துன்பங்களும் துயரங்களும்!

நம்முடைய தலைக்கு மேல் பறவைகள் பறப்பதை யாராலும் தடுக்க முடியாது. அதுப்போல நம்முடைய வாழ்வில் துன்பங்களும் துயரங்களும் வந்து செல்வதையும் யாராலும் தடுக்க முடியாது. துன்பங்களும் துயரங்களும் நம் வாழ்க்கைக்கு உரமாக வருகின்றதே தவிர வாழ்க்கையை அழித்து விடுவதற்கு அல்ல. ஓரு மனிதனின் வாழ்க்கை என்பது எல்லாத் துன்பங்களையும், சோதனைகளையும் பிரச்னைகளையும் எதிர்த்து நின்று போராடி அதில் வெற்றி காண்பதில் தான் உள்ளது. மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை Read more

வாழ்க்கை!

போராட்டத்தை சந்திக்காத எந்த உயிரும் பூமியில் வாழ முடியாது. பிறந்தது முதல் இறப்பது வரை போராட்டம் இருந்துக்கொண்டேத்தான் இருக்கிறது. பிறந்த குழந்தை கூட அழுகை என்னும் புரட்சி செய்துதான் தன் தேவைகளை பூர்த்தி செய்கிறது (நேதாஜி). போராட்டத்தில் பிறந்து, போராட்டத்தில் வளர்ந்து, போராட்டத்தில் மடிவதுதான் வாழ்க்கை. இன்று மனிதன், போராட்டம் இல்லாத வாழ்க்கை வாழ ஆசைப்படுகின்றான், அதைத்தான் விரும்புகின்றான். வாழ்க்கையில் தங்கள் கொள்கைகளை நிலை நிறுத்திக் கொள்ள ஓவ்வொரு மனிதனும் Read more

ஞாபக மறதியால் அவதியா?

* ஞாபக மறதியால் அவதியா இந்த உணவுகளை சாப்பிடுங்க – இயற்கை மருத்துவம்* படிக்கும் மாணவர்கள் முதல் பரபரப்பான தொழிலதிபர்கள் வரை பலருக்கும் உள்ள பொதுவான பிரச்சினை, ஞாபக மறதி. அது தங்களுக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை சம்பந்தப்பட்டவர்களை கேட்டால் தெரியும். ஞாபகமறதி பிரச்சினையைத் தீர்க்க உணவுகளும் கைகொடுக்கும் என்கிறார்கள், உணவியல் நிபுணர்கள். குறிப்பிட்ட உணவுகளை தொடர்ந்து உட்கொண்டு வருவதன் மூலம், ஞாபக சக்தியை அதிகரிக்கலாம், மூளையைச் சுறுசுறுப்பாக Read more

குணசீலர்

சில மாதங்களுக்கு முன்பு மாற்றுமத நண்பருடன் கருத்தரங்கு ஒன்றிற்கு சென்றிருந்தேன். அக்கருத்தரங்கில் பேசிய ஒருவர்மனிதர்களிடம் இருக்க வேண்டிய நல்ல குணங்களைப் பற்றியும், பிரபலமான சிலரிடம் இருந்த குணநலன்களைப் பற்றியும் பேசினார். அவர்தமது உரையில் அஹிம்சைக்கு மகாத்மா காந்தியையும், உண்மைக்கு சாக்ரடீஸையும், நேர்மைக்கு லால் பகதூர் சாஸ்திரியையும்,பொறுமைக்கு அன்னை தெரசாவையும், நடுநிலைமைக்கு மனுநீதி சோழனையும், தன்னடக்கத்திற்கு இராமகிருஷ்ண பரமஹம்சரையும், பணிவுக்கு ராமானுஜர் (நம்பியாண்டார் நம்பி)யையும், விடா முயற்சிக்கு கஜினி முஹம்மதையும், பொறாமையின்மைக்கு Read more

வண்ணங்களின் (couleur) தமிழ்ப் பெயர்!

தமிழர்களுக்கு தமிழ் தெரியாததால் …. இன்றைக்கு நாம் வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை, நீலம் நிறங்கள் தவிரப் பிறவற்றைத் தமிழில் குறிப்பதில்லை. இவ் வண்ணங்களையும் தமிழில் குறிப்பது அருகி விட்டது. வண்ணங்களுக்கான பெயர்கள் தமிழில் இல்லை என்பதால் குறிப்பிடவில்லை என்று சொல்வோருக்காக வண்ணங்களின் பட்டியல் அளிக்கப்படுகிறது. அடர் சிவப்பு – cramoisy அடர் நீலம் – perse / smalt அடர் மஞ்சள் – gamboge அயிரை / Read more

​மனைவியை எப்போதும் அன்பாய் வைத்திருக்க… !

நீங்கள் வேலைக்கு செல்பவர் என்றாலும் சரி, தொழில் செய்பவர் என்றாலும் சரி, 2-3 மணி நேரங்களை மனைவியுடன் மகிழ்ச்சியாக பேசுவதற்கு என்றே செலவிடுங்கள். முடிந்து களைப்பாக வீடு திரும்பினால் டி.வி.யும், ரிமோட்டுமாக இருந்து விடாதீர்கள். மனைவியை அருகே அழைத்து, அன்று வீட்டில் நடந்த விஷயங்களை பற்றிக் கேளுங்கள். அரட்டை அடித்துப் பேசுங்கள். இருவரும் ஒன்றாக டி.வி. பார்த்து கொண்டிருந்தால், அதில் வரும்கதாபாத்திரங்களிலேயேமூழ்கிவிடாதீர்கள். பக்கத்தில் மனைவி இருக்கிறாள் என்பதை மனதில் வைத்துக்கொண்டு Read more

பொய்சொன்ன தாய்!

மனைவி இறந்த பிறகு மீண்டும் ஒரு திருமணம் செய்த தகப்பன்   தன்னுடைய சிறிய மகனிடம் கேட்கிறான்.. “உன்னுடைய இப்போதைய அம்மா எப்படி?”என்று. அப்போது அந்த மகன் சொன்னான் . “என் அம்மா என்னிடம் பொய் சொல்பவளாக இருந்தாள். ஆனால், இப்போதைய அம்மா என்னிடம் பொய் சொல்வது இல்லை” இதைகேட்ட தகப்பன் கேட்டான்..! ” அப்படி உன் அம்மா உன்னிடம் என்ன பொய் சொன்னாள்?” அந்த குழந்தை சிறு சிரிப்புடன் தன் Read more

பாரதியும் இஸ்லாமும்

“மாரியம்மனிலிருந்து மகாவிஷ்ணு வரை எல்லாக் கடவுள்கள் மீதும் பாடல்கள் எழுதுகிறார். வேதத்தைப் புகழ்கிறார். உபநிஷதங்களின் அடிப்படையில் புதுக் கவிதை படைக்கிறார். கீதையை மொழி பெயர்க்கிறார். ஒருவேளை பாரதியார் என்னைப் போல இந்துத்வா ஆளோ? இஸ்லாம் பற்றி என்ன சொல்கிறார் ‘உங்க’ பாரதியார்?” என்று வம்பளக்க வந்தார் என் பக்கத்து வீட்டுக்காரர். ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் நேரம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போரடிக்கத் துவங்கியிருக்க வேண்டும். வம்புக்கு அலையும் அவர் என் வாயைக் Read more

வாழ்வின் பூதாகாரம்

“அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது அதனிலும் அரிது கூன் குருடு நீங்கிப் பிறத்தல் ” இவ்வுண்மை தெரியாதார் யாருண்டு உலகில். உயிரொன்று உடலெடுத்து உலகினிலே நடமாட உதவும் கரங்கள் எத்தனை, உருப்பெற்று பொறுப்பெடுத்து உருவாக்குவோர் எத்தனை. கலை பயின்று, கல்வி பயின்று, கடவுள் பயின்று, நடமாடும் மனிதர்கள் பயின்று, மாக்களினம் பலவும் பயின்று, வாழ்வு பெற்ற கணங்கள் தான் எத்தனை, எத்தனை. கண்ணில் படாது கருத்தில் மட்டும் கலந்திருக்கும் Read more

பாபருக்கும், ராமருக்கும் பகைமை என்ன?

ஒருமுறை நான் இந்தியாவுக்குச் சென்றிருந்த போது சென்னையிலிருந்து பாண்டிச்சேரிவரை திருவள்ளுவர் பஸ்ஸிலே பயணம் செய்ய நேரிட்டது. காலைநேரம். ஒருவன் தாம்பரம் வரை போக வேண்டுமென்று நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்தான். “எண்டா சாவு கிராக்கி பேமானி காலையில் நூறு ரூபா நோட்டைக் கொண்டு வந்திட்டியாடா, உனக்கெல்லாம் இதே பொழப்பாய் போச்சி. இறங்குடா வண்டியை விட்டு” என்று வாய்க்கு வந்தபடி வசைமாறி பொழிந்தார் கண்டக்டர். அந்த பயணியைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. Read more