பாடல் – 48

வைததனை இன்சொல்லாக் கொள்வானும் நெய்பெய்த
சோறென்று கூழை மதிப்பானும் – ஊறிய
கைப்பதனைக் கட்டியென் றுண்பானும் இம்மூவர்
மெய்ப்பொருள் கண்டுவாழ் வார்.

(இ-ள்.) வைததனை – ஒருவன் வைததை, இன் சொல் ஆ – இனிய சொல்லாக, கொள்வானும் – கொள்கின்றவனும், நெய்பெய்த – நெய் வார்த்த, சோறு என்று – சோறு இது ஆம் என்று, கூழை மதிப்பானும் – கூழை மதிக்கின்றவனும், கைப்பு அதனை – கைக்கின்ற பொருளை, கட்டி என்று – வெல்லக்கட்டி என்று ஊறிய தன் வாயில் ஊறும்படி, உண்பானும் – உண்கின்றவனும்; இ மூவர் – ஆகிய இம் மூவரும், மெய்ப்பொருள் – உண்மையாகிய பரம் பொருளை, கண்டு வாழ்வார் – கண்டு – வாழ்பவர் ஆவார்.

(க-ரை.) வன்சொல்லை மென்சொல்லாகவும், கூழைப் பாற் சோறாகவும், கைப்புணவை இனிப்புணவாகவும் கருதுகின்றவர் மெய்ப்பொரு ளுணர்ந்தவர்.

வைதது : படர்க்கை ஒன்றன்பால் இறந்தகாலச் செயப்பாட்டு வினையாலணையும் பெயர். ஆ : ஆக என்பதன் ஈறு தொக்கது. ஊறிய : செய்யிய என்னும் வாய்பாட்டு எதிர்கால வினையெச்சம் மெய்ப்பொருள் உணர்ந்தவர்கட்கு உடலுக்கும் உயிருக்குமுள்ள குண வேற்றுமைகள் தெரியுமாதலால்வைதல் உடலையன்றி உயிரைச் சேராதென்றும், கைப்பும் இனிப்பும் மண்ணின் நிலைகளேயன்றி உண்மையல்லவென்றும் அறிந்ததனால், அறிவில் வேற்றுமையில்லையென்று தோன்றி உடம்பின்மேல் பற்று இல்லாதது பற்றி அவற்றைப் பாராட்டார் என்பது. கூழ் – புல்லரிசி, ஊறிய கைப்பதனை என்று கொண்டு ஊறிய என்பதற்கு மிகுந்த என்றும் பொருள் கூறலாம்; இப்பொருளில் பெயரெச்சம்.

முன் பக்கம் செல்ல…    தொடரும்

 

 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20

வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.

இது 3 ஆவது பாவகை

மாமுன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர் இவை வெண்பா

நேர்முன்நேர்
நிரைமுன் நிரை
நேர் முன் நிரை
நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா

ஆனால் கலிப்பாவில்

காய்முன் நிரை வரும்
அதாவது கலித்தளை மிகுந்து வரும்
மற்ற தளைகள் குறைந்து வரலாம்
புளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்
கனிச்சீர்கள் வாரா
அளவடிகளால் ஆனது

கலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 20  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 19

தொடர் 19

வெண்பாதான் கடினம் என்று புலவர்கள் சொல்வதுண்டு. வெண்பாவில் சிறப்பாக எழுதுபவர்களை வெண்பாப் புலி என்றும் அழைக்கப்படுவார்கள். நிறைய தமிழ் நூல்கள் வெண்பாவில் புனையப் பட்டுள்ளன. நீங்களும் இப்போது வெண்பா எழுத முற்பட்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 19  »