பாடல் – 72

நிறைநெஞ் சுடையானை நல்குர வஞ்சும்
அறனை நினைப்பானை அல்பொருள் அஞ்சும்
மறவனை யெவ்வுயிரும் அஞ்சுமிம் மூன்றும்
திறவதில் தீர்ந்த பொருள்.

(இ-ள்.) நிறை – புலன்கள்மேற் போகாமல் நிறுத்தப்படும், நெஞ்சு உடையானை – நெஞ்சுடையவனுக்கு, நல்குரவு அஞ்சும் – வறுமை பயப்படும்; அறனை – அறத்தையே, நினைப்பானை – நினைக்கின்றவனுக்கு, அல்பொருள் – பாவம், அஞ்சும் – பயப்படும்; மறவனை – கொலையாளிக்கு, எவ்வுயிரும் – எல்லா உயிர்களும், அஞ்சும் – பயப்படு; இ மூன்றும் – ஆகிய இந்த மூன்றும் திறவதில் – வன்மைகளுள், தீர்ந்த பொருள் – சிறப்பாக முடிந்த பொருள்களாம்; (எ-று.)

(க-ரை.) வறுமை நிறைநெஞ்சுடையானைச் சேரவும், மறம் அறநினைப்பாளனை யணுகவும், எவ்வுயிரும் கொலையாளியைக் காணவும் அஞ்சும் என்பது.

நிறை நிறுத்தல், தொழிற்பெயர். முன்னர் அறம் என்றமையால் அல்பொருள், பாவம் அல்லது மறம் எனப்பட்டது. திறவது : பண்புப் பெயர். திறவதிற் றீர்ந்த பொருள் என்பதற்கு வேறுபாட்டில் நீங்கித் தம்முட் சிறந்த பொருளுள்களாம் என்றும் பொருள் கூறலாம்.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20

வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.

இது 3 ஆவது பாவகை

மாமுன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர் இவை வெண்பா

நேர்முன்நேர்
நிரைமுன் நிரை
நேர் முன் நிரை
நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா

ஆனால் கலிப்பாவில்

காய்முன் நிரை வரும்
அதாவது கலித்தளை மிகுந்து வரும்
மற்ற தளைகள் குறைந்து வரலாம்
புளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்
கனிச்சீர்கள் வாரா
அளவடிகளால் ஆனது

கலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 20  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 19

தொடர் 19

வெண்பாதான் கடினம் என்று புலவர்கள் சொல்வதுண்டு. வெண்பாவில் சிறப்பாக எழுதுபவர்களை வெண்பாப் புலி என்றும் அழைக்கப்படுவார்கள். நிறைய தமிழ் நூல்கள் வெண்பாவில் புனையப் பட்டுள்ளன. நீங்களும் இப்போது வெண்பா எழுத முற்பட்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 19  »