பாடல் – 83

உப்பின் பெருங்குப்பை நீர்படியின் இல்லாகும்
நட்பின் கொழுமுளை பொய்வழங்கின் இல்லாகும்
செப்பம் உடையார் மழையனையர் இம்மூன்றும்
செப்ப நெறிதூரா வாறு.

(இ-ள்.) உப்பின் – உப்பினது, பெருங்குப்பை – பெரிய குவியல், நீர் படியின் – தன்னில் நீர் படிந்தால், இல் ஆகும் – இல்லாமற் போகும்; நட்பின் கொழுமுளை – நட்பினது செழித்த முளையானது, பொய் வழங்கின் – பொய்யாகிய நெருப்பைப் பெய்தால், இல் ஆகும் – அழிந்துபோம்; செப்பம் உடையார் – நடுவுநிலைமையுடையார், மழை அனையர் – மழை போல எல்லார்க்கும் ஒப்ப உபகரிப்பார்; இ மூன்றும் – நீர் படியாமையும் பொய் வழங்காமையும் மழையை ஒத்தலும் ஆகிய மூன்றும், செப்பநெறி – நல்வழியை, தூரா ஆறு – தூராமைக்குக் காரணமாகிய சாதனங்களாம்; (எ-று.)

(க-ரை.) உப்பின் குவியல் நீர் படியாமையும், நட்பினர் பொய் வழங்காமையும், மழையனையார் செப்பமுடைமையும் நல்வழியைக் கெடுக்கா முறைகள் என்பது.

படியின் : வினையெச்சம். படிதல் – தோய்தல், பொருந்தல், செப்பம் இரண்டனுள் முன்னது பண்பாகுபெயர்; பின்னது பண்புப் பெயர்.

முன் பக்கம் செல்ல…    தொடரும்

 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20

வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.

இது 3 ஆவது பாவகை

மாமுன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர் இவை வெண்பா

நேர்முன்நேர்
நிரைமுன் நிரை
நேர் முன் நிரை
நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா

ஆனால் கலிப்பாவில்

காய்முன் நிரை வரும்
அதாவது கலித்தளை மிகுந்து வரும்
மற்ற தளைகள் குறைந்து வரலாம்
புளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்
கனிச்சீர்கள் வாரா
அளவடிகளால் ஆனது

கலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 20  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 19

தொடர் 19

வெண்பாதான் கடினம் என்று புலவர்கள் சொல்வதுண்டு. வெண்பாவில் சிறப்பாக எழுதுபவர்களை வெண்பாப் புலி என்றும் அழைக்கப்படுவார்கள். நிறைய தமிழ் நூல்கள் வெண்பாவில் புனையப் பட்டுள்ளன. நீங்களும் இப்போது வெண்பா எழுத முற்பட்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 19  »