என்மேல் விழுந்த உளி

“கணக்கு ஆசிரியர் விஷயத்தில் நீ சந்தோஷப் படவேண்டும் என்றேன். எத்தனையோபேர் மீது அக்கறை எடுத்துகொள்ளாத பல ஆசிரியர்கள் உள்ளபோது உன் மீது அக்கறை எடுத்துக்கொள்ளும் கணக்கு ஆசிரியரை நீ பாரட்ட வேண்டும். அவர் உன்னை யார் என்று தெரிந்திருக்கிறார் உன்னை கேள்வி கேட்பதன் மூலம் உனது முன்னேற்றத்தை கவனிக்கிறார் என்று அர்த்தம். இப்படி ஒரு நல்ல ஆசிரியர் இருக்கும்போது நீ கவலைப் படவேண்டாம். அதிக நேரம் எடுத்து பயிற்சி செய் முயற்சி செய்தவன் தோற்றதில்லை. ஆசிரியர் சொல்லும் எதையும் நேர்மறையாக எடுத்தக்கொள் “ என்று சொல்லிவைத்தேன். நாராயணனுக்கு புரிந்ததோ இல்லையோ நான் ஒரு நம்பிக்கையை அவனுள் விதைத்தாகவே எண்ணினேன்.

இனப் படுகொலை

சின்னாவுக்கு மூளை நரம்புகளுக்குள் ரத்தம் கசிந்து தலை வெடித்துவிடும் போல் இருந்தது, துடிக்கிறதா இல்லை நடிக்கிறதா என்று சந்தேகம் எழும் படி அவன் இதயம் கொஞ்சம் நின்று நின்று துடித்தது. பாவம் அந்த சின்ன இதயம் அதுவும் எத்தனை துன்பங்களைத்தான் தாங்கும். விரக்தி வெருப்பு வலி சோகம் என்று எல்லாம் அவனை வாட்ட அவன் கொஞ்சம் திரும்பிப்பார்த்தான் இன்னும் சீதா அழுது கொண்டே தான் இருந்தாள்.அபலை , அவள் என்ன Read more

காத்திருத்தல்

மழை நேரத்தில்தான் இந்த மரங்களையும் செடிகளையும் பார்க்க முடியும் என்று தோன்றியது. வெறும் பார்வையிடல் இல்லை. ரசித்து உட்கார்ந்து கொள்ளும் அந்தச் சின்னக்குட்டியை வேறு எப்போது அழைத்து வந்தாலும் இப்படி ஒரு சந்தோஷம் இருக்காது. இப்போது தூறல் கூட இல்லை.

சின்னக்குட்டி கையில் ஒரு குச்சியை எடுத்துக் கொண்டு வேகமாகச் சுற்றிக் கொண்டே வந்தாள். குச்சியைச் சுற்றிக் கொண்டு வரும்போதும் பாட்டு. எந்த விஷயமானாலும் பாட்டு மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கும். மீன் பிடிக்கலாமா? என்று கேட்டாள். ஊஞ்சல் ஆடினாள். மறுபடியும் வாட்ச்மேனின் குரல் கேட்டது. முகம் சுளித்துச் சிணுங்கிக் கொண்டே “வாங்கப்பா போகலாம்” என்றாள்.

தனிக்குடித்தனம்

பிரசவம் முடிந்து ஒரு மாதம் கழித்து இப்போதுதான் மனைவியையும் குழந்தையையும் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். குழந்தை பிறந்தபோது பார்த்தது. ஒரு மாதம் பார்க்காமல் இருந்ததே மிகக் கொடுமையாகத்தான் இருந்தது. அந்த பிஞ்சு விரல்கள், எதையும் புதிதாக ஆர்வத்துடன் பார்க்கும் விழிகள். சிரிக்கும்போது குழிவிழும் கன்னங்கள். பார்க்கப் பார்க்க ஆசையாகத்தான் இருந்தது. மனைவிக்கு பிரசவ வலி எடுப்பதாக சொல்லவும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டார்கள். நானும் அவசரமாக விடுப்பு எடுத்துக் கொண்டுசென்றால், Read more

ஃபேஸ்புக் பொண்ணு!

குமாருக்கு எல்லாமே ஃபேஸ்புக்தான். வீட்டில், அலுவலகத்தில், பஸ்ஸில்,டிரைனில்,பாத்ரூமில் என எந்நேரமும் ஃபேஸ்புக்கிலேயே வாழ்ந்தான். ஃபேஸ்புக்கிலேயே சுடுகாடிருந்தால் அவன் செத்தபிறகு அங்கேயே புதைத்துவிடலாம் என்கிற அளவுக்கு ஃபேஸ்புக்கையும் அவனையும் பிரிக்க முடியாது! அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து படிய தலைவாரி, முகத்துக்கு பவுடரும் போட்டு.. கடவுளை வணங்கி, கந்த சஷ்டி கவசமும் பாடி திருநீரு பூசி கீபோர்டை தொட்டுக்கும்பிட்டுவிட்டு கனிணி முன் அமருவான் குமார். கையில் தினத்தந்தி பேப்பரை எடுத்துவைத்துக்கொள்வான். அதில் Read more

காமக் குரங்கு

“இவள் தங்கமானவள்? வேடிக்கைக்காரி இரவு முழுவதும் என்னிடம் தமாஷாகப் பேசிக்கொண்டிருந்தாள். வெளியே போய் இவருடைய யோக்யதையைச் சொல்லிவிட்டால், மானம் போகுமே என்பதற்காக, நான் கடிதம் கொடுத்தனுப்பினேன்” என்று மதுரவல்லி கூறினாள். மறுபடியும் மிராசுதாரர் மிட்டாதாரரை முறைத்துப் பார்த்தார். “உன்னுடைய மானத்தைக் காப்பாற்றத்தானே என் மகள் முயன்றாள், இதற்கு அவள் மீது கோபிக்கிறாயே முட்டாள்” என்று பார்வை பேசிற்று.

நண்பனும் ஸ்நேகிதியும்

அவளது மல்லிகைப்பூ, அவன் விலகினாலும் தொட்டு தொட்டுப் பேசும் களங்கமில்லா அவளின் நேசம், குளிர்ந்த கரங்கள், அழகிய சிரிப்பு.. இவையெல்லாம் அவளின் காதல் நிஜம் தான் என்று ஆனந்தனின் இதயத்திற்கு சொல்ல கட்டியணைத்து ஒரு முத்தமிட உள்மனம் ஆணையிட்டும் நாகரீகம் அறிவோடு வந்து இருவரையும் கட்டுக்குள் அடக்கி, “ நல்ல நண்பர்கள், ஆனால் திருமணம் முடிந்தவர்கள்” என்று உணர்த்திய பொழுது அவர்கள் நிஜத்திற்கு வந்தார்கள்.

பிம்பம்

அம்மா, ஏம்மா நான் இவ்வளவு கருப்பா இருக்கேன்? கடந்த இரண்டு ஆண்டுகளில் புவனா இதே கேள்வியைப் பல முறை கேட்டு விட்டாள். தான் சிவப்பாக இல்லையென்று அவளுக்குக் கழுத்து வரை குறை. ஒரே மகளின் மனம் அவளுக்குக் கண்ணாடியின் பிரதி பிம்பமாகவே தெரிந்திருந்தது. புவனாவின் வயதில் இத்தகைய எண்ணங்கள் தோன்றுவது மிகவும் இயற்கை. பதினைந்து வயதில் தன்னைப் பற்றிய எண்ணங்கள் அதிகம் இளையர்களுக்கு மேலிடுவதும் வந்தனா அறிந்ததே. தன்னை மற்றவர்கள் Read more

கடவுளின் பெயரால்

சூரியன் உச்சியைவிட்டு சாய்ந்திருந்த விஷயம் மேகமூட்ட திரையின் வழியே தெரிந்தது. பசி வயிற்றை கிள்ளுவதால் நீர்ச் சோறாவது சாப்பிட்டு வரலாம் என்று வீட்டுக்குப் புறப்பட்டாள். நரித்தொல்லைக்கு பயந்து குட்டியினைத் தனது தோளில் இட்டு கருப்பங்கொல்லை வழியாக ஆடுகளை ஓட்டி வீடு திரும்பிக்கொண்டிருந்தாள்.

நாக் அவுட் நாவன்னா

ஊர் வீட்டினால் பெரிய உபயோகம் இல்லை என்றாலும், யாருக்கும் தங்கள் உரிமையை விட்டுக்கொடுக்க மனம் இல்லை. குட்டையோ, நெட்டையோ பஞ்சாயத்தாரை வைத்து ஏழு பங்குகளாகப் பிரித்துத் திருவுளச்சீட்டு போட்டுப் பிரித்துக் கொள்ளலாம் என்ற நாவன்னாவின் யோசனைக்கும் மற்றவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை

கடைசியாக நாவன்னா இப்படிச் சொன்னார், “நாம் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் பங்கு வைத்துக் கொண்டால்தான் நல்லது. அதற்கு நீங்கள் யாரும் உடன் படுவதாகத் தெரியவில்லை. இதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. வீட்டின் அமைப்புப்படி நான்கு பேர்கள்தான் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளமுடியும்.ஆகவே நம்மில் நான்கு பேர்கள்தான் இந்த வீட்டை வைத்துக் கொள்ள வேண்டும். மற்ற மூன்று பேர்கள் விலைவைத்துப் பணத்தை வாங்கிக் கொண்டு வெளியேறிவிட வேண்டியது தான். வேறு வழியில்லை ! “