வா வா கண்ணா…

வான்முகில் நிறத்தோய்; கேட்க
          வரம்பல ஈவோய்; தொங்குந்
தார்குழல் காற்ற சைக்கத்
          தாவணி இழுப்போய் ஊதுஞ்
சீர்குழல் ஓசை தன்னில்
          சிந்தையில் கலப்போய் ராதை
கூர்விழி சிக்கும் நேரம்
          குறும்புகள் செய்வோய் வாவா..

நஞ்சினால் மாறும் வண்ணம்
          நால்திசை ஆழி யாகிக்
கஞ்சமுங் காத லிக்கும்
          கனிவுடை எழிலோ சுற்றி
கொஞ்சிடுங் கோபி யர்கள்
          கோர்த்துனை ஓடி ஆடித்
துஞ்சிடும் வியப்பைத் தாருந்
          தூயதோர் அருளோ சொல்லாய்..

எண்ணமே உன்னை எண்ணி
          இவனுமோர் ராதை ஆனேன்
கன்னமே கிள்ளிப் பார்க்கக்
          கனிவுடன் வாவா கண்ணா
கண்துளை மூங்கில் ஆகிக்
          காதலே உன்மேல் கொண்டேன்
என்துயர் தீர்க்கும் வண்ணம்
          இதயமும் தாங்க வாவா..

பெண்துகில் உரிந்த நேரம்
          பேதமை பாரா தங்கே
முன்னருள் செய்தே காத்த
          மூச்செனும் பார்த்தா உன்னை
என்துகில் கொண்டே நாளும்
          இறக்கமே வாழ்வென் றானேன்
கண்துயில் போதும் என்னை
          காத்திட வாவா கண்ணா..

மண்ணுள வாயில் இந்த
          மாபெரும் அண்டங் கொண்டும்
என்னுளம் அதற்குள் உண்டு
          இதையுமே கொஞ்சம் பாராய்
உன்னுளம் இனிக்கும் வண்ணம்
          ஓதுவேன் பாடல் நூறு
பொன்னுளத் தானே வாவா
          பொழுதெலாம் காத்தேன் வாவா..

ஏடி வரதராசன்

பிப்வரி 2020 தமிழ்நெஞ்சம் முகப்புப் படத்தை க்ளிக் செய்து இதழை தரவிறக்கம் (download) செய்துப் படிக்கலாம்!

தமிழ்நெஞ்சம் - மார்ச் -2020

மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும், மற்றும்இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!


5 Comments

Vijirkrishnan · மார்ச் 6, 2020 at 5 h 17 min

இதழின் ஒவ்வொரு பக்கமும் அசத்தல்

ஹ.ரெங்கபார்வதி · மார்ச் 6, 2020 at 7 h 38 min

அருமையான மின்னிதழ் படைப்பு,வாழ்த்துகள்

Swarnam Meenakshi nathan · மார்ச் 6, 2020 at 9 h 59 min

அருமை

கோகிலா · மார்ச் 6, 2020 at 11 h 24 min

அழகான வடிவமைப்போடு ! பலரதும் திறன்களை எம்முன் கொண்டுவந்து அளிக்கின்றது இவ்விதழ். அழகு, சிறப்பு !

பாரதி பத்மாவதி · மே 11, 2020 at 6 h 41 min

உலகளாவிய ஹைக்கூ கவிஞர்களின் கைவண்ணத்தில் ஹைக்கூ 2020 மிகச் சிறப்பான புத்தகமாக வெளிவந்திருக்கிறது. வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கியதில் மிகப் பெருமை அடைகிறேன் உலக கவிஞர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

ஏற்றம் தரும் எண்ணங்கள் – எழுத்தாளர் சி.சுரேஷ்

எழுத்தாளர் கவிமுகில் சுரேஷ் அவர்களுடன் தருமபுரி பண்பலை 102.5 சார்பாக ஒளிபரப்பு அலுவலர் எஸ் கோபாலகிருஷ்ணன் அவர்கள் நேர்காணல் செய்கிறார். நேயர்களுக்கு வணக்கம் பொதுவாக புத்தகங்கள் என்பது ஒரு மனிதனை செழுமைப்படுத்துவதற்கும் அவரோட வார்த்தையோட உண்மையான அர்த்தத்தை தெரிந்து கொள்வதற்கும் நம்மளோட அறிவை விரிவு படுத்துவதற்கும் அனுபவத்தை உண்மையான அனுபவங்களில் இருந்து நிறைய விஷயங்களை தெரிந்து கொள்வதற்கும் பயன்படுகிறது அப்படிப்பட்ட சூழ்நிலையில் நம்முடைய தருமபுரியை சேர்ந்த பல புத்தகங்களை படைத்த ஒரு படைப்பாளி நம்ம கூட இருக்கிறார் கவிதைகளை வடித்துக் கொண்டிருக்கிறார் அவர வந்து இன்னைக்கு நிகழ்ச்சிகள்ல சந்திக்க இருக்கிறோம்.

மின்னிதழ்

கரிசல்காட்டுக் கவிதைச்சாரல்

மின்னிதழ் / நேர்காணல் கரிசல்காட்டுக் கவிதைச்சாரல்

கரிசல்காட்டு மண்ணில் பிறந்து ஏதுமறியாத பெண்ணாக வளர்ந்து திருமணமாகி இனிமையான திருமண வாழ்க்கை சென்றுகொண்டிருந்தபோது கணவரின் எதிர்பாரா மரணம் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டாலும் தனது விடாமுயற்சியாலும் தளராத தன்னம்பிக்கையாலும் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி தனது மகனைத் தன் கணவர் ஆற்றிய காவல்துறைப்பணிக்கே அனுப்பி,

 » Read more about: கரிசல்காட்டுக் கவிதைச்சாரல்  »

மின்னிதழ்

தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா

மின்னிதழ் / நேர்காணல்  தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா

தமிழ்நெஞ்சம் சஞ்சிகைக்கான நேர்காணலில் எம்மோடு இணைந்திருப்பவர் ஓர் எழுத்தாளர், நூல் விமர்சகர், பாடலாசிரியர், இலக்கியச் செயற்பாட்டாளர், சமூக ஆர்வலர் எனப் பல துறைகளில் மிளிரும்,

 » Read more about: தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா  »