பாடல் – 86

அற்புப் பெருந்தளை யாப்பு நெகிழ்ந்தொழிதல்
கற்புப் பெரும்புணை காதலின் கைவிடுதல்
நட்பின் நயநீர்மை நீங்கல் இவைமூன்றும்
குற்றந் தரூஉம் பகை.

(இ-ள்.) அன்பு பெருந்தளை – அன்பினாலாகிய பெருந்தளையினது, யாப்பு – கட்டு, நெகிழ்ந்து ஒழிதல் – தன்னை விட்டுத் தளர்ந்து நீங்குதலும்; கற்பு – கல்வியாகிய, பெரும்புணை – பெரிய தெப்பத்தை, காதலின் – பொருள் முதலியவற்றின் விருப்பினால், கை விடுதல் – முற்றும் விட்டுவிடுதலும்; நட்பின் – ஒருவரிடத்தில் வைத்த நட்பினால், நயம் நீர்மை – நீதித் தன்மையினின்று, நீங்கல் – நீங்குதலும், இவை மூன்றும் – ஆகிய இவை மூன்றும், குற்றம் தரூஉம் – (ஒருவனுக்குக்) குற்றங்களை விளைக்கின்ற, பகை – பகைகளாம்; (எ-று.)

(க-ரை.) உயிரிடத்தில் அன்பற்றிருப்பதும், பொருட்பற்றால் கல்வியை விடுதலும்; நட்பினால் ஒருபாற் கோடுதலும் பகைபோற் குற்றந் தருவன என்பது.

அற்புத் தளை : மூன்றும் வேற்றுமை உருபும் பயனுமுடன்றொக்க தொகை; அன்பாகிய தளையெனின் பண்புத்தொகையாம். தளை : முதனிலைத் தொழிலாகு பெயர். கல்வி, ஒருவனை அறிவு நூல்களை யுணர்ந்து பொருளியலறிந்து பிறவிக் கடலைக் கடந்து வீடுபெறச் செய்வதால், பெரும்புணை யென உருவகிக்கப் பட்டது. குற்றம் – இருமைப் பயனு மிழத்தல் – தரூஉம் : செய்யுளிசைநிறை யளபெடை.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20

வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.

இது 3 ஆவது பாவகை

மாமுன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர் இவை வெண்பா

நேர்முன்நேர்
நிரைமுன் நிரை
நேர் முன் நிரை
நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா

ஆனால் கலிப்பாவில்

காய்முன் நிரை வரும்
அதாவது கலித்தளை மிகுந்து வரும்
மற்ற தளைகள் குறைந்து வரலாம்
புளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்
கனிச்சீர்கள் வாரா
அளவடிகளால் ஆனது

கலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 20  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 19

தொடர் 19

வெண்பாதான் கடினம் என்று புலவர்கள் சொல்வதுண்டு. வெண்பாவில் சிறப்பாக எழுதுபவர்களை வெண்பாப் புலி என்றும் அழைக்கப்படுவார்கள். நிறைய தமிழ் நூல்கள் வெண்பாவில் புனையப் பட்டுள்ளன. நீங்களும் இப்போது வெண்பா எழுத முற்பட்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 19  »