆதலால்), இ மூன்றும் – இம் மூவகையினையும், அறிவு உடையார் – (மேல் விளைவை) அறிதலையுடையார், குறுகார் – நெருங்கார்; (எ-று.)

(க-ரை.) இயல்பாக வழுவுதலையுடையது இளமைப்பருவமாம்; வெறுப்பவைகளைச் சொல்லுதல் மூடத்தனம்; எப்போதும் சினத்தோடிருப்பது சிறுமை; இவை ஒருவனுக்கு இருந்தால் பெரியோர்அவனைச் சேரார்.

இழுக்கல் – வழக்குதல்; இழுக்கு : பகுதி, அல் : தொழிற் பெயர் விகுதி, இயல்பிற்று : குறிப்பு முற்று. இயல்பு ; பகுதி, இன் : சாரியை. று : விகுதி. னகரம் றகரமாகத் திரிந்தது. பழித்தவை : பலவின்பால் வினையாலணையும் பெயர். வற்று : வன்மையின் திரிபாகிய வல் : பகுதி. று : ஒன்றன்பால் விகுதி, லகரம் றகரமானது சந்தி. செறுவொடு : ஒடு என்னும் மூன்றனுருபு விசேடணப் பொருளது. சிறுமையுடன் செறுவும் உடனிகழ்தலால், உடனிகழ்ச்சிப்பொருளுமாம், இளமை, பேதைமை, சிறுமைகள் அவற்றையுடையார்க்குப் பண்பாகு பெயரென்றாயினும், இழிவுபற்றி உயர்திணையை அஃறிணையாகக் கூறியதென்றாயினும் அமைத்துக்கொள்க.

முன் பக்கம் செல்ல…    தொடரும்

 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20

வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.

இது 3 ஆவது பாவகை

மாமுன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர் இவை வெண்பா

நேர்முன்நேர்
நிரைமுன் நிரை
நேர் முன் நிரை
நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா

ஆனால் கலிப்பாவில்

காய்முன் நிரை வரும்
அதாவது கலித்தளை மிகுந்து வரும்
மற்ற தளைகள் குறைந்து வரலாம்
புளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்
கனிச்சீர்கள் வாரா
அளவடிகளால் ஆனது

கலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 20  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 19

தொடர் 19

வெண்பாதான் கடினம் என்று புலவர்கள் சொல்வதுண்டு. வெண்பாவில் சிறப்பாக எழுதுபவர்களை வெண்பாப் புலி என்றும் அழைக்கப்படுவார்கள். நிறைய தமிழ் நூல்கள் வெண்பாவில் புனையப் பட்டுள்ளன. நீங்களும் இப்போது வெண்பா எழுத முற்பட்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 19  »