10

சற்று தூரமாக வடகிழக்கு திசைக்கு சென்றவர்கள் கற்களை உடைத்து, நேர்த்தியாக்கி இருப்பிடங்களை அமைத்தனர்…

பிரிந்த குழுவினர் ஒருவரை ஒருவர் தேடும் முயற்சியில் இறங்க…

ஒவ்வொரு பகுதியிலும், நிலத்தை சீராக்கி விவசாயம் செய்து, எல்லோரும் செழிப்பாக வாழ்ந்தனர்.

தங்களிடம் இருக்கும் விவசாய பொருட்களை ஒரு குழுவினர் மற்றொரு குழுவினரோடு பகிர்ந்து, பண்டமாற்று முறையை கையாண்டனர்.

பிரிந்து சென்ற குழுக்கள் தங்களுக்கென்று சட்ட, திட்டங்களும், கட்டுப்பாடும், யாகசாலை, பாடசாலைகள், மூதாதயைர்களுக்கு கோவில்கள் எழுப்பி, வாழ்ந்து வந்தனர்…

மக்கள் அதிகமாகவும், செழிப்பாகவும், கேள்வி ஞானம், கற்றல் அறிவு, மருத்துவ அறிவு, வானவியல் அறிவு, சமய நெறிகள் போதிப்பது, சுட்ட கற்களின் பயன்பாடுகளை அதிகம் கையாளும் உத்தி, பனை ஓலைகளில் முக்கிய குறிப்புகள் மற்றும், வைத்திய முறைகளை எழுதி, பாதுகாத்து வைத்துக்கொண்டு, தலைமுறை தலைமுறையாக வைத்தியம் செய்தும் வந்தனர்.

அளவற்ற அறிவும், ஆன்மீக ஞானமும் பெற்று, மக்களிடையே ஒற்றுமை நிலவச்செய்தும், அறம் செய்தும், மக்களை நல்வழிப்படுத்தியும், கட்டுக்கோப்புடன், அழகுற… குமரி நாட்டின் அதிபதியாக தென்மதுரை நகரை வற்றாத ஜீவநதியான பஃறுனி ஆற்றின் கழிமுகத்தில் ஆதிசிவன் நிறுவினார்.

தன் நாட்டு மக்களின் மொழிப்புலமையை அறியும் ஆவலில், மாபெரும் சபை ஒன்றை சுட்ட செங்கற்கள் கொண்டு நிறுவினார். அதில் அழகு சேர்க்கும் விதமாக…

அடிக்கடி… ஆதிசிவன் கனவில், வடக்கு எல்லையில் உள்ள கைலாய மலையில் இருந்து, கல் எடுத்து வந்து கோவில் எழுப்ப, சமிக்ஞைகள் உந்த…

ஆதிசிவனுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நடக்கும், எங்களது யாளிகள் படையோடு, சிறந்த வீரம் பொருந்திய வீரர்களை, தன்னுடன் அழைத்துக்கொண்டு, ஈட்டி, மற்றும். வில், அம்புகளோடு கைலாய மலையை அடைந்தோம்..!

ஆதிசிவன் எங்களது யாளிகள் படை, மற்றும் வீரர்களை மலை அடிவாரத்திலே நிறுத்தி விட்டுச் சென்றார்.

நாட்கள், மாதங்கள் கடந்தன…

கடும் குளிரால் சிலர் மடிந்தனர், சிலர் உணவுக்காக, அவ்விடத்தை விட்டு நகர்ந்தனர்… சிலர் அபரிமிதமான மூப்பும் அடைந்தனர்.

சில மாதங்கள் கழித்து…

ஆதிசிவன் சடை முடியுடன், திருநீறு பூசிய மேனியோடு, பிரமாண்டமான கருநீல நிறத்தில் வழவழப்பான படிகக்கல் ஒன்றை அகன்ற தோள்களில் சுமந்த படி, வந்தார்.

எங்களது யாளிகள் படைகளின் உதவியோடு, தமது குமரி நாட்டின் தலைநகரான தென்மதுரைக்கு கொண்டுவந்து சேர்த்தார்.

திருச்சபையின் கருவறையில், வானசாஸ்த்திர வல்லுநர்கள் துணையோடும், புலவர்கள், முனிவர்கள், சித்தர்கள் அருளோடும் ஆசியோடும்… நிறுவினார்.

ஆதிசிவன் தன் முழு ஆன்மீகத்தேடலின் இறுதி வடிவாக, கொண்டு வந்த காரணத்தினால்

தென்மதுரை மக்களால் ‘லிங்கம்’ எனும் சொல் முதன்முதலாக பயன்படுத்தப்பட்டது.

லிங்கம் எனும் சொல் சிவனின் அருவுருவ நிலையைக் குறிப்பதாகும். ‘லிம்’ என்பது உயிர்களின் தோற்றத்தைக் குறிக்கும்.

‘கம்’ என்பது அவற்றின் ஒடுக்கத்தைக் குறிக்கும் சொல்லாகும்.

உயிர்கள் தோன்றவும்,ஒடுங்கவும் உரிய இடமாக சிவன் உள்ளதனால்…

இப்பெயரே…

பிற்காலங்களில் ‘சிவலிங்கம்’ என்று அழைக்கப்பட்டது.’

‘ம்…

நேரம் ஆச்சு..! மீதியை நாளை வந்து கேட்கிறேன்…’ என்று சொல்லி, சக்தி தனது வீட்டிற்கு சென்றாள்.


1 Comment

casino en ligne · மே 18, 2025 at 14 h 24 min

Hi there friends, its great article regarding educationand fully defined,
keep it up all the time.
casino en ligne
Hello very cool website!! Guy .. Excellent .. Amazing ..
I’ll bookmark your blog and take the feeds
also? I’m satisfied to find a lot of useful info here within the publish,
we’d like develop extra strategies in this regard, thanks for sharing.
. . . . .
casino en ligne France
Post writing is also a fun, if you be acquainted with afterward you can write
or else it is difficult to write.
casino en ligne
Nice post. I learn something totally new and challenging on websites
I stumbleupon on a daily basis. It will always
be exciting to read through content from other authors and practice something from other web
sites.
casino en ligne
I read this post fully about the comparison of
most up-to-date and previous technologies, it’s awesome article.

casino en ligne
Hi, Neat post. There is a problem with your web site in web explorer,
may test this? IE nonetheless is the market chief and a big section of other people
will miss your magnificent writing due to this problem.

meilleur casino en ligne
Excellent website you have here but I was wanting to know if you knew of any user discussion forums that cover the same topics talked about here?
I’d really like to be a part of online community where I can get suggestions from other experienced
individuals that share the same interest. If you have any recommendations,
please let me know. Thanks!
casino en ligne fiable
What’s Taking place i’m new to this, I stumbled
upon this I’ve discovered It positively useful and it has helped
me out loads. I am hoping to give a contribution & help different customers like its aided me.

Great job.
casino en ligne
This website was… how do you say it? Relevant!! Finally I’ve found something which
helped me. Appreciate it!
casino en ligne
I go to see every day some sites and websites to read articles,
but this website offers feature based writing.
meilleur casino en ligne

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Related Posts

தொடர் கதை

மஹ்ஜபின் – 3

தொடர் – 03

அவர் வேலை தேடி சவூதி அரேபியா வுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த காலம் அது.

கனவுச் சிறைக்குள் சுதந்திரக் கைதி யாய் சிறகடித்த அவளின் தாய்க்கு வெளி நாட்டு வாழ்க்கையில் இஷ்டம் இல்லை.

 » Read more about: மஹ்ஜபின் – 3  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 2

தொடர் – 02

எப்படியாவது தனது மனதில் உள்ள மூன்றாண்டுக் கால காதலை மஹ்ஜபினிடம் சொல்லி விட வேண்டும் என்ற முடிவுடன் அன்றொரு நாள் அவளைச் சந்தித்து தனது காதலையும் நேசத்தையும் காத்திருப்பையும் சொல்லி முடித்தான் கஷ்வின்.

 » Read more about: மஹ்ஜபின் – 2  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 1

மஹ்ஜபின் என அறிந்து கொண்ட நாட்களில்  இருந்து கஷ்வின் அவளை தன் இதயவரையில் மாளிகை கட்டி குடியமர்த்தி இருந்தான். மறு புறமாக ரீஸாவை பார்க்கும் போதல்லாம் அவள் மஹ்ஜபீன் தான் எனத் தெரியாமல் அவளை தப்புத் தப்பாக எண்ணியதை நினைத்து வெட்கித்து தலையை கவிழப் போட்டான். சுமார் மூன்று நான்கு வருடங்களாக அவனது நாடி நாளங்களில் எல்லாம் உருத் தெரியாமல் ஊடுருவி வாழ்ந்து கொண்டிருந்த மஹ்ஜபினின் முகத்தை கண்டு விட்டான் கஷ்வின்.... யுகம் யுகமாய் தவமிருந்த முனிவனுக்கு கிடைத்த வரம் போல இன்றேனும் மஹ்ஜபினைக் கண்டு விட்ட ஜென்மானந்தம் அவனுக்குள் சொல்லி மகிழ வார்த்தைகளே இன்றி அவளுடைய உள்ளமெங்கும் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன..