திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 95

பாடல் – 95 அறிவழுங்கத் தின்னும் பசிநோயும் மாந்தர் செறிவழுங்கத் தோன்றும் விழைவும் – செறுநரின் வெவ்வுரை நோனு வெகுள்வும் இவைமூன்றும் நல்வினை நீக்கும் படை. (இ-ள்.) அறிவு அழுங்க – நல்லறிவு கெடும்படி, தின்னும் – வருத்துகின்ற, பசிநோயும் – பசியாகிய நோயும், மாந்தர் – நல்லோர், செறிவு அழுங்க – நெருங்குதல் கெடும்படி, தோன்றும் விழைவும் – உண்டாகும் விருப்பமும்; செறுநரின் – பகைவரிடத்துண்டாகும், வெவ்வுரை – Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 94

பாடல் – 94 நண்பில்லார் மாட்டு நசைக்கிழமை செய்வானும் பெண்பாலைக் காப்பிகழும் பேதையும் – பண்பில் இழுக்கான சொல்லாடு வானுமிம் மூவர் ஒழுக்கம் கடைப்பிடியா தார். (இ-ள்.) நண்பு – நட்புக்குணம், இல்லார்மாட்டு – இல்லாதவரிடத்தும், நசைக்கிழமை – அன்புரிமையை, செய்வானும் – செய்கின்றவனும்; பெண்பாலை – மனைவியை, காப்பு – காப்பதை, இகழும் – இகழுகின்ற, பேதையும் – அறிவில்லாதவனும்; பண்பு இல் – குணமில்லாத இழுக்கு ஆன Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 93

பாடல் – 93 இருளாய்க் கழியும் உலகமும் யாதும் தெரியா துரைக்கும் வெகுள்வும் – பொருளல்ல காதல் படுக்கும் விழைவும் இவைமூன்றும் பேதைமை வாழும் உயிர்க்கு. (இ-ள்.) இருளாய் – (அறிவில்லாதவர்க்கிடமாய் அதனால்) இருட்டாய், கழியும் – நாள்கழிக்கின்ற, உலகமும் – இடமும், யாதும், (நன்மை தீமைகளில்) ஒன்றும், தெரியாது – தெரியாமல், உரைக்கும் – சொல்கின்ற, வெகுள்வும் – கோபமும்; பொருள் அல்ல – நற் பொருள் அல்லாதவற்றில், Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 92

பாடல் – 92 விழுத்திணைத் தோன்றா தவனும் எழுத்தினை யொன்றும் உணராத ஏழையும் – என்றும் இறந்துரை காமுறு வானுமிம் மூவர் பிறந்தும் பிறவா தவர். (இ-ள்.) விழுத்திணை – (அற ஒழுக்கங்களைப் பெறுதற்குரிய) சிறந்த குலத்தில், தோன்றாதவனும் – பிறவாதவனும்; எழுத்தினை – இலக்கண நூலை, ஒன்றும் உணராத – எவ்வளவு சிறிதும் அறிந்து கொள்ளாத, ஏழையும் – பேதையும்; என்றும் – எப்பொழுதும்; இறந்து – முறைதப்பி, Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 91

பாடல் – 91 பெறுதிக்கண் பொச்சாந் துரைத்தல் உயிரை இறுதிக்கண் யாமிழந்தோம் என்றல் – மறுவந்து தன்னுடம்பு கன்றுங்கால் நாணுதல் இம்மூன்றும் மன்னா உடம்பின் குறி. (இ-ள்.) உயிரை – (தாய் தந்தைமுதலிய) உயிர்களை, பெறுதிக்கண் – பெற்றவிடத்து, பொச்சாந்து – (பெற்றோர் தமக்குச் செய்த உதவியையும், தாம் அவர்க்குச் செய்ய வேண்டிய உதவியையும்) மறந்து, உரைத்தல் – இகழ்ந்து சொல்லுதலும்; இறுதிக்கண் – அவர் தம் காலமுடிவில், நாம் Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 90

பாடல் – 90 ஈதற்குச் செய்க பொருளை அறநெறி சேர்தற்குச் செய்க பெருநூலை – யாதும் அருள் புரிந்து சொல்லுக சொல்லைஇம் மூன்றும் இருளுலகம் சேராத ஆறு. (இ-ள்.) பொருளை – செல்வத்தை, ஈதற்கு – பிறருக்குக் கொடுக்கும் பொருட்டு, செய்க – தேடக்கடவன்; அறம்நெறி – அறத்தின் வழியில், சேர்தற்கு – சேரும் பொருட்டு, பெரும் நூலைச் செய்க – பெருமையாகிய நூற்பொருளைக் கற்கக் கடவன்; யாதும் சொல்லை Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 89

பாடல் – 89 அருளினை நெஞ்சத் தடைகொடா தானும் பொருளினைத் துவ்வான் புதைத்துவைப் பானும் இறந்தின்னா சொல்லகிற் பானுமிம் மூவர் பிறந்தும் பிறந்திலா தார். (இ-ள்.) அருளினை – அருளை, நெஞ்சத்து – மனத்திடத்து, அடை கொடா தானும் – நிறைத்து வையாதவனும்; பொருளினை – செல்வத்தை, துவ்வான் – (தானும்) நுகராது, புதைத்து – (பிறர்க்குங் கொடாமல்) பூமியில் மறைத்து, வைப்பானும் – வைக்கின்றவனும், இறந்து – தன்னிலை Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 88

பாடல் – 88 பிணிதன்னைத் தின்னுங்கால் தான்வருந்து மாறும் தணிவில் பெருங்கூற் றுயிருண்ணு மாறும் பிணைசெல்வ மாண்பின் றியங்கலிவை மூன்றும் புணையின் நிலைகலக்கும் ஆறு. (இ-ள்.) பிணி – நோயானது, தன்னை – , தின்னுங்கால் – வருத்தும்போது, தான் வருந்தும் ஆறும் – (ஒருவன்) தான் (அதற்கு) வருத்தப்படும் வகையும்; பெருங்கூற்று – பெரிய எமன் உயிர் உண்ணும் ஆறும் – உயிரைக் கொண்டுபோக வருத்தும் வகையும்; பிணை Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 87

பாடல் – 87 கொல்வது தானஞ்சான் வேண்டலும் கல்விக் ககன்ற இனம் புகுவானும் இருந்து விழுநிதி குன்றுவிப் பானுமிம் – மூவர் முழுமக்க ளாகற்பா லார். (இ-ள்.) கொல்வது – (ஒருயிரைக்) கொல்வதற்கு, தான் அஞ்சான் – தான் அஞ்சாதவனாகி, வேண்டலும் – அதனைச் செய்ய விரும்புதலும்; கல்விக்கு -; அகன்ற – நீக்கமாகிய, இனம் – கூட்டத்திலே, புகுவானும் – நுழைகின்றவனும்; இருந்து – (ஒரு முயற்சியும்) செய்யாதவனா Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 86

பாடல் – 86 அற்புப் பெருந்தளை யாப்பு நெகிழ்ந்தொழிதல் கற்புப் பெரும்புணை காதலின் கைவிடுதல் நட்பின் நயநீர்மை நீங்கல் இவைமூன்றும் குற்றந் தரூஉம் பகை. (இ-ள்.) அன்பு பெருந்தளை – அன்பினாலாகிய பெருந்தளையினது, யாப்பு – கட்டு, நெகிழ்ந்து ஒழிதல் – தன்னை விட்டுத் தளர்ந்து நீங்குதலும்; கற்பு – கல்வியாகிய, பெரும்புணை – பெரிய தெப்பத்தை, காதலின் – பொருள் முதலியவற்றின் விருப்பினால், கை விடுதல் – முற்றும் Read more