நூல் வெளியீட்டு விழா

ஸாகிரா டீச்சரின் உள்ளத்தில் குடியிருந்த வலியும், குழப்பமும் இன்னும் முற்றாகத் தணியவில்லை. அதிலிருந்து முழுமையாக விடுதலை பெற முயற்சிக்கிறாள். அதுவும் அவளால் முடியாமல் இருந்தது. அவளது நூல் வெளியீட்டு விழாவுக்கு இன்னும் ஒரு சில தினங்களே பாக்கி இருந்தன. அதற்குள் அவளது இல்லத்தை வந்தடைந்த ஒரு கடிதம் அவளது உள்ளத்தை மிகவும் காயப்படுத்தியது. இன்னும் எதிலும் நிம்மதியாக ஈடுபட முடியாத அளவுக்கு வேதனை அவளை ஆட்கொண்டிருந்தது. இன்னும் யார் யாருக்கு Read more

உறவுகள் அழிவதில்லை…

அப்பா … அங்கே என்ன செய்யுறீங்க ?எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்றீங்க ? நேத்து தானே அந்த டாக்டர் உங்கள நல்லா ரெஸ்ட் எடுக்க சொன்னார் .. ஆனா நீங்க யார் பேச்சையும் கேட்காம கொல்லைய கொத்திக்கிட்டு இருக்கீங்க … சீனு டாக்டர்னா ஆயிரம் சொல்வாங்கப்பா அதுக்காக சும்மாவே இருக்க முடியுமா ?? ப்ளீஸ் ப்பா வீட்டுக்குள்ள போங்க … ரெஸ்ட் எடுங்க …மகன் பேச்சை தட்ட முடியாமல் வீட்டுக்குள் Read more

நல்லவன்

குமரேசனைக் கண்டாலே பிடிக்காது யசோதாவுக்கு. எப்படிப் பார்த்தாலும் ரெட்டை அர்த்த சினிமா பாடல்களையே முணுமுணுத்துக்கொண்டிருப்பான். “மெதுவா மெதுவா தொடலாமா? உன் மேனியிலே என் கை படலாமா?” என்று பாடுவான். “பளார்’ என ஓங்கி அறை விடலாமா?” என பதிலுக்குப் பாடத் தோன்றும். ஆனால், அடக்கிக் கொள்வாள். நிர்வாகி கூப்பிட்டார் என்று வேகமாக நடந்தால், “மெல்லப்போ, மெல்லப்போ மெல்லிடையாளே மெல்லப்போ…” என்று பாடுவான். பொறுக்கி. அந்த அலுவலகத்திலே அவளுக்குப் பிழத்த ஒரே Read more

இறுதி ஆசை

கற கறக்கும் லுமாலா சைக்கிள் ஆட்களை கண்டதும் முகமன் கூறி புன்னகையோடு ஒலிக்கும் இரண்டு மணிச் சத்தம், ஹம்ஸா பாய் என எல்லோர் வாயிலும் பழக்கப்பட்ட பெயர், நாட்டாமை வேலை செய்து மனைவியையும் நான்கு குமருப் பிள்ளைகளையும் கவனித்துக்கொண்டிருக்கும் அவரை எப்படித்தான் செலவுகளை சமாளிக்கிறீங்க என்று கேட்டால், “எல்லாம் என்ட கைலயா இருக்கு??? படச்சவனுக்கு தெரியாதா யார எப்படி கவனிக்கனும்னு, அவன் பாத்துக்குவான்” என்று புன்னகை பூத்தபடியே சொல்லும் ஹம்ஸா Read more

தாடி ஏன்?

நேர்முகத் தேர்வுக்காக காத்திருந்த அன்வரின் மொபைல் போன் ஒலித்தது. போனை ஆன் செய்த அன்வர் ‘சொல்லுடா..’ என்றான். ‘எங்கடா இருக்க… இண்டர்வியூ போனியே என்னாச்சு..’ என்றான் எதிர் முனையில் பேசிய அன்வரின் நண்பன் ரமேஷ். ‘மூணு ரவுண்ட் கிளியர் பண்ணிட்டேன்டா.. கடைசி ரவுண்ட் ஹெச்.ஆர். ரவுண்டுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்…’ என்றான் அன்வர். ‘ஓ.. ஓ.கே.டா.. நல்லா பண்ணு.. ஆல் தி பெஸ்ட்… நான் அப்பறமா கால் பண்றேன்’ என்று Read more

தெளிவுகள்

“என்ன நினக்கிறான்னு! சத்தியமா என்னால யூகம்பண்ண முடியலக்கா” இப்படித்தான் முதன்முதலில் பேசஆரம்பித்தான் பிச்சைமுத்து என்னிடம். முகத்தை கவனித்தேன். சிவந்துவீங்கியிருந்தது. அழுதிருப்பான் போலும். அத்தனை விரக்தி,சலிப்பு அந்தமுகத்தில்..”சாவும் வரமாட்டேங்குது எனக்கு…” அழுதுமுடிக்கட்டும் என்று காத்திருந்தேன்.வடிகாலுக்கு பின் தெளிவு பிறக்கும். இந்த வீட்டுக்கு குடிவந்து இரண்டுவருடமாக பிச்சைமுத்துவிடம் அவ்வளவாக பேசியதில்லை.. கிராமங்களில் புதியஆட்கள் தலைத்தெரிந்தாலே கடைசிதெருக்கோடிவரை தெரிந்துவிடும். கேட்காமலே நலம்விசாரிப்பு என்றபெயரில் புதுஆட்களின் விவரங்கள் தெரிந்துக்கொள்வார்கள். தேவையான உதவிகளும் கேட்காமலே செய்துதருவது கிராமத்து Read more

உங்களில் ஒருத்தி

காதறுந்த மஞ்சப்பைதான் SCHOOL BAG.. அரசு நடுநிலைப்பள்ளி ஐந்தாம்வகுப்பு வரை. பாலினப் பேதமின்றி, “இவன் அடிச்சான் டீச்சர்” “இவள்என் சிலேட் ஒடச்சுட்டா”.. இதான் அதிகபட்ச! பசங்க பொண்ணுங்க குற்றச்சாட்டா இருக்கும்.. மதியம் பெரும்பாலும் பழையசாதம். ஊறுகாய்மட்டைக்கு ரெண்டு பைசா. இதுதான் லஞ்ச்.. எப்போதோ இட்லி. சக தோழர்களும் நடுத்தரவசதிதான் என்னைபோல. தோழர்கள் பிட்சா பர்கர் போல அதிசயமாய் பிய்த்துக்கொள்வார்கள். அவர்கள் கொண்டுவரும் பழையது எப்போதும் போல் எனக்கு.. எட்டாம்வகுப்புவரை அப்பள்ளியில் Read more

பதறிய காரியம் சிதறிப்போகும்

வாலிபமிடுக்கு, வாலிப்பான உடற்கட்டு, அங்கொன்றும் இங்கொன்றுமாக அரும்பிய மீசை, வாழ்க்கையின் அத்தியாயங்களை மீட்டவொண்ணா பேதலித்த நிலையில் ஜடமாய்ப் படுத்திருந்தான் பருவக்காளை விசாகன். குமுறிக்குமுறி அழுத கண்ணீர் முத்துக்கள் கன்னத்தில் தாரை தாரையாக வடிய அவன் முன்னே அமர்ந்திருந்தாள் அவன் தாய் அமலா.   ஆண்டாண்டு காலங்கள் வானொலி என்னும் சமுதாய முன்னேற்ற வான் பரப்பில் பொன்மொழிகளையும்,  வாழ்வியல் சிந்தனைகளையும் வடித்து வடித்து பிறர் வாழ்வுக்கு வளம் சேர்த்த இந்த உள்ளமானது Read more

உனக்கென இருப்பேன்…

3 நிமிட சிறுகதை “ஹாய்டா ராஜேஷ்..” “ஹாய் உமா.. என்ன சர்ப்ரைஸ் காலிங்..” “என்னமோ தெரியலடா.. இன்னிக்கி காலையிலேயிருந்தே ஒன்னோட நெனப்புதான்.. அஞ்சி வருஷத்துக்கு முன்னால இந்த தேதியிலதான் நாம மொதமொதலா சந்திச்ச நாளுங்குறதாலகூட இருக்கலாம்..” “ஓ.. அதுக்கப்புறம் நம்ம வாழ்க்கையில எவ்ளவோ நிகழ்ச்சிகள் நடந்துட்டதால நா மறந்துட்டேன் உமா.. காதல்ல பெண்களுக்கு மட்டும் ஞாபகசக்தி அதிகம்தான்..” “ஆமா ராஜேஷ்.. சிட்டியிலேயிருந்து ஒங்க கிராமத்துக்கு என்.எஸ்.எஸ். கேம்ப்க்காக வந்த என்ன Read more

காத்திருப்பு

பிரண்டு படுத்த படுக்கையிலே தடவிப் பார்த்த கைகளுக்குத் தட்டுப்படாத மனைவி தேகம் உணர்ந்து துடித்தெழுந்தான் விஜய். என்ன செய்கிறாள் இவள். இன்னும் நித்திரை கொள்ளாமல் அவன் கைபட்டு மின்சாரம் தொழிற்பட்டு மின்விளக்கு வெழுத்தது. அறையின் வெளியே அவதானித்தான். சமையலறை வெளிச்சம் கதவிடுக்கூடாக கண்களுக்குப் பட்டுத் தெறித்தது. சமையலறை சென்றான். அங்கு மேசையிலே கைநீட்டிக் கையே தலையணையாய் மேசைமேல் முகம் புதைத்து தனை மறந்து தூங்கிக் கொண்டிருந்தாள், கீதா. “கீதா……” தட்டி Read more