தொடர் 26

ஹைக்கூ மூன்றடியில் எழுதப்படும் ஒரு பெரிய அற்புதம். இந்த மூன்றடியில் எந்த அடி சிறப்பு வாய்ந்தது எனக் கேட்டால்… பலரும் கூறும் ஒரே பதில் கவிதைக்கு திருப்பத்தையும், முரணையும் தந்து கவிதைக்கு அழகைத் தரும் ஈற்றடியே சிறப்பு வாய்ந்தது என்பார்கள். உண்மையும் அதுவே. இருப்பினும்… அதற்கு இணையான ஆற்றலையும்..சொற் இணைப்பையும் உருவாக்கித் தரும் ஒரு அடி… ஹைக்கூவின் இரண்டாவது அடி.

ஏனெனில்… இந்த இரண்டாவது அடியே… முதலடியையும், மூன்றாவது அடியையும் ஒருசேர இணைக்கும் வல்லமை பெற்றது. அது மட்டுமல்ல ஜப்பானிய ஹைக்கூ மரபுப்படி கிரெஜி எனப்படும் திருப்பம் தரும் அசை இந்த இரண்டாவது அடியின் இறுதியில் தான் துவங்குகிறது.

இரண்டாவது அடியே முதலடியோடு இணைந்து கவிதைக்கு ஒரு கருத்தினை தருகிறது. அந்த இரண்டாவது அடிதான் ஈற்றடியோடு இணைந்து ஒரு புதிய பொருளையும் தர உதவுகிறது. எனவே ஹைக்கூவில் நீங்கள் கவனித்து செயலாற்ற வேண்டியது ஈற்றடி மட்டுமல்ல, இரண்டாவது அடியையும் தான். அதுவே முதலடியோடும் தொடர்பு கொண்டு ஒரு பொருளைத் தருவதோடு… ஈற்றடியோடு தொடர்பு கொண்டும் திருப்பத்தையோ, முரணையோ வழங்கி ஹைக்கூவை சிறப்படையச் செய்கிறது.

இந்த ஹைக்கூவை கவனியுங்கள்..

பேருந்துப் பயணம்
முழுதும் நிரம்பி வழிகிறது
இனிமையான இசை..!

பேருந்துப் பயணம்
முழுதும் நிரம்பி வழிகிறது

எனும் போது, பேருந்தில் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிவதாக எண்ணத்தை உருவாக்கும் . ஆனால் ஈற்றடியில்…

இனிமையான இசை.. எனும் போது பேருந்து முழுதும் நிரம்பி வழிவது இனிமையான இசை என்றாகி விடுகிறது. ஆகவே திருப்பம் வர உறுதுணையாக இருப்பதோடு, முதலடி மற்றும் ஈற்றடியை இணைக்கும் பாலமாகவும் இருப்பது இரண்டாவது அடி என்பதை ஹைக்கூவில் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இன்னும் வரும்…

முன்தொடர் 25


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

மின்னிதழ்

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர் கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.