தொடர் 24.

ஹைக்கூவில் வார்த்தை சுருக்கம்

இந்த தொடர் துவங்கிய போது வாசகர் ஒருவர் ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார். அதிகப்படியான வார்த்தைகளைக் கொண்டும் பலர் ஹைக்கூ எழுதுகிறார்களே. ஆனால் வார்த்தைச் சுருக்கமே நல்லது என்கிறீர்களே… எது சரியானது என்று.

இதை இங்கு தெளிவு படுத்துவோம்..

ஜப்பானில் பிறந்த ஹைக்கூ.. முதலில் தன் பயணத்தைத் துவக்கியது மேற்கத்திய நாடுகளில் தான். ஆங்கிலேயரின் காலனி ஆதிக்கத்தில் இருந்தமையால்… அங்கு தான் முதலில் ஹைக்கூ பிரபலமானது. அவர்களால் ஈர்க்கப்பட்ட ஹைக்கூ மேற்கத்திய நாடுகளில் மொழி பெயர்க்கப் பட்டதோடு, அவர்களது சிலபலில் எழுதப்பட்டது. ஏற்கனவே நாம் இங்கு கண்டிருக்கிறோம். மேற்கத்திய கவிஞர்களுக்கு கற்பனையின்றியோ, அதிகப்படியான சொல்லாடல் இன்றியோ கவிதை எழுதும் பழக்கமில்லை. நம் தமிழில் முதலில் நாம் கையாண்டது அவர்களது ஹைக்கூ கவிதைகளின் மொழிபெயர்ப்பையே.. . எனவே வார்த்தைகள் அங்கு அதிகப்படியாகவே வந்து விழுந்திருந்தன. ஆனால் நேரடி ஜப்பானிய ஹைக்கூ மொழி பெயர்ப்பில் அந்தளவு வார்த்தைகள் இல்லை. அங்கு 5 – 7 – 5 அசையமைப்பில் சிக்கனமாகவே ஹைக்கூ எழுதப்பட்டது. அசையை மேற்கத்திய கவிஞர்களும் பின்பற்றினர் எனினும், மொழிபெயர்ப்பில் அதை விரித்தே எழுதும் படியாயிற்று. அது மொழிபெயர்ப்பின் தவறுதானேயன்றி கவிதையின் தவறல்ல.

ஆகவே தான், ஆங்கில மொழிபெயர்ப்பினைக் கண்ணுற்ற பலரது ஹைக்கூகளும் வார்த்தைகளை சிக்கனமாக பயன்படுத்த தவறினர் எனலாம்..

உதாரணமாக இதை கவனியுங்கள்..

இரவின் மேகங்கள் கடந்து செல்கையில்
சற்றுக் கருமை படரும்
நிலவின் முகப்பு

  • கோபாலகிருஷ்ணன்

இக்கவிதையை இவர் தன்முனைக் கவிதைக்காக நான்கு வரியில் வடிவமைத்து எழுதியிருந்தார். நான் இதனையே மேற்கத்திய பாணி ஹைக்கூவாக எடுத்துக் கொண்டு, ஜப்பானிய பாணியில் எழுதப்படுமாயின்…

விரையும் மேகங்கள்
சற்றே கருமை படரும்
நிலவின் முகப்பு.

என மாற்றினேன். இந்த வார்த்தை சுருக்கமே ஹைக்கூவிற்கு அழகு சேர்க்கும்.

அதே போல்…

ஆர்வமாய் கதை சொல்ல சிறுமி
கேட்டுத் தலையாட்டும்
பக்கத்தில் நின்ற ஆட்டுக்குட்டி.

  • வேலூர் இளையவன் (ஹைக்கூ உலகம் தொகுப்பு)

சிறுமி சொல்லும் கதை
கேட்டுத் தலையாட்டுகிறது
ஆட்டுக் குட்டி..!

என வார்த்தைகளை சுருக்க இன்னும் சிறப்பாவதைக் காணலாம்.

பொதுவில் வார்த்தைகளை சுருக்குங்கள். நிறைய முறை வாசித்துப் பாருங்கள். தொடர்ந்து கவிதையை ஒரு சிற்பியின் கண்ணோட்டத்தில் செதுக்குங்கள். உண்மையில் அது அழகாய் மிளிரும்.

இன்னும் வரும்…

 முன்தொடர் 23


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

மின்னிதழ்

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர் கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.