தேனே…

செந்தமிழ்நா டென்கையிலே செவியருந்தும் தேனே! செப்பியசீர் பாரதியின் சேதிபடித் தேனே! எப்படியோர் மொழிக்கிந்த இனிமை? நினைந் தேனே! பாரதிமுன் என்வினவை கேட்கவிழைந் தேனே! வுடன்சற்றே இந்தவிழை விழியுமயர்ந் தேனே! தனைக்கனவில் எம்கவிக்கோ கண்டுவியந் தேனே! அவனடியைப் அந்தநொடி பற்றிவிழுந் தேனே! ஆதுரத்தில் அணைத்தெடுத்த சிறகுமுளைத் தேனே! சேமநலம் சிலபொழுதுச் பேசியிருந் தேனே! மீசைநயம் சீர்முறுக்கு பார்த்துமகிழ்ந் தேனே! பேசியபின் பலகதைகள் நினைவுமடைந் தேனே! வினவிவிடத் பாரதியை திடமுமிகுந் தேனே! கவிஞனிடம் Read more