பாடல் – 11

விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும் வீழக்
களியாதான் காவா துரையுந் – தெளியாதான்
கூரையுள் பல்காலும் சேறலும் இம்மூன்றும்
ஊரெல்லாம் நோவ துடைத்து.

(இ-ள்.) விளியாதான் – (தன்னை) அழையாதவன், கூத்து ஆட்டு – கூத்தாட்டத்தை, காண்டலும் – (தான் சென்று) பார்ப்பதும், வீழ – (தளர்ந்து) விழும்படி, களியாதான் – மதுவுண்டு களியாதவனாயிருந்தும், காவாது – காவாமல், உரையும் – (வழுப்படச்) சொல்லுதலும், தெளியாதான் – (தன்னை) நம்பாதவன், கூரையுள் – வீட்டிலே, பல்காலும் – பலமுறையும், சேறலும் – செல்லுதலும், இ மூன்றும் – ஆகிய இம் மூன்றும், ஊரெல்லாம் – ஊரிலுள்ளோரெல்லாரும், நோவது – துன்பப்படுங்குற்றத்தை, உடைத்து – உடையன; (எ-று.)

(க-ரை.) அழைக்கப்பெறாத ஆட்டத்தைக் காணப்போவதும், களியன்போல் காவாது உரைத்தலும், தன்னை நம்பாதவன் வீட்டிற் செல்லுதலும், வருந்தத்தக்க குற்றங்களாம்.

கூத்து – நாடகம்.ஆட்டு – ஆடுதல், ஆட்டு : விகாரப்பட்ட முதனிலைத் தொழிற் பெயர், “கூத்தாட் டவைக்குழாத் தற்றே” என்ற திருக்குறள் 332 இலும் கூத்தாட்டு, கூத்தாடுதல் என்னும் பொருளில் வந்துள்ளது. கூத்தாகிய ஆடல் எனின் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை, களி -கள்ளுண்ணுதலால் ஏற்படும் வெறி; இதையுடையவன் களியெனப் படுவான். விளியாதான், களியாதான், தெளியாதான் : வினையாலணையும் பெயர்கள். உரை : முதனிலைத் தொழிற்பெயர். பல்காலும், உம் : முற்றுப் பொருளானது. நோவது – நோவதற்கு ஏதுவானது; நோ : பகுதி முதல் நீண்டது. அ : சாரியை, து : ஒன்றன்பால் விகுதி, இம் மூன்றும் உடைத்து என்பது பன்மையில் ஒருமை மயக்கம். ஊர் : இடவாகு பெயர். விளியாதான். கூத்தாட்டுக் காண்டல் என்பதற்கு இனிமையாகப் பாடாதவன் கூத்தாட்டத்தைச் செய்தலும் என்றும் கூறலாம். விளித்தல் – ஒலித்தல், ஈண்டுப் பாடலின் மேற்று. காண்டல் – செய்தல்; “முனைவன் கண்டது முதனூல்” என்பதிற் காண்க. கூரை : சினையாகு பெயராய் வீட்டையுணர்த்திற்று.

முன் பக்கம் செல்ல… தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20

வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.

இது 3 ஆவது பாவகை

மாமுன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர் இவை வெண்பா

நேர்முன்நேர்
நிரைமுன் நிரை
நேர் முன் நிரை
நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா

ஆனால் கலிப்பாவில்

காய்முன் நிரை வரும்
அதாவது கலித்தளை மிகுந்து வரும்
மற்ற தளைகள் குறைந்து வரலாம்
புளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்
கனிச்சீர்கள் வாரா
அளவடிகளால் ஆனது

கலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 20  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 19

தொடர் 19

வெண்பாதான் கடினம் என்று புலவர்கள் சொல்வதுண்டு. வெண்பாவில் சிறப்பாக எழுதுபவர்களை வெண்பாப் புலி என்றும் அழைக்கப்படுவார்கள். நிறைய தமிழ் நூல்கள் வெண்பாவில் புனையப் பட்டுள்ளன. நீங்களும் இப்போது வெண்பா எழுத முற்பட்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 19  »