இலக்கணம்-இலக்கியம்

கம்பன் கவிநயம்… தொடர் – 6

கம்பனின் கவித்திறன் அவனது இராமயணக் காவியம் முழுவதிலுமே காணக் கிடைக்கிறது.

அதிலும் ”கோலம் காண் படலம்” ….அருமையிலும் அருமை.

இராமன் வில்லொடித்தப்பின் தசரதன் முதலானோர் பெண் பார்க்கும் படலமாக அமைந்துள்ளது.

 » Read more about: கம்பன் கவிநயம்… தொடர் – 6  »

இலக்கணம்-இலக்கியம்

கம்பன் கவிநயம்… தொடர் – 5

கம்பர் தனது இராமயணக் காவியத்தில் கிஷ்கிந்தா காண்டத்தில் அநுமனை அறிமுகம் செய்துவைக்கிறார். பின் அனுமன் இராமன் லக்ஷ்மணன் இருவரையும் சந்திக்கும் காட்சியில் தனது கவிப் புலமையை நுட்பத்தை அநுமனின் சொற்கள் வழி நமக்கு கவி இன்பத்தை அள்ளித் தெளிக்கிறார்.

 » Read more about: கம்பன் கவிநயம்… தொடர் – 5  »

புதுக் கவிதை

ஏமாற்றுச் சிகரங்களில் ஏறியவாறு!

நற்கொள்கை வகுக்காமல்
அணியில் கூட்டலும்
கழித்தலும் அன்றாடம்
நிகழ்தலின் உச்சம்!

சொத்துக்களைக் குவித்தலும்
பெருக்கலுமே குறிக்கோளாய்
அரசியலார் கொண்டிருக்கும்
அவலநிலை !

காற்புள்ளிகளும் அரைப்புள்ளிகளும்
அன்றாடம் கைதட்டி ஆர்பரிக்க…

 » Read more about: ஏமாற்றுச் சிகரங்களில் ஏறியவாறு!  »

இலக்கணம்-இலக்கியம்

கம்பன் கவிநயம்… தொடர் – 4

கம்பனின் எழுதுகோல் (எழுத்தாணி.....) மேலும் எழுதாமல் நின்ற இடம் காணுங்கள்....சுவையுங்கள். “ வெய்யோன் ஒளி, தன் மேனியின், விரி சோதியின், மறைய பொய்யோ எனும், இடையாளொடும், இளையானொடும், போனான்! மையோ, மரகதமோ, மறி, கடலோ, மழை முகிலோ, ஐயோ, இவன் வடிவு என்பது ஓர், அழியா அழகு உடையான்!” ராமர், சீதை, லட்சுமணன் மூவரும் மரவுறி தரித்துச் செல்கிறார்கள். அப்போது, சூரியன் தன் கதிர்களை விரித்து ஒளிமயமாக உலா வரத் தொடங்குகிறான். ஆனால், ராமரின் திருமேனியில் இருந்து வெளிப் பட்ட ஒளி வெள்ளத்தின் முன்னால், அந்தச் சூரியனே ஒளி மங்கிக் காணப்படுகின்றானாம்.

இலக்கணம்-இலக்கியம்

கம்பன் கவிநயம்… தொடர் – 3

''நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா பறவைகளே பதில் சொல்லுங்கள் மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள் மனதிற்கு மனதை கொஞ்சம் தூது செல்லுங்கள் நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா''

இலக்கணம்-இலக்கியம்

கம்பன் கவிநயம்… தொடர் – 2

தம்பி இலக்குவனால் நிர்மாணிக்கப்பட்ட பர்ணசாலையின் வெளியில் இராமர் படுத்து ஓய்வில் இருக்கிறார். அந்த நேரத்தில் தனது கணவன் வித்யுத்சிகுவனைப் போரில் பறிகொடுத்து கைம்பெண்ணாகக் காட்டில் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் சூர்ப்பனகை அங்கே வருகிறாள். அரைகுறையாய் கண்களை மூடியும் திறந்தும் துயில் கொள்ளும் இராமனைக் காண்கிறாள். அவனது அழகில் மயங்கி தனது அரக்க உருவத்தை அழகிய உருவாக மாற்றிக் கொண்டு இராமனை நோக்கி நெருங்குகிறாள் ... அவளது எழில் கொஞ்சும் மேனியழகு ... அவளது நடை எப்படி இருந்ததது என்பதை கம்பன் நம் கண் முன்னே தனது கவிதை வரிகளால் அழகுபடக் கூறுகிறான் ... பாருங்கள் ... '' பல்லவ மனுங்கச் பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடிய ளாகி அஞ்சொலிள மஞ்சையென அன்னமென் மின்னும் வஞ்சியென் நஞ்சமென வஞ்சமகள் வந்தாள் '' அவள் ஒரு மயிலைப்போல் அலுங்காது அடியெடுத்து வைத்து மென்மையாய் வருகிறாள். [ மேலும்… ]

இலக்கணம்-இலக்கியம்

கம்பன் கவிநயம்… தொடர் – 1

‘கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ இது உயர்வு நவிற்சிக்காகக் சொல்லப்பட்டது என்று சிலர் கூறினாலும், அந்த அளவிற்கு கவி ஆற்றல் மிக்கவனாகக் கம்பன் விளங்கினான் என்பதே உண்மை. கவிச்சக்கரவர்த்தி என்று கம்பனைச் சொல்லுவது உண்மை;

 » Read more about: கம்பன் கவிநயம்… தொடர் – 1  »