நம்தோழர்!

(பாவகை: கலித்துறை) மழைவளம் வேண்டி மண்ணுழவு காக்கும் விவசாயி களைப்புடன் ஓய்ந்து கரங்களை வேற்று வேலைக்காய் அழைப்பினை ஏற்று அவனியில் மாறிச் சென்றிடுங்கால் உழைப்பினால் சோற்றுக் குரமிடல் இல்லா தொழிவதாகும்! உலகினில் பஞ்சம் உணவதில் வராமல் காத்திடவோர் அலகென உழைப்பின் ஆற்றலைத் தருமோ ருன்னதமாய் நிலமதை உழுது நீக்கம றவுண வூட்டுகின்ற நலமிகுத் தொண்டு நாட்டிடும் உழவர் நம்தோழர்! ஆற்றினில் நீரும் ஆழமாய் வற்றும் துயர்களுடன் காற்றினில் ஈரம் கலங்கிடும் Read more

அடங்கி முடங்கி!

இயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா குறைபலச் சொல்லி குறைபடும் மாந்தர் கறைபட நாக்கு கசந்திடும் வார்த்தை தரையினில் கொட்டித் தளராமல் வீசி மறைதனை ஓத மறக்கும் நிலையும் கறையாமல் நின்று கசந்திடும் வாழ்வில் அறைதனில் சோர்ந்து அடங்கி முடங்கி பறையடி போலலையும் பற்பல எண்ணம் நிறைந்துதான் நெஞ்சினில் நிம்மதி போக்குவரே!

உயர்வென்ன தாழ்வென்ன!

(பாவகை: இயல் தரவிணைக் கொச்சகக்கலிப்பா) பாடுபடும் கைகள் பகலவன் போலொளி கூடுமெழில் தன்மானக் கூடெனவே ஓங்கிநிதம் ஆடுகிற சோலைகளாய் அன்னமிடும் வான்மழையாய் ஈடுயிணை இல்லாத ஈகையின் வேர்களாம்! நாடுகிற எண்ணத்தின் நம்பிக்கை கோள்களாய்க் காடுகரை வித்திட்டுக் காய்கள் பயிரிட்டு மேடுகளைச் சீர்செய்து மென்மையாகச் செப்பனிட்டு வாடுகிற மண்ணையும் வாழ்விப்போர் பாட்டாளி! உளமெல்லாம் வேண்டும் உணவுதனை ஆக்க தளமாக மண்ணினில் தானியங்கள் நட்டு வளமான நல்லுரம் வாஞ்சையுடன் தூவிப் பலந்தரும் காயும் Read more

க(பெ)ற்ற அனுபவம்!

பாவகை: வஞ்சித் தாழிசை கூடம் அதிரும் சாடல் கேட்டு வேடம் கலைந்த பாடம் பெ(க)ற்றேன்! தேடி வந்து சாடித் தீர்த்தக் கேடிச் சொல்லில் கோடி பெ(க)ற்றேன்! ஆடு களத்தில் வாடும் உயிரைப் பாடு படுத்தும் கேடும் பெ(க)ற்றேன்! — சிகரம் ஏறி மகனும் ஒதுக்கி பகடி கொடுக்கும் தகனம் பெ(க)ற்றேன்! மமதை கொண்டு நமட்டுச் சிரிப்புக் கமழும் உறவில் எமனைப் பெ(க)ற்றேன்! ஊரும் பகைக்க சேரும் உறவில் யாரும் மதிக்காப் Read more