கூடம் அதிரும்
சாடல் கேட்டு
வேடம் கலைந்த
பாடம் பெ(க)ற்றேன்!
தேடி வந்து
சாடித் தீர்த்தக்
கேடிச் சொல்லில்
கோடி பெ(க)ற்றேன்!
ஆடு களத்தில்
வாடும் உயிரைப்
பாடு படுத்தும்
கேடும் பெ(க)ற்றேன்!
—
சிகரம் ஏறி
மகனும் ஒதுக்கி
பகடி கொடுக்கும்
தகனம் பெ(க)ற்றேன்!
மமதை கொண்டு
நமட்டுச் சிரிப்புக்
கமழும் உறவில்
எமனைப் பெ(க)ற்றேன்!
ஊரும் பகைக்க
சேரும் உறவில்
யாரும் மதிக்காப்
பேரும் பெ(க)ற்றேன்!