தொடர் 28

ஹைக்கூவில் உத்திகள் என்பது ஹைக்கூவை வடிவமைக்க பயன்படுகிறது. பொதுவில் ஹைக்கூவில் ஈற்றடியை திருப்பம் வருமாறு அமைப்பதும், முரணாக அமைப்பதுமே உத்தி முறையாகும்.

எதுகையில் அமைப்பது மோனையில் அமைப்பது என அதுவும் உத்திமுறைகளாக சொல்லப் படுகிறது. ஆனால் அவை ஹைக்கூ வகைமையில் தான் கொள்ளப்படுமேயன்றி எதுகையோ, மோனையோ உத்தி முறை ஆகாது.

சொல்லப்படும் வகையில் அது ஒரு படிமத்தைச் சார்ந்தோ… குறியீடு பயின்று வருவதாகக் கொண்டோ ஹைக்கூ படைக்கப் படுகிறது எனலாம்.

ஹைக்கூ என்பது வெறும் காட்சி மட்டுமல்ல. மனதிற்கு மிக நெருக்கமான ஒரு வெளிப்பாடு. உணர்வுகளை நேரடியாக பிரதிபலிக்காமல் படிமத்தின் வாயிலாக அல்லது ஒரு குறியீட்டின் வாயிலாக வெளிப்படுத்திய ஒரு கவிதை வடிவமே ஹைக்கூ.

ஹைக்கூவை சரிவர புரிந்து கொள்ளாதவர்களும், எழுதத் தெரியாதவர்களுமே அதைப் பற்றி அனேக குறைகளைச் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்.

ஹைக்கூ நேரடியான ஒரு பொருளையும் சொல்லும். மறைமுகமான ஒரு பொருளையும் சொல்லும். கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்கள் சொன்னது போல… குறைந்த பட்சம் இரண்டு பொருளையாவது சுட்டிக் காட்ட ஹைக்கூ தவறுவதில்லை. இந்த இரு காட்சி பரிமாணத்திற்கு ஈற்றடி திருப்பமே காரணமாகிறது எனலாம்.

இதை கவனியுங்கள்..

வீட்டில் அழைப்பு மணி
அழுத்தினேன்
எட்டிப் பார்த்தது நாய்.

  • கன்னிக்கோவில் இராஜா

இந்த கவிதையை திருப்பத்திற்கான உத்திக்கான ஹைக்கூவாக கொள்ளலாம். அழைப்பு மணி அழுத்த எட்டிப்பார்க்க வேண்டிய மனிதர்களுக்கு பதிலாக நாய் எட்டிப் பார்ப்பது எதிர்பாரா ஒரு திருப்பத்தை கவிதைக்கு தந்து சுவாரஸ்யமாக்குகிறது.

இதை கவனியுங்கள்..

புகழ் பெற்ற நதி
நகரத்தைக் கடந்து போகிறது
முற்றிலும் சாக்கடையாக..!

  • க.அய்யப்பன்

இந்த ஹைக்கூவை முரணுக்கு எடுத்துக் காட்டாக கொள்ளலாம். நதி என்பது தூய்மையானதாக அல்லவா ஓட வேண்டும். ஆனால் இங்கோ அந்த நதியானது நகரத்தை கடந்து செல்லும்போது “சாக்கடையாக” முரணாக அல்லவா ஓடுகிறது..

ஹைக்கூவின் அழகிற்கும், சிறப்பிற்கும் இந்த இரு உத்திகள் மிகப் பெரும் பங்காற்றுகின்றன. இது போக சிறப்பான இன்னொரு உத்திமுறையும் உண்டு அதுவே “ஜென் உத்திமுறை”… இதுவே ஹைக்கூவின் ஆதார உத்தி. ஏனெனில் ஹைக்கூ தோன்றியதும், ஹைக்கூவை வளர்த்தெடுக்க உதவியதும் ஜென் உத்தி முறையே. இது குறித்து தெளிவாக பல விளக்கங்களுடன் பிறகு காண்போம்.

இன்னும் வரும்…

 முன்தொடர் 27


2 Comments

Raju Arockiasamy · செப்டம்பர் 10, 2019 at 3 h 55 min

அருமையான நடையில் தெளிவாக விளக்கங்கள்… சிறப்பான கட்டுரை…

Code of destiny · ஏப்ரல் 16, 2025 at 17 h 02 min

I’m really inspired with your writing talents as smartly as with the structure for your weblog. Is that this a paid topic or did you modify it yourself? Either way keep up the nice high quality writing, it’s rare to peer a nice weblog like this one these days!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Related Posts

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

மின்னிதழ்

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர் கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.