என் வாழ்வில்
நடந்ததை நினைக்கையில் – என்
மெய் பொய்யாவென
கிள்ளிப் பார்க்க தோணுது!

நடுநிசியில் மொனித்தது …
புதுவருட வாழ்த்துகளை,
பரிமாறிய மகிழ்வில்,
உறங்கச் சென்ற வேளை!

திடீரென ஒற்றை வலி
இதயத்தை அண்மித்ததாய்,
வியர்க்காத வலி
பயத்தால் வாய் மொனித்தது!

நேரம் செல்லச் செல்ல,
புழுவாய் துடித்தேன்.
பார்வையில் எதுவும்
விழவே இல்லை!

இருண்ட யுகத்துள்
நுழைவது போல உணர்வு.
நினனவு தப்பலை.
எதுவும் செய்ய முடியலை!

மரணத்தின் நுழைவாயிலில்,
எட்டி விட்டாயென
ஒற்றைக் கீற்றாய்
புத்தியில் உறைத்தது!

கரணம் தப்பினால் மரணம்,
தங்கையை பார்க்க
அண்ணன் உள்ளான் என,
கண்களை இறுக மூடினேன்!

வலியும் அதிகரிக்க,
இனி பிழைக்கேன்,
நம்பிக்கையும் வலுப்பெற
நினைவும் தவறியது!

விழி திறந்து பார்க்கையில்,
இறுதி பயணத்திற்காய்
நுழைந்து மீண்டவளாய் – வாழ்வின்,
கடைசி நிமிடம்!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.