பெண்மையைப்போற்றுவோம்

மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்பதற்கிணங்க, பெண்கள் தினத்தைப் போற்றும் வகையில்… பாரதத் தாய் ஈன்றெடுத்த பைந்தமிழ் நாட்டின் சீர்மிகு கடலூர் மாவட்டத்தில் பகையில்லா உறவுகளும், புகையில்லா இயற்கை எழிலும் கொஞ்சி மகிழ்ந்திடும் கொழை சாவடிக்குப்பம் எனும் கிராமத்தில், சேற்றில் முளைத்த செந்தாமரையாய் ஏர் முனைப் பிடித்து விவசாயத்தை உயிரெனக் கொண்ட பிலிப்பு – பாப்பம்மாள் தம்பதியர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு குறிஞ்சி மலராய் பிறந்த பி.ஆரோக்கிய Read more

பாவலர் கருமலைத்தமிழாழன்

நேர்காணல்  / மின்னிதழ் இவரில்லாமல் தமிழக மரபுக்கவிதை வரலாற்றை எழுத இயலாது.கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக இலக்கிய உலகில் கவிஞராக வலம்வருபவர். இவருடைய கவிதைகள் பள்ளி கல்லூரி மாணவர்களின் பாடங்களில் வைக்கப் பட்டுள்ளன. மலேசியப் பள்ளிக் கூடங்களிலும் இவரது பாடல் பாடமாக உள்ளது. தமிழாசான் தலைமை ஆசானாகப் பணி செய்து ஓய்வு பெற்ற தமிழ்ச்செம்மல். எண்ணற்ற நூல்களை எழுதியவர்.நரேந்திரன் என்ற தனது இயற்பெயரை கருமலைத்தமிழாழன் என்று மாற்றிக் கொண்ட ஐயா Read more

அன்பு வானொலி – காற்றோடுக் கவிதைகள்

சத்தமில்லாச் சந்தங்கள் சொல்லத் தேனூரும் செல்லத் தமிழ் வாரி மெல்லத் தெளிப்போம் – நாம் அள்ளி உலகிற்கே..! சீரெழில் மொழியோர்க்கு ஜெயலட்சுமியின் செந்தமிழ் வணக்கங்கள் இளங்கலை வரலாறு முடித்துவிட்டு குடும்ப நலன்களை கவனித்துவரும் சராசரி பெண்க நான். மனிதப் புழக்கம் அதிகமில்லா தனிமையில் என்னுடைய வாழ்வு கழிகிறது. துணையாக கைகோர்க்க தமிழையே தேர்வு செய்தேன் . அழகுத் தமிழின் கரம் பிடித்தலென்பது அளவிற்கறிய இன்பம் தானே நானும் மெதுவாய் நடைபயிலக் Read more

பூபாளம் பாடும் பரணி

நேர்காணல்  / மின்னிதழ் தினமும் தவறாமல் முகநூலில் இவரது கவிதை வரும். கடந்த 1100 நாட்களாகத் தொடர்ந்து முகநூலில் தினமும் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கெல்லாம் அன்றைய நாளை வரவேற்றுக் கவிதைபாடுபவர். 1000 நாட்களுக்கு மேல் கவிதை எழுதியதற்காக சாதனையாளர் விருதைப் பெற்றவர். மத்திய அரசுப் பணியில் இருந்த போதும் ஓய்வின்றி ஒருநாளும் தவறாது பூபாளம் பாடிய பரணி இவர். ஆம் பரணி சுப சேகர் என்ற கவிஞரைத் தெரியாதர் இருக்க Read more

அகவை முதிர்ந்த இளந்தென்றல்

மின்னிதழ் / நேர்காணல் சந்திப்பு : பாவலர்மணி இராம வேல்முருகன் கவியுலகில், திரையுலகில், தமிழுலகில் ஒரு அசைக்க முடியாத இடத்தைப் பெற்றவர் கவியரசு கண்ணதாசர் என்பதை அனைவரும் அறிவோம். அவருடைய பாடல்கள் பாமரனுக்கும் புரியும் வண்ணம் மிகவும் எளிமையாக அதேநேரத்தில் சங்க இலக்கியத்துக்குச் சற்றும் குறையாத தரத்துடன் இருக்கும். அத்தகைய உணர்வை, இன்பத்தை நமக்கு இப்போது ஒருவரின் கவிதை வழங்குமேயானால் அது இவரது கவிதைதான்.இவரது எந்தவொரு கவிதையை நாம் படித்தாலும் Read more

மயிலாடுதுறையில் ஓர் இனிக்கும் தமிழர்

மின்னிதழ் / நேர்காணல் நேர்கண்டவர் பாவலர்மணி இராம வேல்முருகன் தமிழ் தன்னைத் தானே வளர்த்துக் கொள்ளத் தகுதியுள்ள யாரை யாவது தத்தெடுத்துக் கொள்கிறது. தமிழைக் கற்றுத் தேர்ந்து தமிழால் தனது வாழ்க்கையை நடத்துபவர்களைவிட தமிழை வளர்ப்பவர்கள் பெரும்பாலும் தமிழைக் கற்காத வர்கள் என்றால் அது மிகையல்ல. தமிழால் வளர்பவர்களைவிட தொடக்கக் கல்வியைக்கூட நிறைவுசெய்யாத ஒரு வரைத் தமிழ் தெரிவுசெய்து கொண்டது வியப்புக்குரியதே. சிறுவயதில் மேடைப் பேச்சுகளைக் கேட்டதாலும் திரைப்பட வசனங்களை Read more

வெய்யோனின் வேந்தன்

இராமாயணம் வாசித்தவர்கள் அதில் பல காண்டங்கள் இருப்பதை உணர்ந்திருப்பீர்… அது போல இந்த இராவண காவியத் தில் மூன்று காண்டங்கள் தமிழ்போல. த = தன்னிகரில்லா தமிழ்வேந்தனைப் பற்றி முதல் பகுதியிலிருந்து ஆரம்பிக்கின் றார் எழுத்தாளர் ஸ்ரீமதி. இராவணணைப் பற்றி இதுகாரம் பல புதினங்கள் வந்திருக்கின்றன குறிப்பாகச் சொன்னால் அசுரகாவியம் (வீழ்த்தப் பட்டவர்களின் வீர வரலாறு) அதையும் நான் வாசித்திருக்கிறேன். ஆனால் இக்காவியம் இராவணணைப் பற்றிய உண்மையான வரலாறாக நான் Read more

காங்கோவில் தமிழர் கிரிஜாவின் கல்விச்சேவை

தமிழ்நெஞ்சம் அயலக தமிழ் உறவாகக் காங்கோ மக்களாட்சிக் குடியரசு நாட்டின் தலைநகர் கின்சாசாவில் செயல்பட்டு வரும் EIS (ஈ.ஐ.எஸ்) பள்ளியின் தாளாளர்கள் திரு.கண்ணன் – திருமதி.கிரிஜா கண்ணன் இணையரைத் தொடர்பு கொண்டோம். வாருங்கள் இந்த தமிழ் உறவுகளை அறிந்து கொள்வோம். இவர்கள் கடந்த 26 ஆண்டுகளாக ‘‘இங்கிலீஷ் இன்டர்நேஷனல் ஸ்கூல்’’ என்ற பள்ளியின் மூலம் ஆங்கில வழிக்கல்வியை போதித்து கொண்டு வருகிறார்கள். இதில் சிறப்பு என்னவென்றால், பிரெஞ்சு மொழி அலுவல் Read more

அமைதிப்பூங்கா இராணிலட்சுமி

மின்னிதழ் / நேர்காணல் சுதந்திரப் போராட்டக் களத்தில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட வீரமங்கையின் பெயரைத்தாங்கிய மங்கை. குழந்தைத் தொழிலாளர்களையும் கொத்தடிமைகளையும் மீட்டு அவர்களுக்குப் புதியதொரு வாழ்க்கைக்கு வழிகாட்டும் அரசு ஊழியர். தொழிலாளர்நலத்துறையில் அலுவலர். தமிழை விரும்பிப் படித்து முதுகலைப் பட்டம் பெற்று மரபுக்கவிதைகளை யாக்கும் திறன் பெற்ற கவிஞர். ஏழைகளுக்கு அன்னமிடும் அன்னலட்சுமி. முகநூல்குழுமங்களை நேசிக்கும் புரவலர். இப்படிப்பட்ட பன்முகத் திறன் கொண்ட சகோதரி திருமதி இராணிலட்சுமி அவர்களைத்தான் நாம் Read more