கவிப்பேரரசு வைரமுத்து வாழியவே!

வடுகப்பட்டி ஈன்றெடுத்த வைர முத்து வாழ்வாங்கு வாழியவே ! வாழ்வில் என்றும், துடிப்போடு கவியெழுதும் துள்ளல் உண்டு துணையாகும் இவரெழுத்து துன்பம் போக்கும், படிக்கின்ற வரிகளெல்லாம் பாமரன் போற்றும் பண்பாட்டின் தலையூற்றைப் பதமாய்ச் சொல்லும், வடிக்கின்ற கவியெல்லாம் வாழ்வின் அமுதம் வற்றாது அவர்புகழோ வானும் வாழ்த்தும். திரைத்துறையில் நீராடி தீந்தமிழ்ச் சொல்லில் தினம்விளையா டிவரும்நம் தெள்ளுத் தமிழின் நறைபழுத்தச் சொல்லாளன் நாட்டின் செல்வம் நயமாக எடுத்துரைக்கும் நல்லேர் உழவன், குறையில்லாத் Read more

பெண்மையின் முகவரியாய்!

வறுமை வாட்டியதால், வெறுமையானதே இவள் வாழ்வு. இருந்தும், முயன்றவளாய், பொறுமையே இவளைப் பார்த்து பொறாமை கொண்டதே! தனிமை… துரத்தி துரத்தி, வேட்டையாட முயன்ற போதெல்லாம், புறமுதுகு காட்டாது துணிந்தே எதிர் கொண்டாள்! எத்தனை துன்ப துயரங்கள் இவளை பார்த்து எள்ளி நகைத்தன. அவை ஒவ்வொன்றையும், தன்னுள் உள்வாங்கினாள் அனுபவ பாடமாய்! அழுது புலம்பி காலத்தை விரயமாக்காது, நிகழ்கால நிஜத்திற்காய், மற்றவர்களிடம் யாசிக்காமல், நம்பிக்கையுடன் முயல்வதை காண்கையில், விதியே நொந்து போயிற்றே!

அன்னையின் அடியே!

( அறுசீர் விருத்தம் வாய்பாடு விளம் மா தேமா ) தந்திடும் வாசம் தன்னை தண்ணொளித் தாழம் பூ(வு)க்கே உன்னிடம் கண்ட பாசம் உணர்ந்தவன் சொல்லு வேனே பண்னெடுங் காலம் தொட்டே பண்பெனில் தாய்மை தானே உன்னடி பணிதல் ஒன்றே உண்மையில் உவகைத் தேனே!

மருந்து

சுந்தர மருந்து 1 இல்லாளைத் துன்புறுத்தி இன்னொருத்தி கைப்பிடித்துப் பொல்லா நடைபிணமாய்ப் போகாதீர்.-பல்லோரே ! எள்ளும் தமிழ்ஞாலம் என்றுமிவர் சேர்க்காதாம், உள்ளுவீர் கற்பின்றேல் கேடு. சுந்தர மருந்து 2 இறைகிணறு ஈந்திட்ட ஈடற்ற நீரும், மறைசொல வந்திட்ட மாண்பும்-பொறைகொண்ட நல்லோர்தம் நல்வாக்கும் , நானிலமும் , அற்றேயாம் இல்லாரை வஞ்சித்த பேர்க்கு. சுந்தர மருந்து 3 சொல்வள மில்லாமல், சோதனைகள் வெல்லாமல், பல்லோரும் காணப் பணியாமல்,-வல்லோரின் வாய்வார்த்தை கேளாமல், வாழ்வழிக்கும் Read more

வெற்றிலை

எனக்கான கார வெத்தலையில காம்பு கிள்ளி… பக்குவமா சுண்ணாம்பு பாக்கு பரிமாறி… கொடுத்துபுட்டு நான் மென்னு தின்னும் வரை காத்திருந்து… நாக்கு நீட்டு மாமான்னு… என்… சிவந்த நாக்க பார்த்தே பசியாறுவ புள்ள நீ! ஒருநா… வெத்தலைய நான் மடிச்சு நீட்ட… “அய்யோ… என்ன மாமா… இது…!” ன்னு நீ வெத்தலை போடாமேயே உம் முகமெல்லாம் சிவந்து போச்சு! – கோவை.நா.கி.பிரசாத்

குகன் படகு பேசுகிறது!

தமிழ் வணக்கம் கற்கண்டு சொல்லேந்திக் கார்வண்ணன் வில்லேந்திக் கமழ்கின்ற தமிழே..நீ வாராய்! காலத்தை வெல்கின்ற கோலத்தை என்பாட்டில் கணக்கின்றி எந்நாளும் தாராய்! சொற்கொண்டு வையத்தை நற்றூய்மை நான்செய்யச் சுடர்கின்ற தமிழே..நீ வாராய்! சொக்கட்டான் கோடாக இக்கட்டே இல்லாமல் தொடர்கின்ற சீர்வேண்டும் நேராய்! பொற்புண்டு! புகழுண்டு! கற்புண்டு! கனிவுண்டு! பொலிகின்ற தமிழே..நீ வாராய்! பொன்னான என்னாவைத் தண்ணீரின் படகாக்கிக் கண்ணான கவிவேண்டும் சீராய்! வற்புண்டு! வடிவண்டு! வெற்புண்டு! வியப்புண்டு! மணக்கின்ற தமிழே..நீ Read more

பசி

வெட்கம் என்பது எனக்கும் உண்டு தான்..! என் வயிறு தான் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.. உலகமும் ஏற்காததை போல்..! மூக்கைத் துளைக்கும் வாசனை மிக்க விருந்துகளையா கேட்கிறேன்..?? ஓரிரு ரொட்டித் துண்டுகள் இருந்தாலும் போதும் என் விருந்துக்கு..! பிச்சை கேட்கவும் தன்மானம் அடகு போக மறுக்கிறது..! நான் என்ன செய்ய அச்சமும் நாணமும் பிறவி தந்த பரிசுகள் தானே.. நல்ல குலத்தில் வேறு பிறந்து விட்டேன் அதனால் திருட்டுப் Read more

சிவந்த மகள்

எனக்கான கார வெத்தலையில காம்பு கிள்ளி… பக்குவமா சுண்ணாம்பு பாக்கு பரிமாறி… கொடுத்துபுட்டு நான் மென்னு தின்னும் வரை காத்திருந்து… நாக்கு நீட்டு மாமான்னு… என்… சிவந்த நாக்க பார்த்தே பசியாறுவ புள்ள நீ! ஒருநா… வெத்தலைய நான் மடிச்சு நீட்ட… “அய்யோ… என்ன மாமா… இது…!” ன்னு நீ வெத்தலை போடாமேயே உம் முகமெல்லாம் சிவந்து போச்சு!

காட்டழகி! என் வீட்டழகி!

நாவல் பழ நிறத்தழகி நாயுருவிக் கண்ணழகி-நான் ஆவல் படும் அழகெல்லாம் அடங்கி நிற்கும் பேரழகி சேவல்க்கோழி கொண்டையென சிவந்திருக்கும் உதட்டழகி-உன் பாலைப்பழச் சொல்லுக்கு காளை மனம் ஏங்குதடி! நீர்முள்ளி போலவுந்தன் நீள்மௌனம் தைத்தாலும் மூங்கில் முளை புன்னகையே என் முழுநேர நினைப்பாச்சே! ஆளில்லா ஊருக்கு இலும்பைப்பு சக்கரையாம்! நீயில்லா மனத்துக்கு கண்ணீரே கவிதைகளா? மட்பாண்டம் தாங்கி-நிற்கும் அட்டாளை போல உளமாசைகளை அடுக்கி வைத்து காத்திருக்கு பேரழகே! புயலாக உன் பதிலோ Read more

முத்தமிழறிஞர் கலைஞர் வாழியவே!

அஞ்சுகத்தாய் பெற்றெடுத்த அஞ்சாத நெஞ்சினரே வாழி! கொஞ்சுதமிழ்ப் பேசி,தமிழ் நெஞ்சமதை ஈர்த்தவரே வாழி! முத்துவேலர் பெற்றெடுத்த முத்தமிழின் பெட்டகமே வாழி! கத்துகடல் அலையனைத்தும் கவறிவீச கலைஞரே வாழி! அண்ணாவின் தம்பியாக அவனியிலே உயர்ந்தவரே வாழி! பொன்னானத் தமிழகத்தின் புகழ்பெற்ற தலைமையே வாழி! பகுத்தறிவுப் பாதையிலே பயணிக்கும் பைந்தமிழே வாழி! தகுதியானத் தலைமகனாய்த் தமிழீந்தத் தன்மானமே வாழி! அனல்தெறிக்க வசனமெழுதி அன்னைத்தமிழ் வளர்த்தவரே வாழி! கனல்நிறைந்த வார்த்தைகளால் கவர்ந்திழுத்த தமிழ்மகனே வாழி! Read more