இயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா
குறைபலச் சொல்லி குறைபடும் மாந்தர்
கறைபட நாக்கு கசந்திடும் வார்த்தை
தரையினில் கொட்டித் தளராமல் வீசி
மறைதனை ஓத மறக்கும் நிலையும்
கறையாமல் நின்று கசந்திடும் வாழ்வில்
அறைதனில் சோர்ந்து அடங்கி முடங்கி
பறையடி போலலையும் பற்பல எண்ணம்
நிறைந்துதான் நெஞ்சினில் நிம்மதி போக்குவரே!