கம்பராமாயண அனைத்துப் பாடல்களிலும் விரவிக் கிடக்கிறது. இனிய ஓசை நயமிக்க கம்பனின் கவிதை வரிகள் யுகம் யுகமாய் நிலைத்து நிற்கும் ஆற்றல் மிக்கவை.

கம்பனின் கவிதை வரிகளில் குவிந்துள்ள சொற்கள் களஞ்சியமாய் திகழ்கின்றன. சூழல், காலம், நோக்கம் போன்றவற்றை கருத்தில் கொண்டு வடிக்கப்பட்ட கம்பராமாயணப் பாடல்கள் பலராலும் ஆய்வு செய்யப்பட்டு இன்றளவும் பேசப்பட்டு வருவது மிகச் சிறப்பு.

“வண்ணம்” எனும் சொல் கொண்டு கம்பன் தனது பாடலில் பாதி இராமாயணத்தை சொல்லிவிட்டதாக சொல்வார்கள். இங்கே வண்ணம் எனும் சொல் நிறம் மற்றும் திறன் என எடுத்தாளுகிறார் கம்பர்.

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்
இனிஇந்த உலகுக் கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர்
துயர்வண்ணம் உறுவது உண்டோ
மைவண்ணத்து அரக்கி போரில்
மழைவண்ணத்து அண்ண லேஉன்
கைவண்ணம் அங்குக் கண்டேன்
கால்வண்ணம் இங்குக் கண்டேன்

(கம்ப. பால காண்டம், மிதிலைக்காட்சிப் படலம், 24.)

(இவ்வண்ணம் = இப்படி; நிகழ்ந்த வண்ணம் = நிகழ்ந்தபடி; உய்வண்ணம் = உய்யும் வழி; துயர்வண்ணம் = துன்பம்; மைவண்ணம் = கருநிறம்;மழைவண்ணம் = மேக நிறத்தை ஒத்த கரிய நிறம்; கைவண்ணம் = கையின் திறமை; கால் வண்ணம் = காலின் திறம்)

இராமனுடைய திருவடி பட்ட அளவில் கல்லாகக் கிடந்த அகலிகைஉயிர் பெற்ற பெண்ணாக மாறுகிறாள்; சாப விமோசனம் பெறுகிறாள். அதனைக் கண்ட விசுவாமித்திர முனிவர் இராமனைப் புகழ்வதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. “கரிய நிறத்தை உடைய இராமனே! இனி இந்த உலகிற்குத் துன்பம் உண்டோ? நின் வில் ஆற்றலால் தாடகை என்ற அரக்கி மாண்டாள். உன் கைத்திறமையை அங்குப் பார்த்தோம். உன் பாதம் பட்டவுடன் அகலிகை உயிர் பெற்று எழுந்தாள். உன் காலின் திறமையை இங்குப் பார்த்தோம்” என்று விசுவாமித்திரர் இராமனைப் புகழும் பாடலில் வண்ணம் என்ற ஒரு சொல் நிறம், திறம் (திறமை) என்னும் இரு பொருளில் திரும்பத் திரும்ப வந்து கவிதையைச் சிறப்படையச் செய்துள்ளதைப் படித்து மகிழலாம்.

இங்கே பாருங்கள்…..

கவியரசு கண்ணதாசனும் வண்ணம் எனும் சொல்லை தனது பாடல் வரிகளில் திறனுடன் எடுத்தாண்டது… இந்த கம்பராமாயண வரிகளின் தாக்கம் தான் என நினைக்கிறேன்…

படம் : பாசம்
இசை : M.S.V. ராமமூர்த்தி
பாடல் : கண்ணதாசன்
பாடியவர் : பி.பி.சீனிவாஸ் & பி.சுசீலா

ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்

இன்னும் ருசிப்போம் ரசிப்போம் கம்பன் கவிநயத்தை.

தொடர் 6
தொடர் 8


1 Comment

M.CHINNASWAMY · மே 21, 2019 at 13 h 40 min

அற்புதம்…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20

வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.

இது 3 ஆவது பாவகை

மாமுன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர் இவை வெண்பா

நேர்முன்நேர்
நிரைமுன் நிரை
நேர் முன் நிரை
நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா

ஆனால் கலிப்பாவில்

காய்முன் நிரை வரும்
அதாவது கலித்தளை மிகுந்து வரும்
மற்ற தளைகள் குறைந்து வரலாம்
புளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்
கனிச்சீர்கள் வாரா
அளவடிகளால் ஆனது

கலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 20  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 19

தொடர் 19

வெண்பாதான் கடினம் என்று புலவர்கள் சொல்வதுண்டு. வெண்பாவில் சிறப்பாக எழுதுபவர்களை வெண்பாப் புலி என்றும் அழைக்கப்படுவார்கள். நிறைய தமிழ் நூல்கள் வெண்பாவில் புனையப் பட்டுள்ளன. நீங்களும் இப்போது வெண்பா எழுத முற்பட்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 19  »