தொடர் –38

ஹைக்கூ வாசிக்கும் முறை

கவிதை என்பது இலக்கியத்தின் உயரிய வடிவம்..நமது தமிழ் இலக்கிய மரபில் வெண்பா, விருத்தம், கலிப்பா, கும்மி என பல வகைகள் உண்டு.

அவை எதுகை, மோனை, சந்த நயங்களுடன் வாசிக்கவும் அழகாக அமையும்.

ஏனெனில் அவை ஒரு கட்டுக்குள் தாள லயத்தோடு எழுதப்படுபவை.

ஜப்பானிய ஹைக்கூவும் மரபுசார் கவிதையே. ஆனாலும் இங்கு ஜப்பானிய மரபுகள் பலவற்றை நாம் உதறித் தள்ளிவிட்டு ஒருசில முக்கிய பண்புகளை மட்டுமே கணக்கில் கொண்டு ஹைக்கூவை எழுதுகிறோம்.

அவ்வாறு எழுதப்படும் கவிதைகளை பொதுவில் மற்றவர்களுக்கு வாசித்துக் காட்டும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் சிலவுண்டு.

எடுத்துக் காட்டாக…

உடைந்த வளையல் துண்டு
குளத்தில் எறிந்தேன்.
அடடே… எத்தனை வளையல்கள்.

  • அறிவுமதி

(புல்லின் நுனியில் பனித்துளி. தமிழின் இரண்டாவது ஹைக்கூ நூல் இது)

இந்தக் கவிதையை ஒரு கவியரங்கிலோ அல்லது பொது வெளியில் மற்றவரிடத்தில் வாசிக்கும் போது..

உடைந்த வளையல் துண்டு
குளத்தில் எறிந்தேன்.

இவ்விரு வரிகளையும் ..நிறுத்தி நிதானமாக வாசித்து… பின் மீண்டும் அதே வரிகளை இரண்டாவது முறையாகவும் வாசித்து நிறுத்த வேண்டும். (இங்கு உடனடியாக மூன்றாவது அடியை வாசித்து விடக் கூடாது).

இப்போது வாசகன்..கேட்பவர் எனக்கூட எடுத்துக் கொள்ளலாம். உடைந்த வளையல் துண்டுகளை குளத்தில் எறிந்தால், அது மூழ்கி விடும் என சிந்திப்பார். பின் அவருக்கே ஓர் ஐயம் கூட எழலாம். ஒரு வேளை மிதக்குமோ… வளையல் நெகிழியாக இருந்தால்… இவ்வாறான சிந்தனைகள் வாசகரை அலைக்கழிக்க வாய்ப்புண்டு. அது தானே ஹைக்கூவின் ஹைலைட். பல கோணங்களை வாசகரிடத்தில் ஏற்படுத்துவதே ஹைக்கூவின் சிறப்பாகும்.

ஏனிந்த நடைமுறை எனில், ஹைக்கூ கவிஞனோடு வாசகனையும் பங்கெடுத்துக் கொள்ள வைக்கும் ஒரு கவிதை வடிவம் என்பதாலும், அவ்வாறு நிறுத்தும் பட்சத்தில் வாசகன் ஈற்றடி என்னவாக இருக்கும்…? என யோசிக்கவும் இடம் தருகிறதல்லவா… இதுவே இதற்கான காரணமாகும்.

இப்போது சற்று நேரத்திற்குப் பின்..

ஈற்றடியான…

அடடே… எத்தனை வளையல்கள்.!

என ஈற்றடியை நிறைவு செய்யும் போது, ஆஹா… என்னவொரு உண்மையான வெளிப்பாடு. குளத்தில் எறியப்படும் ஒரு வளையல் பல வளையல்களாக பிறப்பெடுத்து விட்டதே என உற்சாகம் கொள்ள வைக்கும்.

ஆகவே நண்பர்களே… ஹைக்கூவை வாசிக்கும் போது இந்த நடைமுறையைக் கையாளத் தவறாதீர்கள்.

இன்னும் வரும்..

முன் தொடர்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

மின்னிதழ்

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர் கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.