செந்தமிழ்நா டென்கையிலே செவியருந்தும் தேனே!
செப்பியசீர் பாரதியின் சேதிபடித் தேனே!
எப்படியோர் மொழிக்கிந்த இனிமை? நினைந் தேனே!
பாரதிமுன் என்வினவை
கேட்கவிழைந் தேனே!
வுடன்சற்றே இந்தவிழை
விழியுமயர்ந் தேனே!
தனைக்கனவில் எம்கவிக்கோ
கண்டுவியந் தேனே!
அவனடியைப் அந்தநொடி
பற்றிவிழுந் தேனே!
ஆதுரத்தில் அணைத்தெடுத்த
சிறகுமுளைத் தேனே!

சேமநலம் சிலபொழுதுச்
பேசியிருந் தேனே!
மீசைநயம் சீர்முறுக்கு
பார்த்துமகிழ்ந் தேனே!
பேசியபின் பலகதைகள்
நினைவுமடைந் தேனே!
வினவிவிடத் பாரதியை
திடமுமிகுந் தேனே!
கவிஞனிடம் உலகமகாக்
வினவையொப்பித் தேனே!
சொன்னவிடை உடனவனும்
உணர்ந்துமலைத் தேனே!
செய்தவன்சொல் கலகமிகச்
பதிலுமலைத் தேனே!
கீழதனைக் கற்றவர்க்காய்
கவியினில்தந் தேனே!

நூறுமலர்த் தேனிநாளும்
தேடிச்சென் றோடித்
தேடிவந்துச் சேர்க்குமந்த
நறவுநயம் போலே
ஆனிமுத்து மாலையைப்போல்
அகிலமுள்ள இன்பம்
அத்தனையும் சேர்த்துவைத்த
அதிசயமாய்ச் சீடா!
தாய்மொழியை மானிடர்தம்
மாந்திமகிழ் வெய்வார்!
தாய்மொழியாம் மாத்தமிழ்நம்
நானுமதைக் கேட்கத்
தேனினிமைச் செவியுணர்ந்தேன்!
நாட்டில் தெள்ளுதமிழ்
திரும்புமிட மெங்குமன்றுத்
தமிழ்வழங்கக் கேட்டே

அன்றென்றே பாடிவைத்தேன்
பாவலனுஞ் சொல்லப்
பட்டென்றே கனவுகலைந்
தோடவிழித் தேனே!
புத்தூக்கம் நாடியிலே
ஓடலுணர்ந் தேனே!
ஆங்குடனே நாணமுமே
மேவயிளைத் தேனே!
இச்சகத்தில் பேடியராய்
பிரியமடைந் தோராய்
பிறமொழியில் பேசிமகிழ்
பேதையராய் மக்கள்
கூடிநிற்கு மிற்றையநாள்
தமிழ்நாட்டைக் கண்டே
கூசுகின்ற உள்ளமுடன்
கூனியமர்ந் தேனே!

இளைப்பாறச் சிந்தனையின்
சோலைநுழைந் தேனே!
தமிழ்க்காற்றில் சிற்றலையாய்த்
கவலைதொலைத் தேனே!
பலபுலவர் வந்துதினம்
வளர்தலறிந் தேனே!
வருங்காலம் வண்டமிழின்
ஓர்ந்துகுதித் தேனே!
நிலைமீளும் செந்தமிழின்
சேதிநுகர்ந் தேனே!
சேயோனைச் சீருயரச்
சேர்ந்துதுதித் தேனே!
மலைபொடிக்கும் வந்தவிடர்
வாகுபணிந் தேனே!
மேலணியும் வானவரும்
நீறுமணிந் தேனே!

அயல்மொழியாம் ஆங்கிலமாம்
ஆயிரங்கள் ஆக
அவைவரினும் தமிழ்மகளை
அழித்தலென்ப தில்லை!
படைநடையில் தீங்கவிஞர்
தீம்பெலாமு மோடும்!
தமிழ்மொழிதான் தேயமெலாம்
அரசியென்றே ஆளும்!
உணர்ந்தாற்பின் ஈங்கிதனை
ஏக்கமிழந் தேனே!
இனிமையிலே எம்தமிழின்
மனமுலயித் தேனே!
பாரதியைக் தூங்கியதால்
கண்டுசிலிர்த் தேனே!
பாவலர்க்கும் தூண்டிவிட்ட
நன்றியுரைத் தேனே!


1 Comment

சுந்தரராசன் · நவம்பர் 16, 2016 at 20 h 14 min

நன்றி! எனினும் அடிதோறும் முதலிறு சீர் இடம்மாறியுள்ளதெனத் தெரிவது என் காட்சிப்பிழையா? கண்மயக்கா?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »