தொடர் 08

கவிதையில் கற்பனை முற்றிலும் இருக்கக்கூடாது. உவமையோ.. உருவகப்படுத்துவதோ.. ம்ஹூம் அதுவும் ஆகாது.

வார்த்தைகளிலும் சிக்கனம் தேவை.  அடிகளோ மூன்று அடி தான் இவ்வளவு கட்டுப்பாடு தந்து கவிதை எழுதுங்கள் எனில் மலைப்பாய்தான் இருக்கும். ஆனால் ஹைக்கூ கவிதைகளின் சிறப்பியல்புகளே இது தான்.

இதில் ஹைக்கூ கவிதைக்கான வடிவமைப்பு மூன்றடி என பார்த்தோம். ஆனால் ஜப்பானில் ஹைக்கூ மூன்றடியாக இருக்கும் என்பதில் உறுதியில்லை. ஏற்கனவே நாம் கண்டுள்ளோம் ஜப்பானிய எழுத்துக்கள் சித்திர எழுத்துக்கள் என்று. இதனை அவர்கள் இடமிருந்து வலமாக நம்மைப் போல் எழுதுவதும் உண்டு. கூடவே மேலிருந்து கீழும் கூட எழுதுகிறார்கள். அவர்களுக்கான ஹைக்கூ மரபு 5 / 7 / 5 அசை மரபு தான்.

அவர்கள் கடைபிடிக்கும் முக்கியமான விசயம். அசை மரபும், கிகோ எனும் பருவ கால வார்த்தையையும், கிரெஜி எனப்படும் திருப்பம் தரும் வார்த்தையையும் தான் ஹைக்கூவில் பிரதானப் படுத்துகிறார்கள். கிரெஜி எனும் திருப்பம் தரும் வார்த்தை 12 வது அசையின் முடிவில் சரியாகத் துவங்குகிறது. இதையே நாம் ஈற்றடி திருப்பம் என்கிறோம்.

மேலிருந்து கீழாக எழுதுவதனால் அடிகள் என்பது ஹைக்கூவில் ஜப்பானியக் கவிதையில் அடிபட்டுப் போகிறது. ஆனால் மேற்கத்திய கவிஞர்கள் அனைவரும் ஹைக்கூவிற்கான வரையறையாக மூன்றடியை கடைபிடிக்கிறார்கள். இதனையே ஏகமனதாக அனைவரும் ஏற்றுக் கொண்டும் ஹைக்கூவிற்கு மூன்றடி என வரையறை செய்திருக்கிறார்கள். நாமும் அதையே இங்கு கடைபிடிக்கிறோம்.

எனவே ..ஹைக்கூ என்பது, மூன்றடியில்தான் எழுதப்பட வேண்டும் என்பது முதல் விதி.

வயலும் மலையும்
பனியின் ஆளுமையில்
ஒன்றுமில்லாமல் போகிறது.

  • ஜோசோ ( 1662 – 1704 ) ஜப்பானியக் கவிஞர்

இந்தக் கவிதையில் ஆளுமையில் என்ற வார்த்தை முடிந்தவுடன் கிரெஜி எனும் திருப்பம் தரும் வெட்டு வார்த்தை துவங்கிவிடுவதைக் காணலாம். அது போலவே கிகோ எனப்படும் பருவத்தைக் குறிக்கும் வார்த்தையும் இங்கிருப்பதை காணலாம். ஜப்பானிய ஹைக்கூ மரபு இது.

இடிந்த வீட்டில்
யுத்தம் முடிந்த பின்னே
காய்மரம் பூத்திருக்கிறது.

  • ஷிகி. (1867 – 1902 )

கொல்லாதே
கைகளையும் கால்களையும்
தேய்த்துக் கொள்கிறது “ஈ”.

  • இஸ்ஸா ( 1763 – 1827 )

ஹைக்கூ காணும் காட்சியை அப்படியே காட்சிபடுத்துவதுதான் என்பதை மேல கண்ட ஹைக்கூ தெளிவு படுத்துகிறதல்லவா? ஆம்.. கண்ணால் காணும் காட்சியை மிகைப் படுத்தாமல் அப்படியே நீங்கள் மூன்றடியில் பிரதிபலித்தால் போதுமானது.

அடுத்து ஹைக்கூவில்..வார்த்தைகளின் வலிமை.

இன்னும் வரும்..

  தொடர் 07


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

மின்னிதழ்

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர் கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.