பாடல் – 65
அச்சம் அலைகடலின் தோன்றலும் ஆர்வுற்ற
விட்டகல் கில்லாத வேட்கையும் – கட்டிய
மெயந்நிலை காணா வெகுளியும் இம்மூன்றும்
தந்நெய்யில் தாம்பொரியு மாறு.
(இ-ள்.) அலைகடலின் அலைகின்ற – கடலைப்போல், அச்சம் தோன்றலும்; மாறி – மாறிப் பெரும் பயம் (ஒருவர் உள்ளத்தில்) தொன்றுதலும்; ஆர்வு உற்ற – அனுபவித்தவற்றை, விட்டு அகல கில்லாத – விட்டு நீங்கமாட்டாத, வேட்கையும் – விருப்பமும்; கட்டிய – (அறிவுடையோரால்) யாக்கப்பட்ட செய்யுள்களின், மெயந்நிலை – பொருளின் உண்மை நிலையை, காணா வெகுளியும் – அறியாத சினமும்; இ மூன்றும் – ஆகிய இந்த மூன்றும்; தம் நெய்யில் – (ஆடு முதலானவை) தம்மிடத்துப் பிறந்த நெய்யிலே, தாம் பொரியும் ஆறு – தாம் பொரிகின்ற வகை போல எவரிடத்துப் பிறந்தனவோ அவரைத் தம்மில் வேவச் செய்வனவாம்; (எ-று.)
(க-ரை.) நெஞ்சில் எஞ்சா அச்சமும், நீக்க மாட்டாத வேட்கையும், உண்மை யுணராமையா லுண்டாகும் சினமும் ஒருவனுக்கு மிகுந்த வருத்தத்தைச் செய்வனவாம்.
அலைகடல் : வினைத்தொகை. கடலின் : இன் : ஐந்தனுருபு, ஒப்புப் பொருள், ஆர்வு : தொழிலாகுபெயர். கட்டிய மெய்ந்நிலை என்பதற்குப் பெரியோரால் உறுதியாகத் தழுவப்பட்ட மெய்யினது நிலை எனினுமாம். ஆடு முதலானவை : இசையெச்சம். அகலகில்லாத : இதில் கில் ஆற்றலுணர்த்தும் இடைநிலை.