மனைவி இறந்த பிறகு மீண்டும் ஒரு திருமணம் செய்த தகப்பன்   தன்னுடைய சிறிய மகனிடம்
கேட்கிறான்..

“உன்னுடைய இப்போதைய அம்மா
எப்படி?”என்று.

அப்போது அந்த மகன் சொன்னான் .

“என் அம்மா என்னிடம் பொய் சொல்பவளாக இருந்தாள்.

ஆனால், இப்போதைய அம்மா என்னிடம் பொய் சொல்வது இல்லை”

இதைகேட்ட தகப்பன் கேட்டான்..!

” அப்படி உன் அம்மா உன்னிடம் என்ன பொய் சொன்னாள்?”

அந்த குழந்தை சிறு சிரிப்புடன் தன்
தகப்பனிடம் சொன்னான் …

“நான் சேட்டைகள் செய்யும்போது என் அம்மாசொல்வாள், எனக்கு இனிமேல் சாப்பாடு தரமாட்டேன்” என்று …

ஆனால் கொஞ்சநேரம் கழிந்த பிறகு என்னை தன்னுடைய மடியில் அமர்த்தி பாட்டுபாடி ,

நிலாவைக்காட்டி கதை சொல்லி அவள்தரும் ஓவ்வொரு பருக்கை சோற்றிலும் அவளுடைய பாசம் இருக்கும்…

ஆனால்…

இப்போதைய அம்மா, நான் சேட்டைகள் செய்யும்போது சொல்வாள் ‘உனக்கு சோறு
தரமாட்டேன்’ என்று .

இன்றுடன் சாப்பிட்டு 2 நாட்கள் ஆகிறது…..

பெற்ற தாய்க்கு நிகர் இந்த உலகில்
யாருமில்லை…!!


1 Comment

Arputha Roslin · அக்டோபர் 1, 2018 at 11 h 57 min

அருமை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

ஆன்மீகம்

வாரியார் படைப்பில், வாழ்வியல் நெறிகள்.

“அன்பால் அறிவால் அகங்குளிரும்
அமுதமொழியால் அனைவரையும்”

தன்பால் ஈர்க்கும் தகைமிகு பேச்சாளர், நல்ல எழுத்தாளர், மூதறிஞர், சித்திரகவி பாடிய கவிஞர், முத்தமிழ் அறிஞர், ஆன்மீகச் செம்மல் என்று அடுக்கிக் கொண்டே போகக்கூடிய வல்லமை பெற்ற வாரியார் சுவாமிகளின் நூல்களைப் படிக்கும் பொழுது தனிப்பெரும் இன்பம் தன்னால் வருவதை நாம் உணர முடியும்.

 » Read more about: வாரியார் படைப்பில், வாழ்வியல் நெறிகள்.  »

கட்டுரை

காதல்

பூவைவிட காமம் மெல்லியது.
அதன் உண்மையை அறிந்தால் வாழ்க்கை அழகு!

காதலர் தினம் கொண்டாடப்படுதல் அவசியமா? என்ற கேள்வியுடன் பல நாடுகள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றார்கள். வியாபார நோக்கத்துடன் காதலர் தினத்தை விலையுயர்ந்த ஒரு விழாவாக மாற்றிவிடுகின்றார்கள் என்றும் இவ்விழா கலாசாரத்தை சீர்குலைக்கின்றது என்றும் பலவாறான எதிர்ப்புகள் நிலவுகின்றன.

 » Read more about: காதல்  »

கட்டுரை

ஒரு பரபரப்பு செய்தி…

செய்திக்காகப் பரபரப்பு அடைந்த காலம் சென்றுவிட்டது. செய்தியால் பரபரப்பு அடைகிற காலம் வந்துவிட்டது. ஒரு தகவல் புதுமையானதாகவும், தேவையானதாகவும், இருக்கும் போதுதான் அது மக்களிடையே விழிப்புனார்வு கொடுப்பதாக மாறுகிறது. மக்களை மாற்றுகிறது. ஒரு செய்தி தரும் தாக்கத்தை பொருத்து ஏராளமானவர்கள் அஜாக்கிரதை நிலையில் இருநது  தங்களைப் ஜாக்கிரதை நிலைக்குப் பழக்கப்படுத்தி கொள்கிறார்கள்.

 » Read more about: ஒரு பரபரப்பு செய்தி…  »